Jump to content

கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா? - பாலியல் மருத்துவரின் விளக்கம்

 
கொரோனா

கை, கால் போன்ற ஏதேனும் உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும்.

டோனி விருதுக்குப் (Tony Award) பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நிக் கோர்டரோ கனடாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானார். அவரின் மனைவி அமண்டா க்ளுட்ஸ் தன் கணவரின் உடல்நிலை குறித்த தகவல்களை ரசிகர்களுக்குத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

நடிகர் நிக் கோர்டரோ

 

சமீபத்தில் அவர் அளித்துள்ள தகவலின்படி கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும் கோர்டரோ வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது வலது காலில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால் கோர்டரோவின் வலது கால் அறுவைசிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஒருவேளை கை, கால் போன்ற ஏதேனும் ஒரு பாகத்துக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால் அந்த உறுப்பு முழுவதும் செயலிழந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.

ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்

கொரோனா தாக்குதலுக்கு உள்ளான நடிகர் நிக் கோர்டரோவுக்கு வலதுகாலை இழக்க நேரிட்டதுபோல், கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் ரத்தம் உறைதல் பிரச்னையை ஏற்படுத்தி தீவிர இதய பிரச்னை, பக்கவாதம், கைகால் போன்ற உறுப்புகள் செயலிழப்பு போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

 

Blood vessels

 

இது குறித்து ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜனிடம் பேசினோம்.

கொரோனா வைரஸின் தாக்கம் ஒருவரின் உடலில் அதிகமாகும்போது ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுகிறது. இது டிஸ்சிமினேடட் இன்ட்ராவாஸ்குலார் கோயாகுலேஷன் (Disseminated intravascular coagulation) எனப்படும். அதாவது, பரவலான ஊடுருவும் ரத்த உறைதல். இவ்வகை ரத்த உறைதலில் மெல்லிய ரத்தக் குழல்களினுள் ரத்த செல்கள் சிறு சிறு கட்டிகளாக உறைந்து உடலினுள் ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது.

ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்
 

கோவிட்-19 கொரோனா வைரஸில் காணப்படும் முள்கள் போன்ற பகுதிக்கு ஸ்பைக்ஸ் (spikes) என்று பெயர். கொரோனா வைரஸில் இரண்டு வகையான ஸ்பைக்ஸ் இருக்கின்றன. அவை 'ஹீம்அக்லுடினின்' (Hemagglutinin) மற்றும் 'நியூராமினிடேஸ்' (Neuraminidase). இவற்றில் ஹீம்அக்லுடினின் நம் உடலின் செல்களைத் தாக்கி ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகச் சொல்லப்படுகிறதே தவிர ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்

நியூராமினிடேஸ் வைரஸ் நம் உடலில் அதன் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளப் புரத உற்பத்தியைச் செய்கிறது. ஹீம்அக்லுடினின் காரணமாக ரத்தக் குழல்களில் சிறுசிறு கட்டிகளாக ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்கிறது. இதனால் மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தமும் ஆக்ஸிஜனும் தடைப்படுவதால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம்.

 

Blood

 

உடல் முழுவதும் ரத்தம் ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். ஒருவேளை கைகால் போன்ற ஏதேனும் ஒரு பாகத்திற்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால் அந்த உறுப்பு முழுவதும் செயலிழந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.

 

கைகால் போன்ற உடல் உறுப்பில் ரத்த உறைவு ஏற்படும்போது அந்த உறுப்பின் செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகச் செல்கள் இறக்கத் தொடங்கும். அந்த உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்கும். உடனே அறுவை சிகிச்சை மூலம் அந்த பாகத்தை நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்" என்றார் ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் செல்வராஜன்.

பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன்
 

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்து செல்களைப் பாதித்து அவர்களை ஆண்மை இழக்கச் செய்வதாக இந்த வைரஸ் குறித்து நடத்தப்பட்டுவரும் முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா என்று பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனிடம் கேட்டோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது ஒரு யூகமாகச் சொல்லப்படுகிறதே தவிர நிரூபிக்கப்படவில்லை. ரத்தம், சிறுநீர் போன்ற மனித உடல் திரவங்களில் கொரோனா வைரஸ் இருந்ததுபோல் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து திரவத்தில் வைரஸ் இருப்பது டெஸ்டில் கண்டறியப்பட்டுள்ளது

 

sperm

 

இதனால் வைரஸ் விந்து செல்களைப் பாதித்து ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆய்வுகளில் நாம் ஆரம்பநிலையில்தான் இருக்கிறோம். அதனால் ஆண்களின் இனப்பெருக்கத்திறன் கொரோனாவால் பாதிக்கப்படுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது" என்றார் அவர்.

https://www.vikatan.com/health/healthy/long-term-effects-of-coronavirus-in-human-body

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.