Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார்.

இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம்.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னேற்பாடுகள் இன்றியே அமைதிப்படையில் இலங்கை விடயத்தில் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய இலங்கைக்கான இந்திய தூதுவர் திக்ஷிட் எழுதிய புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக இருக்கின்றன.

இதனை படியுங்கள். இலங்கையில் நாம் 15 ஆயிரம் பேரை இழந்தோம். இலங்கை தொடர்பான இந்தியாவிடம் ஒருங்கிணைப்பின்றி காணப்பட்ட கொள்கைகளே இதற்கு காரணம்.

இந்திய பிரதமர், மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, புலனாய்வு பிரிவுகள். சி.பி.ஐ. இலங்கை விடயம் தொடர்பிலான வெவ்வேறான கொள்கைகளை கொண்டிருந்தன.

தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர். இலங்கை தொடர்பாக தமிழகத்தின் தனியான கொள்கையை கொண்டிருந்தார். அனைத்து துறைகளிலும் சிக்கலாக காணப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, இந்தியா எத்தனை கொள்கைகளை கொண்டுள்ளது என இந்திய தூதுவர் திக்ஷிடம் கேட்டிருந்தார்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் இறுதியில் ராஜீவ் காந்தியின் படுகொலை முடிந்தது எனவும் நட்வார்சிங் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/247136?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

இந்தியா... இதுவரை ஈடுபட்ட  சீனா, பாகிஸ்தானுடனான போர்களில், 
தமிழ் ஈழ  விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரே அதிகம்
என முன்பு, இந்தியச் செய்தி ஒன்றில் வாசித்தேன்.

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

வல்லரசுக்கே.... தண்ணி காட்டியவர்கள், 
விடுதலைப் புலிகள்... என்பதில் பெருமை கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

சமாதான கொடி நட்டமாதிரி இருக்கு இந்தியா சண்டைக்கு போகாது போனால் பெண்டு நிமிரும் 

குனிய வச்சி கும்மி அடிக்கிற என்று சொல்லுவாங்களே அதேதான் நடக்கும் கும்மிடுவான் சப்ப மூக்கன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

 

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

அவ‌ங்க‌ள் 1996ம் ஆண்டு முல்லைதீவில் இற‌ந்த‌ ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ இராணுவ‌த்தின் உட‌ல்க‌கை வேண்ட‌ ம‌றுத்த‌வ‌ங்க‌ள் /

க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை காட்டு பிர‌தேச‌த்தில் எரிக்க‌ப் ப‌ட்ட‌தா நினைக்கிறேன் /

இறுதிக‌ க‌ட்ட‌ யுத்த‌த்தில் சிங்க‌ள‌ ஆமி எவ‌ள‌வு பேர் இற‌ந்தார்க‌ள் என்று ச‌ர‌த் பெண்சேக்காவுக்கு தெரியும் , அவ‌ன் ஏதோ ஒரு நாள் உண்மையை வெளியிடுவான் /

2008ம் ஆண்டில்  இருந்து 2009மே வ‌ர‌ போராளிக‌ள் வைத்த‌ கிளைமோர் தாக்குத‌லில் பல‌ சிங்க‌ள‌ இராணுவ‌ம் கொல்ல‌ப் ப‌ட்டார்க‌ள் / அதோடு கை கால் இழ‌ந்த‌வை ப‌ல‌ர் /
கை கால் இழ‌ந்த‌ இராணுவ‌த்தை சிங்க‌ள‌ம் ஒரு பெரிய‌ இட‌த்தில் வைத்து ப‌ராம‌திக்கின‌ம் , அவ‌ர்க‌ளால் ந‌ட‌க்க‌ முடியாது , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

உண்மைகள் இப்பதான் வெளிவருகின்றது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. பானு (திருத்தம் செய்யப்பட்டுள்ளது).. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தளபதிகள் புடைசூழ பானு ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

9 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் போல‌ கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி / 

கோட்டை தாக்குத‌ல் வெற்றிக்கு பிற‌க்கு என‌து அம்மா அண்ணா பெரிய‌ம்மா என்று எல்லாரும் போய் பார்த்த‌வை கோட்டையை , அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் என்ன‌ வீட்டில் ம‌ற்ற‌ அக்காவோடு விட்டுட்டு போன‌வை , பிற‌க்கு கொஞ்ச‌ம் வ‌ள‌ந்தா பிற‌க்கு கோட்டை ப‌குதியை பார்த்தேன்  💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் போல‌ கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி / 

கோட்டை தாக்குத‌ல் வெற்றிக்கு பிற‌க்கு என‌து அம்மா அண்ணா பெரிய‌ம்மா என்று எல்லாரும் போய் பார்த்த‌வை கோட்டையை , அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் என்ன‌ வீட்டில் ம‌ற்ற‌ அக்காவோடு விட்டுட்டு போன‌வை , பிற‌க்கு கொஞ்ச‌ம் வ‌ள‌ந்தா பிற‌க்கு கோட்டை ப‌குதியை பார்த்தேன்  💪

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

நீங்க‌ள் அப்ப‌வே க‌ள‌த்தில‌ குதிச்சிட்டிங்க‌ள் ச‌கோத‌ரா , உங்க‌ளின் துணிவுக்கு பாராட்டும் வாழ்த்துக்க‌ளும் 

