Jump to content

நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை, யார் பக்கமும் இல்லை - அப்படி போடு அரிவாளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

பஞ்சசீல கொள்கை

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது.

ராஜபக்சேவின் சீனா சார்பு

ராஜபக்சேவின் சீனா சார்பு என்னதான் தமிழீழ விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்தியா உதவி இருந்த போதும் சீனாவுக்கே மகிந்த ராஜபக்சே முக்கியத்துவம் அளித்தார். சீனாவுக்காக ஒட்டுமொத்த இலங்கையையே குறிப்பாக சிங்களர் வாழும் தென்னிலங்கையையே ராஜபக்சே திறந்துவிட்டார் அல்லது தாரைவார்த்தார். இந்த ராஜதந்திர கோபத்தில்தான் ராஜபக்சே தேர்தலில் மண்னைக் கவ்வி மைத்திரி பால சிறிசேனா அதிபரானார் என்பது தென்னாசியாவின் வரலாறு.

நாடாளுமன்றத்தில் 50 ஆண்டுகள் இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ராஜபக்சே நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை அவரது ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நியூஸ் 18 சேனலும் மகிந்த ராஜபக்சேவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்திருக்கிறது. நியூஸ்18.காம் மூத்த செய்தி ஆசிரியர் டிபி சதீஷூக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் சீனாவுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு ராஜபக்சே அளித்த பதில்:

இலங்கை அணி சேரா கொள்கை

இலங்கை அணி சேரா கொள்கை இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் அணிசேரா கொள்கையை கடைபிடிக்கிறது. இந்தியாவும் சீனாவும் எங்களது மதிப்பிற்குரிய நட்பு நாடுகள். இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சீனாவின் சூ என்லாயும் பிற நாடுகளின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கும் விதமாக, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத, பஞ்சசீலக் கோட்பாட்டை உருவாக்கினர்.

பஞ்சசீல கொள்கை இந்த பஞ்சசீலக் கோட்பாட்டை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் இந்த பஞ்சசீலக் கோட்பாடுகளின் அடிப்படையில் பயணிப்போம். பிராந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமானது. சார்க் போன்ற அமைப்புதான் இந்த ஒத்துழைப்பை மேலும் வலிமையாக்கும். உறுப்பு நாடுகளிடையே இருக்கும் பிரச்சனைகளால் சார்க் அமைப்பு இயங்காமல் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகள் இருக்கின்றன. பேச்சுகளைத் தொடங்குவதற்கான பாதைகள் திறந்தே இருக்கின்றன. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

Link to comment
Share on other sites

இந்தியனுக்கு இன்னொரு தரம் ஆப்பு இருக்கியாச்சு!

Link to comment
Share on other sites

Quote

இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார்

.கடன் கொஞ்சம் தேவையாக உள்ளது. அது தான் நடுவால் ஓடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே

சிங்கள அரசியல் வாதிகள்  மேல்,  எவ்வளவு... வெறுப்பு இருந்தாலும்.
அவர்களின் ராஜ தந்திரத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

எங்களின் தமிழ் அரசியல் வாதிகள், வாயால் வடை சுட்டுக் கொண்டு...
தன்னுடைய இனத்தையே... விற்றுக் கொண்டு இருக்கிறாகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

இவர், சொதப்பல், ஊழல் புகழ் இந்தியாவை பத்தி சும்மா அவிச்சு இறக்கிறார் போல கிடக்குது.:grin:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

2 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

என்னப்பா வடை போச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்படி அவிச்சு விட்டாத் தானே அவருடைய கடையில் வியாபாரம் நடக்கும்.

இந்தியாவின் முழு நம்பிக்கை அமெரிக்கா அவுஸ்திரேலியா ஜப்பான் தனது பக்கம் என்று.

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா... மற்ற ஆட்களை, நம்பி கெடப்  போகுது.
நமக்கென்ன... பார்த்து,  "எஞ்ஜாய்"  பண்ண வேண்டியதுதான். :)

இவர்கள் கெதியில், போரை ஆரம்பித்தால் நல்லது,
நெடுக... கொரோனா செய்திகளை வாசித்து,  "அலுப்பு" அடிக்குது. :grin:

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா வடை போச்சா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஈழப்பிரியர், ஏதோ சொல்ல வந்தவர், பேரன் கூப்பிட்டு விட்டான் போல கிடக்குது.

