Jump to content

பழந்தமிழ் மக்களின் மனைகளும் அவற்றின் வடிவமைப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழ் மக்களின் மனைகளும் அவற்றின் வடிவமைப்பும் ..

1.jpg

'மனை’ என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடியிருப்புகள் திண்ணை, தூண், அட்டில், முற்றம், படிக்கட்டு, சாளரம், வாயில், மாடம் என்ற அமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்புகள் குடியிருப்புக் கட்டமைப்பின் வளர்ச்சிக் காலங்களில் இடம் பெற்றிருந்தன. இவை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் குடியிருப்புக் கட்டமைப்புகளாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத முடிகிறது.  

மனை விளக்கம்

‘மனை’ என்ற சொல்லிற்குக் குடியிருப்புடைய வீடு, குடும்பம், இல், சிற்றில், பேரில், நற்றாய், பசுதொழுவம், சூதாடு பலகையின் அறை, நிலஅளவு வகை, மனைவி, வாழ்க்கை, வெற்றிடம், 2400 சதுரடி அல்லது குழி, நிலப்பகுதிகள் எனப் பல பொருள்கள் காணப்படு கின்றன. ‘மனை’ என்ற சொல் பதினைந்து பொருள்களை குறிப்பிடுகின்றது.” பொதுவாக மனை என்பதற்கு வீடு என்னும் பொருள்தான் மிகுதியாகக் கூறப்படுகின்றது. மனைவியின் மாட்சி, மனை அமைவிடச் சிறப்புப் பற்றி இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இப்பதிவுகள் மூலம் மனைகள் கட்டப்பட்டிருந்த முறைகள், சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை அறியமுடிகின்றன. முறைப் படுத்தப்பட்ட ஒழுங்கான கட்டமைப்பில் அமைந்த குடியிருப்புகளை மனை என்று இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன. இதனை,

“கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்” (நற்79:2)

“............நளிமனை நெடுநகர்” (ஐங்குறு.324:3)

“மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை” (அகம்.384:13)

“நெடு நா ஒள; மணி கடிமனை இரட்ட” (நற்.40:1)

“திருவுடைத் திருமனை ஐது தோன்று கமழ் புகை

வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்

குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே”

(புறம்.379:16-18)

“துஞ்சு மனை நெடுநகர் வருதி” (ஐங்குறு.60)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

சிற்றில்

‘சிற்றில்’ என்பதற்கு சிறுகுடில், சிறுவீடு, சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, சிற்றில் பருவம் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது. சிறுவடிவமைப்பை யுடைய வீடுகளைச் சிற்றில் என இலக்கியங்கள் கூறுகின்றன. சிறுமிகள் மணலில் கட்டி விளையாடும் சிறுமணல் வீடும் என்று அழைக்கப்படுகிறது. இதனை,

“சிற்றில் நல் தூண்.......................” (புறம்.56:1)

“வரிபுனை பரி சிறந்து ஓடி” (நற்.123:8)

ஏன்ற பாடலடிகள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வீடுகள் தூண்களுடன் கூடிய அமைப்புடன் இருந் துள்ளன. வளைந்த கால்களைத் தூண்களாகக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இதனை,

“இடுமுள்வேலி முடக்கால் பந்தர்

புதுக்கலத்து அன்ன செவ்வாய் சிற்றில்”

(அகம்.394:9-10)

வீட்டின் முன் பந்தல் அமைப்புடன் கூடிய காய்ந்த முள் குச்சிகளைக் வேலியாகக் கொண்டு அமைக்கப் பட்ட வீட்டின் கட்டமைப்பைத் தெளிவாக அறிய முடிகிறது. பாடலடிகளில் செவ்வாய் சிற்றில் என்று கூறப்பட்டுள்ளதால் செம்மண் பூசப்பட்ட சிறிய மனைகளாகத் தெரிகிறது.

பேரில்

பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டிருந்த வீடு களைப் பேரில் என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குடியிருப்பதற்குரிய வீட்டின் உறுப்புகள் குலைந்து செல்களால் சிதைக்கப்பட்டிருந்தாலும் ஒழுகாத நிலையில் பெரிய அளவிலான வீடுகள் இருந்துள்ளன. இதனை,

“அந்தோ! எந்தை அடையாப் பேரில்” (புறம்.261:1)  

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.

முன்றில் அமைப்பும் பயன்பாடும்

முன்றில் என்பது வீட்டின் முன்பகுதியாகும். வீட்டின் முன்நில அமைப்பு இன்றைய நாளில் நாகரிக வாழ்விடத்தின் உயர்நிலையாக விளங்குகிறது. பழந்தமிழ் மக்கள் பண்பாட்டினை அறியும் போது முன்றில் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கிறது எனலாம். ஏனெனில் முன்றில் பயன்பாடு பற்றிச் சிறப்பாக வாழ்விடச் சூழலுடன் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. குரம்பை, குடில், மனை, வீடு, அரண்மனை போன்ற குடியிருப்புகளின் கட்ட

மைப்பில் முன்றில் அமைப்பையும் அதன் பயன் பாட்டையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இப்பதிவுகள் வீட்டின் முன் அமைப்பில் பயனுள்ள திறந்தவெளி இடமாக இருந்ததைச் சுட்டுகின்றன. நில பாகுபாட்டிற்கேற்ப வாழ்ந்த மக்களுக்கு பயன்படுமாறு குடியிருப்பின் ஒரு பகுதியாகவும் இருந்ததை அறிய முடிகிறது. வளர்ச்சிக் காலங்களில் உள்ள வீட்டின் கட்டமைப்புகளின் இடம் பெறுகின்ற இப்பகுதி முற்றம் என்று அழைக்கப்படுகிறது.

