Jump to content

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள்


Recommended Posts

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர் உலக அரசியலின் திசைவழிகள்

 

 

 

image_e4ff8dbdcd.jpg-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை, அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது; அவர்கள் காலாவதியாகி விட்டார்கள்.

கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம்; அதில் தவறில்லை. ஆனால், கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை, அவ்வாறு வாழ முயன்றால், யதார்த்தம் அவர்கள் முகத்தில் அறையும். ஆனால், பலர் கற்பனையிலும் கனவிலுமே வாழ்கிறார்கள். யதார்த்தம், அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அப்பால் நகர்கிறது.

இன்றைய உலக அரசியலின் நிலையும், இப்படித்தான் இருக்கிறது. உலக ஒழுங்கு, மிக வேகமாக மாறிவருகிறது. அம்மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.

ஆனால், பழைய மாதிரியே, இன்னமும் உலகம் இயங்குகிறது என்று நினைப்பவர்களும் ஆள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படலாம். அவ்வளவே! தமிழர்களுக்கான தீர்வு, மேற்குலகத் தலைநகரங்களில் இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அதிகமில்லை.

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னரான உலக ஒழுங்கு, எவ்வாறு இருக்கும் என்று சிந்திக்கும் போது, சில திசைவழிகளை இங்கு குறிப்பது தகும். இவை, இலங்கை போன்ற நாடுகள், கணக்கில் எடுக்க வேண்டிய மாற்றங்கள் ஆகும்.

உலகமே, 'நிதிமூலதனம்' என்ற பெருஞ்சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த நிதிமூலதனத்தின் அடியாளத்தில் ஏற்படும் மாற்றங்கள், பல்வேறு வடிவங்களில், இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் செல்வாக்குச் செலுத்துகிறது.

முதன்மையை இழந்த அமெரிக்கா

கொவிட்-19 பெருந்தொற்றால், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கொவிட்-19இன் தாக்கத்துக்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள். 'உலகின் தலைவன்' என்ற நிலையை, அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இழந்துள்ளது எனலாம். பொருத்தமாகச் சொல்வதானால், தலைமைப் பதவிக்குச் சேடம் இழுக்கிறது.

அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம், முதலாம் உலகப் போர்க் காலத்திலேயே உருவாகிவிட்டது. அந்தப் போரால், பெரும் பொருள் இழப்பையும் உழைப்பாற்றல் உடையோரின் உயிரிழப்பையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளை விட, மேன்மையான ஒரு பொருளாதார வல்லரசாக அமெரிக்கா வளர்ந்தது.

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா உலக மக்களின் நலன்காக்க வேண்டிப் பங்குபற்றவில்லை. பாசிசத்துக்கு எதிரான அப்போரில், அதிகளவான தியாகங்களைச் செய்த நாடு, சோவியத் ஒன்றியம் தான். மிகக் குறைவான உயிர்ச் சேதத்தையும் உடைமைச் சேதத்தையும் சந்தித்த அமெரிக்கா, அப்போரின் விளைவாக, உலகின் மிக வலிய பொருளாதார, ஆயுத வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டது.

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவின் முதன்மை நிலையில் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. ஆனாலும், அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவால், அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வராது. பிறபொருளாதாரங்களின் வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதாரத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் குறைக்கும் என்பது உண்மை.

எனினும், அமெரிக்காவே உலகின் பெரிய போர் இயந்திரத்துக்குப் பொறுப்பாக உள்ளது. அதுவரை, உலக அலுவல்களில், அமெரிக்காவில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனினும், என்றென்றைக்குமல்ல என்பதை, கொவிட்-19 நிரூபித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்காவால், உலக அலுவல்களில் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை, சிரியாவில் செய்ய இயலவில்லை.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில், தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளைக் கவிழ்த்து வந்துள்ள அமெரிக்காவால், இப்போது அதைச் செய்ய இயலவில்லை என்பதற்கு, வெனிசுவேலா நல்லதோர் உதாரணம். ஈரானுக்கு எதிரான மிரட்டல் பலனளிக்கவில்லை. வடகொரியாவை ஏமாற்ற முடியவில்லை.

'அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு, முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை, நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்' என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் அயலுறவுகளுக்கான தலைவர் ஜோசப் போரஸ், திங்கட்கிழமை (25) ஜேர்மன் இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில் தெரிவித்தார். இது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வாகும். அமெரிக்காவின் நெருக்கடிகள் குறித்து, மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசப்பட்டாலும், இதுவரை மேற்குலக நாடுகளின் தலைவர்கள் யாரும், பொதுவெளியில் பேசவில்லை. இவ்வாறு பேசுவது, இதுவே முதல்முறை.

