Jump to content

நான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்த நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை.

பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்திய தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமந்திரனை பதவிவிலக்க வேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களிற்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை துறக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார்.

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளை புரிந்து கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதனின் உடல் தேறியதும், அடுத்த வார இறுதியில் மீண்டும் கூட்டமைப்பு கூடுவதென முடிவாகியது.

https://www.pagetamil.com/127287/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 ( 16 வயத்தினிலே )

x1080

திரி பற்றும் என்டு நினைக்குறன்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐயா விட்டுட்டுப் போடாதைங்கோ.
இன்னும் கொஞ்ச தூரம் தான் சுடலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எங்களுக்கு வாக்களித்து தலைவர்களாக்கிய மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்பது முக்கியமல்ல. அவர்கள் வாக்குகள்மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் என்பதை விடுத்து மக்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொடுக்காது புறம்தள்ளினால் நாளை அவர் கல்லறை இப்படித்தான் காட்சிதரும்.

 tna-traitors-3.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

உண்மை. ஆனால், இவர்போன்றவர்கள் தமிழினத்தின் இறுதிக்கிரியையை முடித்துவிட்டுத்தான் ஒதுங்குவார்க்கள்போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொஞ்சம் வெருட்டுற மாதிரி கிடக்கு....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

வாய் கிழிய தன்னை சனநாயகவாதிகாகக் காட்ட கத்தும் சுமந்திரன்.. இப்படி சர்வாதிகாரி.. பாசிசவாதி மாதிரி ஆனது எப்படி. பதவி மோகம் மட்டுமே. மக்கள் நலனில் கிஞ்சிதமும் அக்கறையற்றவருக்கு எதுக்கு சனநாயக வேசம். 

 

பெரும்பான்மையான தமிழ் மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் சுமந்திரன் உடனடியாக தான் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகுவதே அடிப்படை சனநாயகமாகும். 

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர்களை ஏமாற்றி பின்கதவால் பெட்டி பெட்டியாக பெறுவதற்கு பெருந்துணையா இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனை விட்டா கட்டையில சம்பந்தன் மாவை பிழைப்பு என்னாகிறது?

இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை கையாள கூத்தமைப்பில் யாருமில்லை. ஏனெண்டா எல்லாருமே பின்கதவால் கிடைக்கும் சொகுசுகளை கூடக் குறைய அனுபவிச்சு சுகம் கண்டுடார்கள். மேலும் ஏமாறுகிற பாமர மக்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என்ட நம்பிக்கை இன்னும் இந்தக் கோஷ்டிக்கு இருக்கு. இது தகரும் வரை தமிழர்பாடு கஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இந்த வார தனிப்பட்ட கருத்துக்குண்டான பைல்ஸ்..☺️..😊

Mani.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி! பதவியிலிருந்து உடன் விலகுமாறு கோரிக்கை

Report us Rakesh 5 hours ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாகவே விலக வேண்டும். அதுவே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது. இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்படும்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின்

பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனாகவே விலகுவதுதான் பொருத்தமானது. அதுதான் அவருக்கும் நல்லது. நாமாக அவரை நீக்கியதாக இருக்கக் கூடாது என்று

தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் புளொட்

தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

https://www.tamilwin.com/politics/01/247327?ref=home-imp-parsely

பதவியிலிருந்து விலக முடியாது! பிடிவாதம் பிடிக்கும் சுமந்திரன்

Report us Rakesh 1 hour ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்

தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து,தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக

பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச்

சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரமும் விவாதிக்கப்பட்டது.

சுமந்திரனைப் பதவி விலக்க வேண்டும் என்று நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால், அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன், நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவினால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

"சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால், அவர் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து பேச வேண்டும்" என்று நேற்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி

கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்தும் எனப் பரவலாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் சம்பந்தன் கூறினார்.

"தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய வேளையில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்" என்று இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது

கூறினார்.

எனினும், "இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்துகொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

https://www.tamilwin.com/politics/01/247329?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

Link to comment
Share on other sites

2 minutes ago, satan said:

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

ம்ம்!
ரணிலோட சேர்ந்து தங்களின் திருகுதாளங்களுக்கு இடைஞ்சலா இருந்த விக்கி, அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுரேஷ், சிவசக்தி ஆனந்தன் போன்றோரை கழட்டிவிட்ட கோஷ்டி இப்ப திருதிரு என்டு முழிக்குது.
சம்பந்தனும் சம்பந்தனின் திருட்டு அரசியல் கோஷ்டிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலிருந்து யாரும் விலகமாட்டார்கள் காரணம் அப்படியான சொகுசு வாழ்க்கை இவர்கள் அனுபவிப்பதில் கால்பங்கு மக்கள் அனுபவிப்பார்களா இல்லை அரசாங்கம் கொடுக்க நினைப்பதையே தடுத்து நிறுத்தி அதை பங்கு போட நினைப்பவர்கள் 

இவர்களும் திருந்த வாய்ப்பும் இல்லை இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் திருந்த அறவே வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது கூறினார்.

சூடு, சொரணை, மானம், ரோஷம் எதுவுமே இல்லாத ஜென்மங்கள் இப்பிடி தான் பேசும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தா நாத்து யாரோ ஒருவர் சொன்னார். சுமந்திரனுக்கு இருக்கிற  திறமைக்கு,  ஐ . தே கட்சியில் இணைந்து போட்டியிட்டே, பாராளுமன்றம் போகலாம் என்றார். இங்கு, இன்று இவரோ பேச்சாளர் பொறுப்பிலிருந்தே விலகமாட்டேன். என்று அடம் பிடிக்கிறார்.

Link to comment
Share on other sites

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

செயற்பாட்டுத் திறனுடைய சார்ள்ஸ் நிர்மலநாதன் புதிய அணியை வழிநடத்த தகுதியானவர்.

அவர் முன்வந்தால் இதை சாத்தியமாக்குவது பெரும் காரியமல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.