Jump to content

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம்

01-14.jpg?189db0&189db0

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது.

ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் தற்போது நன்னீர் மீன் பிடியானது கோட்டைக்கல்லாறு ஆறு, கல்லாறு ஆறு, மட்டக்களப்பு ஆறு, கொக்கட்டிச்சோலை ஆறு, வாழைச்சேனை ஆறு உட்பட்ட பல ஆறுகள் மற்றும் பல குளங்கள் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகின்றது.

இதில் கோல்டன் மீன், செப்பலி, கணையான், கொய் கொடுவா, கெண்டை விரால், சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன், இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வீச்சு வலை மற்றும் மீன் கூடுகள் மூலம் தற்போது மீன்கள் பிடிபடுவது குறைவாகவே காணப்படுகின்றது. பல மணிநேரங்கள் சென்ற பின்னரே மீன்கள் பிடிபடுவதுடன், அதுவும் குறைவாகவே பிடிபடுகின்றது. (150)

  • 01-14.jpg?189db0&189db0
  • 01-12.jpg?189db0&189db0
  • 01-3-6.jpg?189db0&189db0
  • 01-1-3.jpg?189db0&189db0
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் 

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

இந்த இடத்தை பெயரளவில் தெரியும்.

திலப்பியா மட்டுமா கிடைக்கும்?

cat fish  (கடல் கெளிறு மீன் போன்ற தோற்றம்), ஆனால் கெளிறு மீன்னின்  வெடுக்கு இல்லை.

விரால், கெண்டை கிடைக்குமா?

நன்னீர் மீன்கள்  யாழில் விற்றகப்படுவது வெகு அருமை, ஏனெனில் அவை பொதுவாக விரும்பப்படுவதில்லை இல்லை.

மேற்கு வந்து மிகவும் குறுகிய காலத்தில் சமைக்க தொடங்கிய போது தான்  எனக்குப் புரிந்தது, யாழில், பொதுவாக வடமாகாணத்தில் உள்ளோருக்கு நன்னீர் மீன்களை எப்படி சமைப்பது என்று தெரியாது.  

இப்பொது எப்படியோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

இந்த இடத்தை பெயரளவில் தெரியும்.

திலப்பியா மட்டுமா கிடைக்கும்?

cat fish  (கடல் கெளிறு மீன் போன்ற தோற்றம்), ஆனால் கெளிறு மீன்னின்  வெடுக்கு இல்லை.

விரால், கெண்டை கிடைக்குமா?

நன்னீர் மீன்கள்  யாழில் விற்றகப்படுவது வெகு அருமை, ஏனெனில் அவை பொதுவாக விரும்பப்படுவதில்லை இல்லை.

மேற்கு வந்து மிகவும் குறுகிய காலத்தில் சமைக்க தொடங்கிய போது தான்  எனக்குப் புரிந்தது, யாழில், பொதுவாக வடமாகாணத்தில் உள்ளோருக்கு நன்னீர் மீன்களை எப்படி சமைப்பது என்று தெரியாது.  

இப்பொது எப்படியோ தெரியாது.

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம்,

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

Link to comment
Share on other sites

13 minutes ago, Kadancha said:

பொதுவாக வடமாகாணத்தில் உள்ளோருக்கு நன்னீர் மீன்களை எப்படி சமைப்பது என்று தெரியாது.  

கடல் மீன்களைவிடவும் நன்னீர் மீன்களில் மணம் அதிகமாக இருக்கும், அதனை வெடுக்கு என்று சொல்வார்கள். அதனால் அதனைச் சமைப்பது அரிது. அதுமட்டுமல்ல அங்கு சைவர்கள் அதிகம். மாமிசம் உண்ணவிரும்பும் சைவர்கள், பிறர் அறியாமல் உண்பதில் வல்லவர்கள். நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

மிகவும் உண்மை. 
என்னுடைய அப்பம்மா வெளிப்படடையாக சொல்லுவார். குளம், ஆற்று மீன்கள் தாழ்ந்தவர்கள் (சாதியைச் சொல்லியும்) வாங்குவது என்று.

ஆனால்  அப்பா, அம்மா சொல்லுவது கிடையாது, குளம், ஆற்று மீன்கள் வாங்குவதை விரும்புவது இல்லை.

கடல் கெளிறு கூட வாங்குவது, ஊரில் ஓர் விதமாக பார்க்கப்படும். வேறு கடல் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் அருமையாக வாங்கப்படும், பொதுவாக தவிர்க்கப்படும்.

