Jump to content

நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

பஞ்சசீல கொள்கை

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது.

ராஜபக்சேவின் சீனா சார்பு

ராஜபக்சேவின் சீனா சார்பு என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள் இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்:

இலங்கை அணி சேரா கொள்கை

இலங்கை அணி சேரா கொள்கை இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர்.

பஞ்சசீல கொள்கை இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

Link to comment
Share on other sites

இந்தியனுக்கு இன்னொரு தரம் ஆப்பு இருக்கியாச்சு!

Link to comment
Share on other sites

Quote

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார்

.கடன் கொஞ்சம் தேவையாக உள்ளது. அது தான் நடுவால் ஓடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

சிங்கள அரசியல் வாதிகள்  மேல்,  எவ்வளவு... வெறுப்பு இருந்தாலும்.
அவர்களின் ராஜ தந்திரத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

எங்களின் தமிழ் அரசியல் வாதிகள், வாயால் வடை சுட்டுக் கொண்டு...
தன்னுடைய இனத்தையே... விற்றுக் கொண்டு இருக்கிறாகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

என்னப்பா வடை போச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா வடை போச்சா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

ஆமா  நாதமுனி,  அவர் எழுத வந்த... கருத்து, என்ன என்று... அறிய ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Maruthankerny said:

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

நீங்கள் என்னத்தைக் கூறினாலும் அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்குத்தான் சொந்தம். காஷ்மீர் முழுவதும் பாகித்தானுக்குச் சொந்தம். சீனா விரும்பினால் கேரளத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 😎

நாட்டாமை கப்பித்தானின் தீர்ப்புதான் இறுதியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

போல்.... அவர்களே, 
"நச்சென்று..."  இரண்டு வரியில்,  
எழுதிய... உங்கள் கருத்து,  உண்மையானது. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 15:16, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவங்கள இப்படியே இருக்க விடுவதுதான் நல்லது. கற்பனையிலேயே 2020யில் உலக மகா வல்லரசான நாடல்லவா 😂

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.