Jump to content

நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு..


Recommended Posts

நீயெல்லாம் ஹீரோயினா.. வேற வேலை இருந்தா பாரு.. உதாசீனங்களைத் தாண்டி வென்ற நடிகை!

ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய நிறத்தையும், தான் தமிழ் மொழி பேசுவதாலும் பல இடங்களில் நிராகரிக்க பட்டதாக ஒரு கல்லூரியில் தான் நடிகையானதற்கு பின் உள்ள போராட்டங்களை பற்றி பகிர்ந்து கொண்டார் நடிகை Aishwarya Rajesh.

காக்கா முட்டை, கானா போன்ற வெற்றி படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இப்போது தமிழ் மட்டுமல்லாது இப்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் இப்போது க/பெ ரணசிங்கம் என்ற படத்தில் ஹீரோவிற்கு சமமாக பஞ்ச் டயலாக் பேசிய படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சாதாரணக்குடும்பத்து பெண் குப்பத்துல இருக்குற ஒரு ஹௌசிங் போர்டுல பிறந்து வளர்ந்த லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு தான் நான். என்னுடைய வீட்டில் நாங்க மொத்தம் ஆறு பேரு, அம்மா, அப்பா, 3 அண்ணன்கள் அப்புறம் நான். நான் தான் கடைசி பொண்ணு எனக்கு 8 வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாரு, அதுக்கப்புறம் எங்க அம்மா தான் ஒரு தனி ஆளா வேலைக்கு போய் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வெச்சாங்க. ஆனா அம்மா ஏதும் பெருசா படிச்சதில்ல ஆனால் எங்களை காப்பாத்த அவ்வளவு கஷ்டப்பட்டாங்க. முதல்ல எங்க அம்மாவ பத்தி நான் சொல்லிடுறேன் என்றார்.

அம்மா எல்.ஐ.சி ஏஜெண்ட் அப்பா இறந்ததுக்கு அப்புறம் அம்மா எங்களை காப்பாத்த மும்பைக்கு போயி மொத்தமா புடவையெல்லாம் வாங்கிட்டு வந்து சென்னைல வீடுவீடா போய் விப்பாங்க. அதுக்கப்புறம் எல்.ஐ.சி ஏஜெண்டா இருந்தாங்க, இப்போ கூட என் கூட நடிக்கிறவங்களை யாராச்சும் பார்த்தா அவங்ககிட்ட போயி ஒரு எல்.ஐ.சி பாலிஸி போடுறீங்களானு அம்மா கேப்பாங்க.

அடுத்தடுத்த இழப்பு எனக்கு ஒரு 12 வயசு இருக்கும் என்னுடைய மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்துட்டார். அண்ணன் இறந்தது தற்கொலையா கொலையானு கூட எங்களுக்கு இன்னும் தெரியலை. அப்போ அவர் ஒரு பெண்ணை காதலிச்சாரு. இன்னொரு அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு முடிச்சிட்டு கைநிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சார், அவரும் கொஞ்ச நாள்லயே ஒரு ரோடு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு. அம்மா அப்படியே இடிஞ்சி போய்ட்டாங்க .

அம்மா தந்த அட்வைஸ் இப்படி எங்க வாழ்க்கைல கஷ்டத்துக்கு மேல கஷ்டம் வந்துட்டு இருந்துச்சி. அதுக்கப்புறம் நானும் சின்ன வேலைக்கு போக ஆரம்பிச்சேன். நான் பார்த்த முதல் வேலை சூப்பர் மார்க்கெட் முன்னாடி சாக்லேட் ப்ரோமோஷன் அதுக்கு அவங்க 225 ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க, சீரியல்ல நடிக்க போயிருக்கேன் அப்போ ஒரு நாளைக்கு 1,500 ரூபா குடுத்தாங்க ஆனா அதுவும் மாசத்துல ஆறு நாட்கள் தான் வேலை இருக்கும். சீரியல்ல லீட் ரோல் பண்றவங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குதுமா நான் ஏன் பண்ணக்கூடாதுனு கேட்டேன். அதுக்கு அம்மா தான் சினிமால நடிச்சா அதைவிட அதிகமா சம்பளம் கிடைக்கும். அதுவும் நாம நடிச்ச படம் நல்ல ஓடனும்னு சொன்னாங்க.

