Jump to content

நான் விலகமாட்டேன், விரும்பினால் நீக்கி விடுங்கள்- சுமந்திரன்; நிதானமாக பேச வேண்டும்- சம்பந்தன்: கூட்டமைப்பு கூட்டத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்த நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை.

பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்திய தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது.

முக்கியமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமந்திரனை பதவிவிலக்க வேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களிற்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை துறக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார்.

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

“தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளை புரிந்து கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

செல்வம் அடைக்கலநாதனின் உடல் தேறியதும், அடுத்த வார இறுதியில் மீண்டும் கூட்டமைப்பு கூடுவதென முடிவாகியது.

https://www.pagetamil.com/127287/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 ( 16 வயத்தினிலே )

x1080

திரி பற்றும் என்டு நினைக்குறன்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐயா விட்டுட்டுப் போடாதைங்கோ.
இன்னும் கொஞ்ச தூரம் தான் சுடலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எங்களுக்கு வாக்களித்து தலைவர்களாக்கிய மக்களுக்கு நாங்கள் என்ன செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்பது முக்கியமல்ல. அவர்கள் வாக்குகள்மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் என்பதை விடுத்து மக்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொடுக்காது புறம்தள்ளினால் நாளை அவர் கல்லறை இப்படித்தான் காட்சிதரும்.

 tna-traitors-3.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்குத்தான்.... இப்ப, நெருக்கடி வந்திருக்குது.  :rolleyes:
அதுக்குத்தான்... சுமந்திரனை, கோத்து  விடுகிறார். :grin:

சம்பந்தன் ஐயா... அவர்களே... 
எங்கள் காதில்,  "பூ"  சுற்ற வேண்டாம்.
30 வருட அரசியல் சாணக்கியத்தின்  தோல்வி, என்று..
அரசியலிலிருந்து ஒதுங்கி இருங்களேன்...   ப்ளீஸ். 

உண்மை. ஆனால், இவர்போன்றவர்கள் தமிழினத்தின் இறுதிக்கிரியையை முடித்துவிட்டுத்தான் ஒதுங்குவார்க்கள்போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொஞ்சம் வெருட்டுற மாதிரி கிடக்கு....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

“கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

வாய் கிழிய தன்னை சனநாயகவாதிகாகக் காட்ட கத்தும் சுமந்திரன்.. இப்படி சர்வாதிகாரி.. பாசிசவாதி மாதிரி ஆனது எப்படி. பதவி மோகம் மட்டுமே. மக்கள் நலனில் கிஞ்சிதமும் அக்கறையற்றவருக்கு எதுக்கு சனநாயக வேசம். 

 

பெரும்பான்மையான தமிழ் மக்களின் எதிர்ப்பை சந்திக்கும் சுமந்திரன் உடனடியாக தான் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகுவதே அடிப்படை சனநாயகமாகும். 

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர்களை ஏமாற்றி பின்கதவால் பெட்டி பெட்டியாக பெறுவதற்கு பெருந்துணையா இருக்கும் சுத்துமாத்து சுமந்திரனை விட்டா கட்டையில சம்பந்தன் மாவை பிழைப்பு என்னாகிறது?

இரண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை கையாள கூத்தமைப்பில் யாருமில்லை. ஏனெண்டா எல்லாருமே பின்கதவால் கிடைக்கும் சொகுசுகளை கூடக் குறைய அனுபவிச்சு சுகம் கண்டுடார்கள். மேலும் ஏமாறுகிற பாமர மக்கள் இருக்கும் வரைக்கும் தமிழ்மக்களை ஏமாத்தி பிழைப்பு நடத்தலாம் என்ட நம்பிக்கை இன்னும் இந்தக் கோஷ்டிக்கு இருக்கு. இது தகரும் வரை தமிழர்பாடு கஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் இந்த வார தனிப்பட்ட கருத்துக்குண்டான பைல்ஸ்..☺️..😊

Mani.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் போர்க்கொடி! பதவியிலிருந்து உடன் விலகுமாறு கோரிக்கை

Report us Rakesh 5 hours ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாகவே விலக வேண்டும். அதுவே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது. இதன்போது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்படும்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின்

பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனாகவே விலகுவதுதான் பொருத்தமானது. அதுதான் அவருக்கும் நல்லது. நாமாக அவரை நீக்கியதாக இருக்கக் கூடாது என்று

தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் புளொட்

தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

https://www.tamilwin.com/politics/01/247327?ref=home-imp-parsely

பதவியிலிருந்து விலக முடியாது! பிடிவாதம் பிடிக்கும் சுமந்திரன்

Report us Rakesh 1 hour ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்

தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து,தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக

பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச்

சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரமும் விவாதிக்கப்பட்டது.