'அமெரிக்கா தலைமையிலான உலகின் முடிவு குறித்தும், நூற்றாண்டில், ஆசியாவின் மேலெழுந்த வருகை பற்றியும் தொடர்ந்து ஆய்வாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். இப்போது, அது எம் கண்முன்னே அரங்கேறுகிறது. யாருடைய பக்கத்தை நாம் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை, விரைவாகச் எட்டவேண்டிய நிலைக்கு, கொவிட்-19 எம்மைத் தள்ளியுள்ளது' என்று ஜோசப் போரஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியும் பிரான்ஸும், அமெரிக்காவிலிருந்து விலகிய கொள்கை வகுப்புகளை நோக்கி நகர்ந்துள்ளன. அமெரிக்கா தலைமை வகிக்காத ஒரு உலக ஒழுங்கை நோக்கி, நாம் மெதுவாக நகர்கிறோம் என்பது உண்மை.

சீனா: பாதைகள் பலவிதம்

நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ, உலகின் முதன்மை நிலையைச் சீனா அடைந்துள்ளது என்ற உண்மையை ஏற்றாக வேண்டும். சீனா இன்று, தன் முதன்மை நிலையை, பலவழிகளிலும் நிறுவுவதனூடாகத் தன்னை நிலைநிறுத்த முனைகிறது.

அமெரிக்க டொலர் மய்யப் பொருளாதாரத்தில் இருந்து, நாடுகளை மெதுமெதுவாகச் சீனா வெளியே கொண்டுவருகிறது. சீனா, தனது நாணயமான யுவானிலேயே நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதேவேளை, அமெரிக்க டொலர் அல்லாத ஏனைய நாணயங்களிலும், வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இதன்மூலம், டொலர் மய்யப் பொருளாதாரத்துக்கு, பாரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

உலகில், உற்பத்திச் சந்தையின் மய்யமாகச் சீனா இருக்கிறது. இதன்மூலம், உற்பத்திச் சந்தையின் கட்டுப்பாடு மறைமுகமாக, சீனாவின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. சீனாவில், கொவிட்-19 தொற்று வீரியம் அடையத் தொடங்கிய போது, பல மேற்குலக நாடுகளில் மக்கள், கழிவறைக் காகிதங்களுக்குப் பல்பொருள் அங்காடிகளில் சண்டையிட்டார்கள். ஏன் என்று, யோசித்துப் பாருங்கள். இதுவோர் உதாரணம் மட்டுமே.

இந்தியாவுடனான எல்லை தவிர்த்து, ஏனைய அனைத்து எல்லை நாடுகளுடனும், சீனா எல்லை உடன்படிக்கைகளை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா, தனது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, தென்சீனக் கடலில், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்வினையாற்றத் தயாராகியுள்ளது.

சீனாவின் 'ஒரு பட்டி, ஒரு பாதைத் திட்டம்' (One Road One Belt Initiative), ஆசியாவையும் ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைத்துள்ளது. சர்வதேச வணிகத்தில், புதிய சாத்தியப்பாடுகளை இது திறந்து வைத்துள்ளது. சீனா, தன்னை ஒரு பொருளாதார வல்லரசாக நிறுவும் முயற்சியில், இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டம், பொருளாதார ரீதியில் நீண்டகாலத்துக்கு ,சீனாவின் முதன்மை நிலையைத் தக்க வைக்க உதவக்கூடும்.

இன்றைய நிலையில், முதன்மை நிலையை சீனா அடைவதற்கு, இரண்டு வழிகளைப் பின்பற்றக் கூடும். முதலாவது, ஆசியப் பசுபிக் பிராந்தியத்தின் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதன் ஊடாக, அமெரிக்காவை ஒதுக்கி வெற்றி காண்பதாகும். இதனூடாகச் சீனா, தனது முதன்மை நிலையை உலகுக்கு அறிவிக்கலாம்.

இரண்டாவது வழி, மூலோபாய ரீதியில் அமெரிக்காவைப் பலதளங்களில் பின்தள்ளி, முதன்மை இடத்தைப் பிடிப்பது. இரண்டு வழிகளையும், ஒருசேர சீனா பின்பற்றவும் கூடும்.

இதைப் பார்க்கும் போது, இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்த கெடுபிடிப்போர்க் காலம், நினைவுக்கு வரலாம். ஆனால், இனிவரப்போகும் காலம், மிகவும் வித்தியாசமானது.

சோவியத் ஒன்றியத்துக்குப் பொருளாதார பலமோ, உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தேவையோ இருக்கவில்லை. ஆனால், சீனாவே உலகப் பொருளாதாரத்தின் ஊன்றுகோலாக, இன்று திகழ்கின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகளில், அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியில், சீனா செல்வாக்குச் செலுத்துகின்றது.

