Jump to content

திருநங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.!

eelanila.jpg

வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன்.

சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருநங்கை தன் பாலியல் மாற்றத்தின் காரணமாக விடுதலைப்புலிகளின் புகார் மனுவுக்கு இலக்காணார். அழைத்து வந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்த போது; அப்போது சுண்ணாகம் தெல்லிப்பளை மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த சாம்பவி மற்றும் ரெட்ணம் அக்காவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார். குறித்த முறைப்பாடானது தான் எந்த விதத்திலும் ஆண் இல்லை என்பதும் தன்னால் ஒரு ஆணைப்போல செயலாற்ற உடுத்த முடியாது என்பதையும் குறித்த திருநங்கை தன்நிலை விளக்கமாக முன்வைத்தார்.

அப்போது திருநர்கள் பற்றிய புரிதல் இல்லாத சூழ்நிலையில் குழப்பத்திற்கு உள்ளான மகளிர் அணியினர். கடிதம் ஒன்றிணை எழுதி யாழ்ப்பாணம் பழையபூங்காவில் இருந்த விடுத்தலைப்புலிகளின் காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் குறித்த திருநங்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுக்கு அனுப்பப்பட்டார் மருத்துவ குழுவினரின் உளவியல் மருத்துவர்களின் உளவியல் ஆய்வின் முடிவில் அவரை திருநங்கை என அங்கீகரித்து பெண் உடையில் பெண்களைப்போல் வாழலாம் எனவும் பிறரால் எந்த வகையில் கேலி நக்கலுக்கு இலக்காக நேர்ந்தால் தயங்காமல் விடுதலைப்புலிகளின் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் எனவும் கடிதத்தின் மூலம் உறுதி செய்து அனுப்பப்பட்டார்.

மறுநாளே அத்திருநங்கை புடவை உடுத்தி தன்னை அலகரித்து வீதியில் நடந்த போது தெல்லிப்பளை முதல் மருதனார் மடம் வரை ஊரே வேடிக்கை பார்ததையும் தான் புல்லரித்து தலை நிமிராது நடந்து சென்றதையும் சொல்லும் போது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதே வாரத்தில் மானிப்பாய் புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு இறைவழிபாட்டிற்கு சென்ற குறித்த திருநங்கையை ஐந்து இளஞர்கள் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கி நையப்புடைத்ததால் மனஉளைச்சலுக்காகன அவர் விடுதலைப்புலிகளின் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டை ஏற்ற காவலர்கள் குறித்த ஐவரையும் கைது செய்து அவரை நக்கல் செய்யக்கூடாது என்றும் பூமியில் மனிதராய் பிறந்த அனைவரும் அவரவர் விருப்பின் பேரில் வாழ உரிமை உண்டு என அறிவுரை கூறி மீண்டும் இத்தவறை செய்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என எச்சரித்து அனுப்பப்பட்டனர். இதை அவர் அவர் சொல்லி முடிக்கும் போது கண்களில் கண்ணீர் சொரிய சொல்லி முடித்தார்.

தற்போது குறித்த திருநங்கை தனக்கென சமூக அடையாளத்தோடு தன்மரியாதையோடு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிட தக்க விடயம்..
#ஈழநிலா (Jonisha)

http://www.vanakkamlondon.com/eelanila-30-05-2020/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.!

eelanila.jpg

 

http://www.vanakkamlondon.com/eelanila-30-05-2020/

அவர்கள் இருந்தபோது நிம்மதியாக உறங்கினார்கள் மக்கள். அதை யாரலும் மறுக்க முடியாது. என்ன ஒரு அழகு பொம்மை, வசீகர கண்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.