ஆமா  நாதமுனி,  அவர் எழுத வந்த... கருத்து, என்ன என்று... அறிய ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

21 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. கடந்த இந்திய மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்ட புல்வாமா குண்டு போல இந்தச் சீன எல்லைப் பிரச்சனையும் இந்திய கொறோனாப் பிரச்சனை முடிந்தவுடன் புஸ்ஸ்ஸ்....ஸ் என்று போய்விடும். அதுவரை வடிவேல் ஸ்ரைல் "" நீயும் இந்தப் பக்கம் வரப்படாது. நானும் அந்தப் பக்கம் வரமாட்டேன். பேச்சுப் பேச்சாகத்தான் இருக்கவேண்டும்"" என கூவுவார்கள். 😏😏

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Maruthankerny said:

இது பற்றி பல வருடம் முன்பு நான் இங்கு ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

சீனா உண்மையிலேயே இந்தியாவுக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் முழுவதையும் 
வலு கட்டாயமாகவே பிடித்து வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது ..காரணம் 1962 ஆண்டு போரின் போது 
உண்மையிலேயே ஒரு சீனாவுக்கு சொந்தமான சிறு பிரதேசம் இந்திய எல்லைக்குள் இருந்தது 
அப்போது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. சீன பிரதேசத்தை சுற்றி இந்திய இராணுவம் இருந்தததால் பெருமளவு இராணுவ உயிர்பலியை தவிர்க்க சீனா தந்திரோபயாகவே அந்த பிரதேசத்தை விட்டு பின்வாங்கியது ..அதன் பின்பு படை எடுத்து வந்ததுதான் அருணாச்சல பிரதேசம் முழுவதும் கைப்பற்றியது.

ஒவொரு அமெரிக்க ஜனாதிபதி மாற்றம் நடக்கும்போதும் 
அமெரிக்க தூதுவராக இருக்கும் ஒரு சங்கியை அவருடன் நெருக்கமாக பழக விட்டு 
உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நாம் கழுவிவிட தயராக இருக்கிறோம் 
ஆகவே எம்மை பற்றி நீங்கள் அதிகம் யோசிக்க தேவை இல்லை என்ற உறுதிமொழி வழங்குவது 
கடந்த 20 வருடமாக ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

அதுக்கு பதிலாக கிளிண்டன் தொடங்கி எல்லா அமெரிக்க ஜனாதிபதியும் இந்தியாவுக்கு சார்பாக ஒரு அறிக்கை விடுவார்கள் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது இதை சீனா கருத்தில் கொள்ளவேண்டும் என்று.

இந்த அறிக்கை வந்ததும் அதை டாலாய் லாமா (நாடு கடந்த தீபெத் அதிபர்) உடனே  சி என் என் னில் தோன்றி  
இந்த பகுதியை எவ்வளவு அடக்குமுறையாக சீனா வலு கட்டாயமாக பிடித்து வைத்திருக்கிறது என்று ஒரு விளக்கம்  கொடுப்பார்.

பின்பு நியூயோர்க்கில் இருக்கும் யூ என் னில் இது பற்றி ஒரு வாதம் நடக்கும்  
பின்பு இறுதி விவாதத்துக்கு சீனாவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இறுதி விவாதத்துக்கு சீனாவும் வரும்  ........வந்து நாம் என்ன இல்லை என்றா சொல்கிறோம் 
நாம் அருணாச்சல பிரதேசத்தை விடுவிக்கிறோம் அதுபோல இந்தியாவும் எமது பிரதேசத்தை திருப்பி தரவேண்டும்  என்று கூறும். இவர்கள் அதே அளவு நில பரப்பை அருணாச்சல பிரதேசத்தில் சீனா எடுத்து கொள்ளலாம்  என்று கூறுவார்கள். சீனா கண்ணுக்கு கண் என்று ஆடம் பிடிக்கும்  

பின்பு நீங்கள் பகிடியாக எழுதினாலும்  வடிவேல் போலதான் .........
நீயும் இந்தப்பக்கம் வரப்படாது 
நானும் அந்தப்பக்கம் வர மாடடேன் 
என்று இந்திய சார்பு பக்கம் கொஞ்சம் அழுத்தி கூறும் அவ்வளவுதான்.  

நீங்கள் என்னத்தைக் கூறினாலும் அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்குத்தான் சொந்தம். காஷ்மீர் முழுவதும் பாகித்தானுக்குச் சொந்தம். சீனா விரும்பினால் கேரளத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 😎

நாட்டாமை கப்பித்தானின் தீர்ப்புதான் இறுதியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.

போல்.... அவர்களே, 
"நச்சென்று..."  இரண்டு வரியில்,  
எழுதிய... உங்கள் கருத்து,  உண்மையானது. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 15:16, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை முழுமையாக பார்க்கா விட்டாலும்,
5´வது நிமிடத்தில் இருந்து, கட்டாயம் பாருங்கள். :grin:

இவங்கள இப்படியே இருக்க விடுவதுதான் நல்லது. கற்பனையிலேயே 2020யில் உலக மகா வல்லரசான நாடல்லவா 😂

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.