ஓன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அனைத்துத் தளங்களிலும், ஆசியப் பிராந்தியம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், ஆசியாவில் தனது பிடியைச் சீனா இறுக்கும். ஆசியாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் ஊடு, உலக ஆதிக்கத்தை நோக்கிச் சீனா பயணிக்கும். அமெரிக்காவால் பொருளாதார ரீதியாக எதிர்வினையாற்ற இயலாத நிலையில், இராணுவ ரீதியாக எதிர்வினையாற்றும். இதன் பாதிப்புகளை ஆசியர்களே எதிர்கொள்வர்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, ஆதிக்கப் போட்டியின் மய்யமாக மத்திய கிழக்கு எவ்வாறு இருந்ததோ, அதேபோல, அடுத்த நூற்றாண்டில், ஆசியாவே ஆதிக்கப் போட்டியின் மய்யமாகும். இதையும் சேர்த்தே 'ஆசியாவின் நூற்றாண்டு' என்று, நாம் அழைக்கவியலும்.

தேசியவாத எழுச்சியின் ஆபத்துகள்

கடந்த பத்தாண்டுகளில், உலகெங்கும் தேசியவாதம் மீளெழுச்சி கொண்டுள்ளது. அது குறிப்பாக, அதிவலது நோக்கியதாகவும் பாசிச மிரட்டலாகவும் வெளிப்பட்டுள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று, இதை வெளிப்படையாகவும் நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையிலும், செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இன்று மக்களைக் கைவிட்டு, பெருநிறுவனங்களையும் செல்வந்தர்களையும், தேசியவாத அடிப்படையிலான அரசாங்கங்களே இவ்வாறு முன்னின்று செய்கின்றன. அமெரிக்காவில், கொவிட்-19 தொற்று வீரியம் அடைந்த கடந்த இரண்டு மாதங்களில், அமெரிக்கச் செல்வந்தர்களின் சொத்துகள், 15மூத்தால் அதிகரித்துள்ளன.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில், தீவிர வலதுசாரித் தேசிய எழுச்சி, மிக முக்கிய சவாலாக இருக்கும். தேசியத்தின் போர்வையில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சூழல், இயல்பாகத் தோற்றம் பெறும். இப்போது, பல மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதன் குணம்குறிகளைக் காணவியலும்.

கொவிட்-19 பெருந்தொற்று, புதிய களங்களைத் தேசியவாதம்; கண்டடைவதற்கு, இரண்டு வழிகளை அமைத்துக் கொடுத்துள்ளது. முதலாவது, அரசுகள் எல்லைகளை மூடி, பொருள்கள் ஏற்றுமதியை (குறிப்பாக, மருத்துவத்துறைசார்) தடைசெய்து, தேசியவாதத்தை வளர்த்தன. திறந்த சந்தையை, முன்மொழிந்து முன்னின்ற அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளே இதைச் செய்தன.

இரண்டாவது, கொவிட்-19 தொற்று நெருக்கடியைக் கையாள இயலாத அரசாங்கங்கள், தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, கவனத்தைத் திசைதிருப்பின. இரண்டுமே, தீவிர தேசியவாதத்தின் எழுச்சிக்கும் பரவுகைக்கும் வழி செய்தன.

கொவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புகள், வேலையிழப்புகள், மனஉளைச்சல், நம்பிக்கையீனம், நிச்சயமின்மை என்பன, தேசியவாதத்தின் தீவிர வடிவங்கள் செல்வாக்குப் பெறுவதற்கான களங்கள் ஆகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர், இதே தேசியவாதத்தின் பெயரால், எமது உரிமைகள் எமக்குச் சொந்தமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உலகம் மாறிவிட்டது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதென்று சொல்வது, எவ்வளவு அபத்தமோ அதைப்போன்றதே உலக ஒழுங்கின் மாற்றங்களை ஏற்க மறுப்பதும் ஆகும்.

பெருந்தொற்றின் பின்னரான காலம் ஆபத்தானது. ஆதிக்கப் போட்டிக்கான பேரரங்கின் ஒருபகுதியாக, நாடுகள் திகழும். அந்தப் போட்டி, போர்களைத் தூண்டலாம்.

சிறுபான்மையினரை ஒடுக்கவும் உரிமைகளைப் பறிப்பதற்கும், வீச்சடைந்துள்ள தேசியவாதம் காரணியாகலாம். ஓவ்வொரு நாடும் அதன் மக்களும், மிகக் கவனமாக, அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாலும், பாசிச சர்வாதிகாரம்தான் எமக்குப் பரிசாகக் கிடைக்கும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-பெருந்தொற்றின்-பின்னர்-உலக-அரசியலின்-திசைவழிகள்/91-251022

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.