எனது வீட்டில் வியாழன், வெள்ளி, மற்றும் விரதங்கள், திருவிழாக்கள் தவிர, பொதுவாக மீன் தவிர்க்கப்பட முடியாத உணவு .

27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

எங்கிருந்து கருவாடாக வருகிறது. 
கிழக்கில் உடனடி நன்னீர் மீன்கள் கிடைப்பது இல்லையா?  

13 minutes ago, Paanch said:

நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

எப்படி சமைப்பது என்பது தெரியாது.

உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

கடல் மீன்களைவிடவும் நன்னீர் மீன்களில் மணம் அதிகமாக இருக்கும், அதனை வெடுக்கு என்று சொல்வார்கள். அதனால் அதனைச் சமைப்பது அரிது. அதுமட்டுமல்ல அங்கு சைவர்கள் அதிகம். மாமிசம் உண்ணவிரும்பும் சைவர்கள், பிறர் அறியாமல் உண்பதில் வல்லவர்கள். நன்னீர் மீன்களைச் சமைத்தால் அதன் வெடுக்கு அக்கம் பக்கமெல்லாம் காட்டிக் கொடுத்துவிடும்.

மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா. ஜப்பான் மீன் அந்த மாதிரி சுவை, பொரித்து சாப்பிட 

39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் அப்படித்தான் அங்கிருந்துதான் கருவாடாக வருகிறது தற்போது முஸ்லீம்க்ள் கொண்டு வருகிறார்கள் கடன்சா

யாழ்ப்பாணத்தில் நன்னீர் மீன் வாங்கினாலே ஒரு மாதிரியாத்தானாம் பார்ப்பார்கள் என அங்கே போய் இருக்கிற நம்ம குடும்பங்கள் சொல்லிச்சு 

எல்லா மீன்களும் கிடைக்கும் விராலுக்கு விலை அதிகம்,

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

இதெல்லாம் யாழ் மத்தியில்தான், நாங்கள் பெடியலா தூண்டில் போட்டு பிடிப்போம் எங்க ஊர் பெரிய குளத்தில். அப்படி பன்னாடை விறகு வைத்து சுட்டு சாப்பிடுவோம், சில வேளை கள்ளுக்கும் நல்ல சைட்டிஸ்😄

6 minutes ago, Kadancha said:

 

உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும். 

கடல் கெளிறு முள் குத்தினால், அதன் வலி சிலநாட்களுக்கு இருக்கும். அம்மா முன்னர் சமைத்தவா, எனக்கு செய்முறை தெரியா, ஆனா தலை சமைப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪

சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.

இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, உடையார் said:

மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா

மீன் சமையலில், எப்போதுமே தூளில் ஊற வைக்க விட்டாலும்,  மஞ்சளில் ஊறவைத்துத் தானே சமைப்பது. 

Link to comment
Share on other sites

20 minutes ago, உடையார் said:

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர்.

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

மீன் சமையலில், எப்போதுமே தூளில் ஊற வைக்க விட்டாலும்,  மஞ்சளில் ஊறவைத்துத் தானே சமைப்பது. 

இதற்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கனும்

25 minutes ago, Paanch said:

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும்

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

நீங்கள் சொல்வது சரி இங்கு பலர் பழுத்த சைவங்கள். எங்கள் சொந்ததில் பலர் சைவம் அசைவம் தொட மாட்டார்கள். ஏன் வீட்டில் மனைவிகூட சுத்த சைவம்.

எங்கள் அம்மா நன்றாக சமைப்பா மச்சம், நண்பர்கள்  எங்கள் வீட்டில் சாப்படுவது வழக்கம். அம்மாவிடமிருந்தான் சமையல் கற்றேன். 

துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக - என் அம்மம்மாவின் கை பக்குவம் இதில் புகுந்து விளையாடும், அன்று அவர்களுடன் தான் சாப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

பலசைவர்கள் மச்சம் மாமிசத்தை விரும்பினாலும் அதனைச் சுவையாக சமைப்பதில் தேர்ந்தவர்கள் அல்ல.

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

வீட்டில் என்ன கறி என்று கேட்பார், அம்மா சொல்லித்தந்தபடி பருப்பு, வாழைக்காய் என்று சொல்வேன். கடல் வாழைக்காயா? என்று புன்சிரிப்புடன் கேட்பார். 