நான் படங்கள்ல நடிக்க வாய்ப்புத்தேடுனேன், அப்போ பல இயக்குனர்கள் என்னை உதாசீனப்படுத்துனாங்க. சிலர் என்னை நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, போய் வேற வேலை இருந்தா பாருங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என, என் லுக், நிறம், பர்சனாலிட்டினு என் மேல நிறைய விமர்சனம் வெச்சாங்க. அப்புறம் எனக்கு "அவர்களும் இவர்களும்" படத்துல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது. பின் இயக்குனர் ரஞ்சித் சார் படத்துல அமுதாங்கிற சின்ன கேரக்டர்ல நடிச்சேன் அது ரொம்ப சின்ன ரோல் தான் ஆனா அது தான் என்ன மக்கள் கிட்ட என்னை கொஞ்சம் கொண்டு போய் சேத்துச்சி. அதுக்கப்புறம் வந்த வாய்ப்புகள் தான் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் படங்கள்லாம்.

இப்படி போயிட்டு இருந்த என் வாழ்க்கை இயக்குனர் மணிகண்டன் இயக்கிய "காக்கா முட்டை" படம் தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையா அமைந்தது. அந்த படத்துல நான் ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிச்சிருப்பேன். அந்த கதையில ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிக்கனும்னு நிறைய பேர் அந்த ரோல்க்கு யாரும் நடிக்க வரலை. எனக்கு அந்த கதை ரொம்ப புடிச்சிருந்துச்சி அதனால நான் நடிக்க ஒத்துக்கிட்டேன். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பெரிய பெரிய டைரக்டர்ஸ், ஜாம்பவான்கள் எல்லோரும் பாராட்டினாங்க. ஆனா அதுக்கப்புறம் எனக்கு படவாய்ப்பு ஏதும் வரல, அதுதான் ஏன்னு புரியல! வடசென்னைல தனுஷ், தர்மதுரைல விஜய்சேதுபதினு ஒரு சிலர் தான் என் திறமைய பாத்து வாய்ப்பு கொடுத்தாங்க.

பல படங்களில் நடித்து சரியான அங்கீகாரம் இல்லாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது கனா படம் தான். அதற்கு நான் அருண்ராஜ் காமராஜாவிற்கு எனது நன்றியை எவ்வளவு சொன்னாலும் பத்தாது என தனது நன்றியை அந்த அப்படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் அருண்ராஜ் காமராஜாவிற்கு தெரிவித்தார்.

நாம் எந்த வேலையை செய்தாலும் அதை முழு மூச்சுடன் யார் என்ன சொன்னாலும் மனம் தளராமல் செய்தால் நமக்கான அங்கீகாரம் ஒரு நாள் கட்டாயம் கிடைக்கும் என்பதற்கு ஐஸ்வர்யா ரஜேஷ் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

 

 

Fb 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அப்பாவும், அப்பப்பாவும், அத்தையும் சினீமத் துறையி நடிகர்கள் என்பதை சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். 

அப்படி இருந்தாலும், அவருக்கு தடைகள் வந்ததும், அதை தாண்டியதும் பாராட்டவும், வாழ்த்தவும் வேண்டும்.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

மன்னிக்கவும் கவனிக்கவில்லை

இதுக்கெல்லாமா? நான் பலதடவை இணைத்துள்ளேன் மீண்டும் மீண்டும் நிர்வாகத்திற்கு நல்ல மனமென்றபடியால் நீக்கிவிட்டார்கள். ஒரு செய்தி தொடருக்காகதான் மேலே இணைத்தேன் மீண்டும்.

நல்ல நடிகை, இன்னும் வளரனும் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல: ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

aishwarya-rajesh-advice

 

வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல என்று ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ் செய்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் 'க/பெ ரணசிங்கம்', 'திட்டம் இரண்டு', 'துருவ நட்சத்திரம்', 'இடம் பொருள் ஏவல்' மற்றும் தெலுங்கில் 'டக் ஜெகதீஷ்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


தற்போது கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணிகளும் இல்லாமல் வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த கரோனா காலத்தில் டெட் எக்ஸில் ஆற்றிய உரையை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு அவரது பெண் ரசிகை ஒருவர் "ஹாய் அக்கா நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. திருப்பூரில் இருக்கும் நான் உங்களுக்காக உயிரைக் கூட விடுவேன்.. உங்களை மிகவும் நேசிக்கிறேன்.. உங்கள் நடிப்பு மிக அருமை.. இவ்வுலகத்துக்கு நீங்கள் ஒரு அடையாளம்.. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அக்கா. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அக்கா" என்று கருத்து தெரிவித்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் "மிக்க நன்றி.. ஆனால் இது போன்ற வார்த்தைகளை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல.. எப்போதும் அந்த வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.. உங்களைப் போன்ற ரசிகை கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆனா நான் எப்போதும் உங்களுக்கு தோழியாக இருப்பேன். இனி மீண்டும் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்தால்.." என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/558988-aishwarya-rajesh-advice-1.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.