குறிஞ்சி நிலக்குடியிருப்பு கட்டமைப்பில் முன்றில் அமைப்புகள் திறந்தவெளி இடமாகக் காணப்படு கின்றன. இவ்வமைப்பில் செடி கொடிகள் வளர்ந்து பந்தல் போல இருப்பதால் உறங்கி ஓய்வெடுப்பதற்குரிய இடமாக இருந்துள்ளது. முன்றிலின் முன் பலா, வேங்கை, மல்லிகை போன்ற தாவரங்கள் இடம் பெறுகின்ற செய்தியால் இக்கட்டமைப்புகள் இயற்கைச் சூழலுடன் அமைந்திருந்ததை அறிய முடிகிறது. இதனை,

முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பி

பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் (புறம்.320:1-2)

“...................................செவ்வேர்ச்

சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்

களையுடைய முன்றில்” (நற்.77:4-6)

Òகூதளம் கவினிய குளவி முன்றில்

செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்”

(புறம்.168:12-13)

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. குறிஞ்சி நிலமுன்றில் கட்டமைப்பின் பயன்பாட்டினை,

“குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

வாங்கமைப் பழுவினிய தேறல் மகிழ்ந்து

வேங்கை முன்றில் குரவை அயரும்” (புறம்.129:1-3);

“தேம் பிழி நறவின் குறவர் முன்றில்” (அகம்.78:7)

என்ற பாடல்வரிகள் விளக்குகின்றன.

இறப்பை அமைப்பு

தாழ்வாரத்தின் இறங்கிய பகுதி இறப்பை எனப்படும். இவ்வமைப்பு இறை, இறவாணம் என்று சுட்டப்படுகின்றது. குரம்பைகளின் வடிவமைப்பில் இறப்பையின் தோற்றம் ஒரேமாதிரி அமைவதைக் காணமுடிகிறது. நிலப்பாகுபாட்டிற்கேற்ப அமைந்த குரம்பைகளின் கூரையமைப்புகள் தாழ்வான குறுகிய இறப்பையினை உடையதாக இருந்தன.

“முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை” (நற்.207:2)

“குறியிறைக் குரம்பை” (புறம்.129:1)

“...............................................செல்வர்

வகை அமர் நல்இல் அகஇறை உறையும்

வண்ணப் புறவின் செங்காற் சேவல்” (நற்.71-6-8)

“உள் இறைக் குரிஇக் கார் அணற் சேவல்” (நற்.181:1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. பற்பல பிரிவு களாக அமைந்த மாடக்குடியிருப்புகளின் இறவாணம் புறாக்கள் உறங்குவதற்குரிய இடமாக இருந்துள்ளன. தீக்கடைக்கோல் பயன்படுத்தப்படாதக் காலங்களில் வீட்டின் முன் அமைந்துள்ள கூரையின் அடிப்பகுதியில் செருகி வைக்கப்பட்டிருந்தது. இதனை,

“இல் இறைச் செரிஇய ஞெலிபோல்” (புறம்.315:4)

என புறநானூறு கூறுகின்றது. பயன்பாட்டிற்குரிய சில பொருட்களை செருகி வைக்கின்ற பகுதியாக இருந்தது. இப்பழக்கம் இன்றும் மரபுதொடர்ச்சியாகக் காணப் படுகிறது.

திண்ணை அமைப்பு

தமிழரின் பண்பாட்டில் பழங்காலம் தொட்டு இன்றுவரை வீட்டமைப்பில் திண்ணை என்பது ஒரு இன்றியமையாதக் கட்டமைப்பாகக் காணப்படுகிறது. வீட்டின் முன்பகுதியில் மேடை போன்று அமைக்கப் படும் இடத்திற்குத் திண்ணை என்று பெயர். இக் கட்டமைப்புத் திணை, திண்ணை, தெற்றி, வேதிகை, பீடிகை, என்னும் சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. திண்ணை வீட்டின் முன்பகுதியில் இடம் பெறும் கட்டமைப்பாக உள்ளதால் முற்றத்தின் விரிவாக்கமாகக் கருதமுடிகிறது. திறந்தவெளி முற்றங்களிலிருந்து திண்ணைக் கட்டமைப்பு சற்று மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில் அமர்வதற்கு, உறங்குவதற்கு ஒய்வெடுப் பதற்கு, விளையாடுவதற்கு என்ற தேவைகளின் அடிப் படையில் கட்டப்பட்ட அமைப்பாகத் திகழ்கின்றது. இதனை,

“தெற்றிப் பாவை திணி மணல் அயரும் (புறம்.283:1;;2)

என புறநானூறு சுட்டுகிறது. கல்லால் நிறுத்தப்பட்ட திண்ணைக் கட்டமைப்புப் பற்றிய செய்திகளும் தாவரங்களை வளர்த்த செய்திகளும் கிடைக்கின்றன.

எழுத்தாளர் : பழனி குமார்

http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr18/34972-2018-04-18-07-29-08

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.