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் இந்தப்பாலத்துக்கு போய் மீன் வாங்குவேன் (திலாப்பியா) கிலோ 400 ரூபாய் மீன் குறைவென்றால் 600 ரூபாய்க்கு மேல் 

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

எனக்குத் தெரியும் ஏன் கேட்க்கிறீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

துவரம் பருப்பை ஊற வைத்து, வடை பதத்துக்கு அரைத்து, வடைக்கு சேர்க்கும் பொருட்களுடன் சேர்த்து, தட்டி, துண்டுகளாக வெட்டி, (சிலர் அவித்த பின்னர் வெட்டுவினம்) இடியப்பம் அவிப்பதுபோல் அவித்து அதை கறிக்குள்ள போட்டு இறக்குவது.

தமிழகத்தில் வடகறி என்பர்.

சிலர், அவிக்காமல், குழைத்த வடை மாவையே சிறு துண்டுகளாக கறிக்குள் போடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அதனை வெடுக்கு என்று சொல்வார்கள்.

கடல் உணவு எல்லாவற்றினதும் மணத்தை வெடுக்கு என்று தானே சொல்வது.

இறைச்சியின் மணம் முச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪

சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.

இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.

இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.

https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்

ஒரே தொகுதி.அது தான் சமையல் கலை தான்டவம்ஆடுது.

Link to comment
Share on other sites

சிறு வயதில் குருணாகலில் வாழும் போது, அப்பா ஒரு முறை குளத்து மீன் (பென்னம் பெரிய குளம் என்று சொல்லலாம் )சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சமைத்துப் பார்த்தார். அதன் வெடுக்கு மணம் மூக்கை பொத்தும் அளவுக்கு இருந்ததால், அம்மா அதன் பின் வாங்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விட்டார்.

இங்கு கனடாவுக்கு வந்த பின் நன்னீர் மீன்களில் திலாப்பியா வாங்கி Oven னில் வைத்தோ அல்லது BBQ போட்டோ சாப்பிடுவது வழமை. திலாப்பியாவின் தலையை வெட்டி எறிந்து விட்டு, உடலில் கத்தியால் சில கீறுகள் போட்டு, உப்பு மஞ்சள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தடவி கொஞ்ச நேரம் வைத்து விட்டு Oven னில் வைத்து பேக் செய்தாலோ அல்லது BBQ செய்தாலோ நல்ல சுவையாக இருக்கும். 

ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வரும் நன்னீர் மீன்களை அடிக்கடி சமைத்தல் கூடாது. இவை வியட்னாம், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் Farm மில் வைத்து அளவுக்கு அதிகமான Antibiotics கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுபவை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்ற அளவில் சாப்பிட்டால் தான் சரி.

சரி,
ஊரில் பாசையூர் சந்தையில் கடல்காகம் வைத்து விற்பதைப் பார்த்துள்ளேன். போன வருடம் போகும் போதும் பார்த்தனான்....ஆராவது கண்டு இருக்கின்றீர்களா அல்லது சமைத்து இருக்கின்றீர்களா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வங்காளி நாட்டவருக்கு நன்னீர் மீன்கள்தான் அதிகம் பிடிக்குமாம்

ஆம். ஏனெனில் அது ஆற்றுப் படுக்கை அமைந்த இடமும், வங்காள விரி குடாவின் நிலையற்ற காலநிலை நிலையும், கடல் வளம் இருந்தும், அந்த பிரதேசத்தின் மீன் சுவையை  நன்னீர் மீன்களால் நிரப்பி விட்டது. 

இப்பொது மீன் உணவு அவர்களின் ஓர் அடையாளம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடல்மீன் தாராளமாக கிடைக்கும் நாடு.அதனால் மக்களுக்கு நன்னீர் மீன்களின் அவசியம் தெரியவில்லை. அப்படியிருந்தும் விரால் மீன் நல்ல சுவையானது.நன்னீர் மீன்களை பச்சைத்தண்ணி மீன் என்று பலரும் அதை விரும்புவதில்லை.வடபகுதி பல ஊர்களில் வெள்ளாளர் குலம் குளத்து மீன் சாப்பிடமாட்டினம்.

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த இடம் ஓந்தாச்சி மடம் என்ற ஊர் மட்டக்களப்பு மாவட்டம் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இந்த ஊர் பெயரை???

அந்த ஊருக்கே வந்திருக்கன்!
சுனாமியின் பின்னர் சில நிவாரண உதவிகளை வழங்க.
உடைந்த கோட்டை கல்லாறு பாலம், தென்னை மரமளவுக்கு எழும்பிய சுனாமி அடையாளங்கள் இப்பவும் மனதிலுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

சிறு வயதில் குருணாகலில் வாழும் போது, அப்பா ஒரு முறை குளத்து மீன் (பென்னம் பெரிய குளம் என்று சொல்லலாம் )சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சமைத்துப் பார்த்தார். அதன் வெடுக்கு மணம் மூக்கை பொத்தும் அளவுக்கு இருந்ததால், அம்மா அதன் பின் வாங்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விட்டார்.

