Jump to content

போருக்குத் தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு கட்டளை


Recommended Posts

உலகமே கொரோனாவால் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீன  ஜனாதிபதி ஜி ஜின்பிங் போருக்குத் தயார் நிலையில் இருக்கும்படி தனது இராணுவத்தினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மூன்றரை இலட்சம் பேரை பலி கொண்டுள்ள கொரோனா வைரசுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்கா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான சொற்போர் வலுத்துள்ளது.

இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது.

இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை.

கொரோனா வைரசால் உலகமே ஆடிப்போயிருக்கும் நிலையிலும் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி சீன ஜனாதிபதி ஜின்பிங் கட்டளையிட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி மக்கள் விடுதலை இராணுவத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போது இராணுவத்தை பலப்படுத்தி போருக்குத் தயாராக இருக்கும்படி கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/82834

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா ஹிந்தியாவை பல வழிகளிலும் நாசம் பண்ண கணக்குப் போட்டுத்தான் செயற்படுகிறது போல் தெரிகிறது. போர் வருதோ இல்லையோ.. கொரோனாவால்.. பொருண்மிய ரீதியில் அதளபாதளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஹிந்தியாவுக்கு சீனா நிச்சயம் ஒரு உச்சந்தலை சம்மட்டி அடி கொடுக்கும். 

பிராந்தியத்தில் சீனாவுக்கு ஏட்டிக்குப்போட்டியான ஹிந்தியாவின் நகர்வுகளை கவனித்த பின் கொரோனா பாதிப்பின் விளைவையும் கணக்குப் பண்ணி சீனா நகர்த்தும் காய் நகர்த்தலே இது.

மோடி மாமா உள்வீட்டிலையே சுரண்டிப் பெயின்ட் அடிக்க வேண்டியான். சீனா ஹிந்தியாவைச் சுரண்டி உலகுக்கே பெயின்ட் அடிக்கப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

34 minutes ago, ampanai said:

இன்னொரு புறம் இந்திய எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்திருப்பதால் இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்து வருகிறது.

இதனால் லடாக் எல்லைக் கோடு அருகே கடந்த 22 நாட்களாக பதற்றநிலை நீடித்து வருகிறது. சீனப்படைகளும் இதுவரை பின்வாங்குவதாக தெரியவில்லை.

👍..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே கொறொனாவால் உலகு பெரும் பொருண்மிய நெருக்கடியை சந்தித்துவரும் சூழலில் மும்முனை யுத்தமேகம் சீனாவின் தரை மற்றும் கடல்வழியாக நகர்வதுபோல் தோன்றுகிறது. யுத்தம் நடந்தால் தற்போதிருக்கும்  உலகத்தின் தளம்பல் நிலையில் மேலதிக வீச்சாக மேலுமொரு பொருண்மியத் தாழ்வுநிலை உலகை உலுப்பலாம். இது தேவையா என்பதை நாடுகள் சிந்திக்க வேண்டும். 

இவர்கள் முவரிடமும் ஒரு வினா. அதாவது  தேசத்தைப் பறித்தெடுக்க முனைவதைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்  என்றால்  நீங்கள் செய்வது என்ன? இன்னொரு நாட்டை, வளங்களை ஆக்கிரமிப்பது பயங்கரவாதமில்லையா? ஏறக்குறைய ISIS போல் நடக்க முயல்வது எப்படி பயங்கரவாதமில்லையென்று  கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்ட பின்னராக, அதன் வெளிவிவகார கொள்கையில் நீண்ட கால அடிப்படையில் சீனா ஒரு எதிரியாக நிச்சயமாக பார்க்கப்படும்.

சீனாவின் முன்னைய தலைவர் அதை ஒரு பொருளாதார வல்லரசாக மாற்ற திட்டங்களை போட்டார். அந்த வெற்றியில், தற்போதைய சீன கம்னியூஸ்ட்  ஆட்சியாளர்கள், தங்களை முதலில் ஆசியாவிலும் பின்னர் உலகிலும் வல்லரசாக முயன்று வருகின்றனர். 

இடையில் வந்தது/உருவாக்கப்பட்டது கோவிட் 19. எதுவானாலும், அது சீனாவின் திட்டங்களில் சடுதியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சீனா, தான் முன் வைத்த காலை பின் வைக்க தயாரில்லை - ஆசியாவில் ஒரு வல்லரசே இருக்க முடியும். 

இந்தியா தான் அதை ஒன்றில் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை .....     

Link to comment
Share on other sites

6 hours ago, nochchi said:

இவர்கள் முவரிடமும் ஒரு வினா. அதாவது  தேசத்தைப் பறித்தெடுக்க முனைவதைத் தடுக்கவும், மக்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்துவது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்  என்றால்  நீங்கள் செய்வது என்ன? இன்னொரு நாட்டை, வளங்களை ஆக்கிரமிப்பது பயங்கரவாதமில்லையா? ஏறக்குறைய ISIS போல் நடக்க முயல்வது எப்படி பயங்கரவாதமில்லையென்று  கூறமுடியுமா?

வளங்கள் என பார்க்கும் பொழுது தென் சீன கடல், ஆர்டிக் இந்த இரண்டிலும் வல்லாதிக்க நாடுகள் போட்டி இடுகின்றன. 

சீனாவின் குறியாக இருக்கும் வளம் - அமெரிக்க டாலர். அதனை உலகின் வர்த்தகத்தில் முதன்மை இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.