கோட்டை வெற்றி தாக்குத‌லுக்கு பிற‌க்கு தான் யாழ்பாண‌த்து ம‌க்க‌ள் பெரும் மூச்சு விட்ட‌வை / கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ பேய்க‌ளை விர‌ட்டி அடிச்சு இருக்காட்டி , யாழ்பாண‌த்து பெரியாப்ச‌த்திரி ம‌ருத்துவ‌ம‌னை   கூட‌ மூட‌ப் ப‌ட்டு இருக்கும் /

கோட்டை தாக்குத‌லுக்கு பிற‌க்கு யாழ்பாண‌ம் க‌ல‌க‌ல‌ப்பாய் இருந்த‌து ச‌கோத‌ரா 😘 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் அப்ப‌வே க‌ள‌த்தில‌ குதிச்சிட்டிங்க‌ள் ச‌கோத‌ரா , உங்க‌ளின் துணிவுக்கு பாராட்டும் வாழ்த்துக்க‌ளும் 

கோட்டை வெற்றி தாக்குத‌லுக்கு பிற‌க்கு தான் யாழ்பாண‌த்து ம‌க்க‌ள் பெரும் மூச்சு விட்ட‌வை / கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ பேய்க‌ளை விர‌ட்டி அடிச்சு இருக்காட்டி , யாழ்பாண‌த்து பெரியாப்ச‌த்திரி ம‌ருத்துவ‌ம‌னை   கூட‌ மூட‌ப் ப‌ட்டு இருக்கும் /

கோட்டை தாக்குத‌லுக்கு பிற‌க்கு யாழ்பாண‌ம் க‌ல‌க‌ல‌ப்பாய் இருந்த‌து ச‌கோத‌ரா 😘 /

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தில் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 

13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

இப்ப‌ அந்த‌ திரைய‌ர‌ங்கு  டுக்க‌ள‌ஸ் தேவ‌ன‌ந்தாவின் ஒப்பிசா இருக்கு ச‌கோத‌ரா , கால‌க் கொடுமை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 

ஆம்.

அந்தக் காலத்தில் தான் யாழ் கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் வளர்ச்சி பெற்றது. 

கல்வியிலும் வடக்கு தொடர்ந்து தன்னை முன்னிலையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. யாழ் இந்துக் கல்லூரி.. அகில இலங்கை அளவில் அன்று றோயல் கல்லூரிக்கு அடுத்த நிலையில் இருந்தது.

விபச்சாரம்.. மதுபானம்.. போதை.. என்ற எதுவும் இருக்கவில்லை. இளைஞர்கள் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்பது அதிகம் இருந்தது. குறிப்பாக லயன்ஸ்... சென் ஜோன்ஸ் அம்புளன்ஸ்.. ரோட்டறிக் கழகங்களில்.. இவர்களின் பங்களிப்பு மிக அதிகம் இருந்த காலம். 

கலைகள் எங்கும் வளர்க்கப்பட்டன. கோலாட்டம்.. கும்பி.. பரதநாட்டியம் என்று கலை வளர்ச்சியோ..  எம் தாயக இளம் பெண்களின் வாழ்வியல் என்பது நள்ளிரவில் கூட தனிய சென்று வரும் அளவுக்கு சுதந்திரமாக இருந்தது. 

இதனை சர்வதேச ஊடகவியலாளர்களே வியந்து பதிவு செய்துள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.

அந்தக் காலத்தில் தான் யாழ் கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் வளர்ச்சி பெற்றது. 

கல்வியிலும் வடக்கு தொடர்ந்து தன்னை முன்னிலையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. யாழ் இந்துக் கல்லூரி.. அகில இலங்கை அளவில் அன்று றோயல் கல்லூரிக்கு அடுத்த நிலையில் இருந்தது.

விபச்சாரம்.. மதுபானம்.. போதை.. என்ற எதுவும் இருக்கவில்லை. இளைஞர்கள் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்பது அதிகம் இருந்தது. குறிப்பாக லயன்ஸ்... சென் ஜோன்ஸ் அம்புளன்ஸ்.. ரோட்டறிக் கழகங்களில்.. இவர்களின் பங்களிப்பு மிக அதிகம் இருந்த காலம். 

கலைகள் எங்கும் வளர்க்கப்பட்டன. கோலாட்டம்.. கும்பி.. பரதநாட்டியம் என்று கலை வளர்ச்சியோ..  எம் தாயக இளம் பெண்களின் வாழ்வியல் என்பது நள்ளிரவில் கூட தனிய சென்று வரும் அளவுக்கு சுதந்திரமாக இருந்தது. 

இதனை சர்வதேச ஊடகவியலாளர்களே வியந்து பதிவு செய்துள்ளனர். 

 உண்மை ச‌கோத‌ரா /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

 

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

 

1 hour ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

 

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 

ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

கோட்டையிலும் பானு தான் கொடியேற்றினார்.

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

 

1 hour ago, nedukkalapoovan said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்லா  இருக்கும் சிறி அண்ணா / 

5 minutes ago, nedukkalapoovan said:

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.