சுமந்திரனைப் பதவி விலக்க வேண்டும் என்று நாம் தனிப்பட்ட காரணங்களுக்காக வலியுறுத்தவில்லை, ஆனால், அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பைத் துறக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன், நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவினால் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

"சுமந்திரனைப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால், அவர் தனிப்பட்ட கருத்துக்களைத் தவிர்த்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து பேச வேண்டும்" என்று நேற்றைய கூட்டத்தில் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேட்டி

கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தைச் செலுத்தும் எனப் பரவலாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும் சம்பந்தன் கூறினார்.

"தமிழ் அரசியல் நெருக்கடியான சூழலில் இருக்கும் இன்றைய வேளையில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்" என்று இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார்.

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது

கூறினார்.

எனினும், "இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளைப் புரிந்துகொண்டு, முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

https://www.tamilwin.com/politics/01/247329?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

Link to comment
Share on other sites

2 minutes ago, satan said:

இந்தப் பூம் பூம் மாட்டுக்குத் தெரியும், இப்போ சுமந்திரனை விலக்கினால் தாங்கள் சிங்களத்திடம் பெற்ற கையூட்டுகளின் விபரம், விக்கியருக்கு எதிராக செயற்பட்ட விதம் ஆகியவற்றை  சுமந்திரன் புட்டு புட்டு வைத்து விடுவார்.  தேர்தலில் துண்டும் மிஞ்சாது. ஆகவே அடக்கி வாசிக்க முடிவு செய்திருப்பார். அதை வைத்தே சுமந்திரனும் இந்த இரண்டு மாடுகளையும் பூட்டி இழுக்கிறார்.

ம்ம்!
ரணிலோட சேர்ந்து தங்களின் திருகுதாளங்களுக்கு இடைஞ்சலா இருந்த விக்கி, அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுரேஷ், சிவசக்தி ஆனந்தன் போன்றோரை கழட்டிவிட்ட கோஷ்டி இப்ப திருதிரு என்டு முழிக்குது.
சம்பந்தனும் சம்பந்தனின் திருட்டு அரசியல் கோஷ்டிகளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிலிருந்து யாரும் விலகமாட்டார்கள் காரணம் அப்படியான சொகுசு வாழ்க்கை இவர்கள் அனுபவிப்பதில் கால்பங்கு மக்கள் அனுபவிப்பார்களா இல்லை அரசாங்கம் கொடுக்க நினைப்பதையே தடுத்து நிறுத்தி அதை பங்கு போட நினைப்பவர்கள் 

இவர்களும் திருந்த வாய்ப்பும் இல்லை இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களும் திருந்த அறவே வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

11 hours ago, பெருமாள் said:

"கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்" என்று எம்.ஏ.சுமந்திரன் இதன்போது கூறினார்.

சூடு, சொரணை, மானம், ரோஷம் எதுவுமே இல்லாத ஜென்மங்கள் இப்பிடி தான் பேசும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தா நாத்து யாரோ ஒருவர் சொன்னார். சுமந்திரனுக்கு இருக்கிற  திறமைக்கு,  ஐ . தே கட்சியில் இணைந்து போட்டியிட்டே, பாராளுமன்றம் போகலாம் என்றார். இங்கு, இன்று இவரோ பேச்சாளர் பொறுப்பிலிருந்தே விலகமாட்டேன். என்று அடம் பிடிக்கிறார்.

Link to comment
Share on other sites

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

சம்பந்தர் கூட்டத்தினால் ஓரம்கட்டப்பட்டவர்களை ஒன்றிணைத்தால் அங்கு தமிழினத்திற்கு ஓர் உண்மையான, நம்பிக்கையான தலைமை தோற்றம்பெறலாம் என எண்ணத் தோன்றுகிறது. 🤔

செயற்பாட்டுத் திறனுடைய சார்ள்ஸ் நிர்மலநாதன் புதிய அணியை வழிநடத்த தகுதியானவர்.

அவர் முன்வந்தால் இதை சாத்தியமாக்குவது பெரும் காரியமல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.