நன்னீர்  மீன்களை பொதுவாக தோலை உரிக்கப்பட வேண்டும்.

8 minutes ago, நிழலி said:

இங்கு கனடாவுக்கு வந்த பின் நன்னீர் மீன்களில் திலாப்பியா வாங்கி Oven னில் வைத்தோ அல்லது BBQ போட்டோ சாப்பிடுவது வழமை. திலாப்பியாவின் தலையை வெட்டி எறிந்து விட்டு, உடலில் கத்தியால் சில கீறுகள் போட்டு, உப்பு மஞ்சள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தடவி கொஞ்ச நேரம் வைத்து விட்டு Oven னில் வைத்து பேக் செய்தாலோ அல்லது BBQ செய்தாலோ நல்ல சுவையாக இருக்கும். 

இங்கு வரும் pangasius (அது ஓர் cat fish) தோலுடனும், தோல் உரித்ததாகவும் சோதனையாக bbq அல்லது oven செய்து பாருங்கள். மணத்தில், சுவையில் வித்தியாசம் இருக்கும்.

இது திலப்பியாவுக்கும் பொருந்தும். Salmon இற்கும் பொருந்தும்.  

ஏன் கடல் மீன்களுக்கும் பொருந்தும். ஆனால். கடல் மீன்களின் தோலுடையான் சேர்த்து சமைக்கும் மனமும் ருசியும் நாம் பழக்கப்பட்டு விட்டோம். 

razor அளவு கூருடைய filleting knife ஆல்  அநேகமான பெரிய மீன்களின்  செதில்களும் அதனுடன் சேர்ந்த தோலும் லும் வெட்டி நீக்கலாம். 
 
ஆனால், ஒரு போதுமே முட்கள் நீக்கப்பட கூடாது.

Link to comment
Share on other sites

கடல் மீன் தாராளமா கிடைக்க எதுக்கு நன்னீர் மீனுக்கு அடிபடனும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

கடல் மீன் தாராளமா கிடைக்க

எல்லோருக்கும் கிடைக்கிறது என்றால், ஏன் நன்னீர் மீன் விற்கப்படுகிறது, இலங்கை தீவின் குறிப்பிட்ட ஓர் பிரதேசத்தில் நன்னீர் மீனை ஒதுகிறார்கள் என்று தெரிந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

எனது பெரியப்பா, பெரியம்மா இருவரும் சைவப்பழங்கள். துவரம்பருப்பை அவித்துச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கறி சமைப்பார்.... அதன் சுவை....... ஆகா! ஆட்டிறைச்சி தோற்றுவிடும். 

 

16 hours ago, ரதி said:

அதன் செய்முறையை யாழில் இணைக்கலாமே?...து.ப எப்படி வெட்டுவது:unsure:

 

16 hours ago, Nathamuni said:

துவரம் பருப்பை ஊற வைத்து, வடை பதத்துக்கு அரைத்து, வடைக்கு சேர்க்கும் பொருட்களுடன் சேர்த்து, தட்டி, துண்டுகளாக வெட்டி, (சிலர் அவித்த பின்னர் வெட்டுவினம்) இடியப்பம் அவிப்பதுபோல் அவித்து அதை கறிக்குள்ள போட்டு இறக்குவது.

தமிழகத்தில் வடகறி என்பர்.

சிலர், அவிக்காமல், குழைத்த வடை மாவையே சிறு துண்டுகளாக கறிக்குள் போடுவர்.

அவித்த துவரம் பருப்பை,  அரைத்து.... இடியப்ப தட்டில் வைத்து அவித்த பின்...
அதனை சிறு துண்டுகளாக வெட்டியும் சமைக்கலாம்.
பொரித்து சமைத்தால்... இன்னும் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Garra_Rufa.JPG விராலை விட ஏரி குரவை அருமையாக இருக்கும்.. ஈழத்தில் இருக்கா ..? 👌

Link to comment
Share on other sites

3.5 மில்லியன் பெறுமதியான நன்னீர் மீன் குஞ்சுகள்..!! நம்பலாமா…???

வடமாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் மீன்பிடி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகிய நிலையில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதுவரைக்கும் வடமாகாணத்தில் உள்ள சுமார் 23 குளங்களுக்கு 3.5 மில்லியன் பெறுமதியான நன்னீர் மீன் குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டுள்ளது என மீன்பிடி அலகு பணிப்பாளர் எஸ்.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.