Jump to content

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்


Recommended Posts

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும்

 

 

 

image_732b4438bc.jpgகடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது.

கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென்றவர்களின் தவறா, முண்டியடித்து நிவாரணத்துக்குச் செல்வதற்கான நிலைமையை ஏற்படுத்திய அரசாங்கத்தின் தவறா?

இலங்கை அரசாங்கம், மிகவும் மோசமான முறையில் இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைக் கையாளுகிறது. கொவிட்-19 பெருந்தொற்றை விட, பொதுத்தேர்தலே அரசாங்கத்துக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதிகாரத்துக்கான அவா, அப்பாவிகளைக் காவு கொள்கிறது. கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, பட்டினியால் மரணிக்கும் கதைகளை, நாம் கேட்க நேருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதைப் போர் என்று அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களை அந்தரிக்க வைத்துள்ளது. இப்போது, நாம் பேசும் கதை, எல்லோரும் அறிந்த கதை. இந்நிகழ்வு, அடுப்பெரியா வீடுகள் எத்தனை, பாலறியாக் குழந்தைகள் எத்தனை, உணவறியாக் குடும்பங்கள் எத்தனை போன்ற கேள்விகள் பதிலின்றி, அரசாங்கத்தைச் சுட்டியபடியே உள்ளன. இந்தக் கேள்விகளைக் கேட்போர் யாருமில்லை. சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கை நிறைக்கையில், இந்தக் கேள்விகள் அர்த்தம் இழக்கின்றன.

'கொரோனா வைரஸ் பரவுகைக்கு எதிரான போர்' என்று, ஊடகங்கள் உரக்கக் கத்துகின்றன. தமிழ் ஊடகங்களும் இந்தக் கோஷத்தில் இணைகின்றன.

இலங்கையில் வறுமை ஒழிப்புப் பற்றி, அரசியல்வாதிகளிடம் பேசுவதில் பயனில்லை. ஏனெனில், 'பொருளாதார நெருக்கடிதான் வறுமைக்குக் காரணம்' என்று, சில அரசியல்வாதிகள் காற்றில் கத்திவீசுகிறார்கள். இன்னும் சிலர், 'இது உலகப் பிரச்சினை' என்று நழுவுகிறார்கள். இன்னும் சிலர், 'முதலாளிகளை அரசு பிணையெடுத்தால், வறுமை ஒழியும்' என்று வாதிடுகிறார்கள்.

வறுமையின் கொடுமையை உணராதவர்களிடம், வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய அபத்தம். இன்னொருபுறம், கொரோனா வைரஸ் தான், வறுமையை உருவாக்கியது என்ற மாயையையும், எல்லோரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள். மொத்தத்தில், பிரச்சினையின் அடிப்படைகளை ஆராயாமல், 'மடைமாற்றும்' வேலைகள் வெற்றிகரமாக நடக்கின்றன. வறுமையும் அரசியலாகிறது; எதிர்வரும் தேர்தலுக்கான பயனுள்ள பிரசாரக் கருவியாகிறது.

இன்று, இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, நேர்நிலையாக நின்று எதிர்கொண்டாக வேண்டும். அதற்குத் தகுதியான தலைமையோ, அரசியல் பண்பாடோ இல்லை; அதை வளர்த்தெடுப்பதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை.

இலங்கை அரசியலின் வங்குரோத்து நிலையின் உச்சபட்ச வெளிப்பாடே, இன்று நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இலங்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றாகவன்றி, அரசியல் ஆயுதமாகவே வலிமையுடன் வெளிப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று, இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளைப் பொது வெளிக்குக் கொண்டு வந்துள்ளது. நீண்டகாலமாக, மக்கள் நலன்சாரா அரசியல் பொருளாதாரத்தின் கோர விளைவுகளையே மக்கள், இன்று எதிர் நோக்குகிறார்கள். 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை, இலங்கை அறிமுகப்படுத்தியது முதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. கடந்த பத்தாண்டுகளில், அவை உச்சம் தொட்டுள்ளன.

கொரோனா வைரஸும் எமது வாழ்க்கை முறையையும் பொருளாதார முறையையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கேள்வி கேட்காமல், போராடாமல் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற உண்மையை, உரக்கச் சொல்லியுள்ளது.

நாம் கேள்வி கேட்க வேண்டியது, இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல, மக்களைத் தொடர்ந்து பட்டினியாய் வைத்திருக்கும் பொருளாதார முறையையும் சேர்த்துத்தான். மக்கள் விழிப்படைவதற்கான இன்னொரு வாய்ப்பை, இந்தக் கொவிட்-19 தொற்று தந்துள்ளது. நாம் போராடாவிடின், கொரோனா வைரஸிடமிருந்து தப்பி, வறுமையால் இறப்பதைத் தடுக்க இயலாமல் போகலாம்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொல்லாத-கொரோனா-வைரஸும்-கொன்ற-அரசாங்கமும்/91-251023

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.