Jump to content

ஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இன்று (30) தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினாலும் தடுக்க முடியாது. வடக்கு கிழக்கு எமது சரித்திர பூமி. அது எமது அடிப்படை உரிமை. அந்த நியாயமான தீர்வை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய கேள்விக்கு,

ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னர் நாம் எல்லோரும் ஒன்றாக செயற்பட சில கருமங்கள் எடுத்தோம். அதன்படி, ஒற்றுமையாக ஒரு அமைப்பை எடுத்தோம். அந்த செயற்பாட்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எமது அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பினார்கள். அதை நாம் வரவேற்றோம். 2009 ஆயுதப் போராட்டம் மௌனமாகிய பின்னரும், அது தொடர்கிறது. இலக்கை அடையும் வரை தொடர்வோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப் பற்றி பேசி பலனில்லை. அது முடிந்த விடயம். நாம் இன்று வேறு வழியில் பயணிக்கிறோம். மனித உரிமைகளின் அடிப்படையில், ஜனநாயகத்தின் அடிப்படையில், சர்வதேசத்தின் ஆதரவுடன் பயணத்தை செய்கிறோம்.

ஆயுதப் போராட்டம் குறித்த கருத்து பற்றிய கேள்விக்கு,

ஆயுதப் போராட்டத்தின் சரி பிழைகளை நாம் பேசவில்லை. இன்னொரு ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. சிங்கள, தமிழ் மக்களிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதப் போராட்டத்தை நாம் விரும்பவில்லை. அதையே வலியுறுத்துகிறோம்.

ஆயுதப் போராட்டம் பற்றிய சுமந்திரனின் கருத்து பற்றிய கேள்விக்கு,

சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. இந்த விடயங்களை பாவித்து எமது கட்சியை உடைக்க பலர் முயற்சிக்கிறார்கள். நாம் அதற்கு ஒத்தழைக்க மாட்டோம்.

சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுவிட்டது என கூறுவது கற்பனை. அதை முற்றாக நிராகரிக்கிறேன். கட்சியின் செயற்குழு, மத்தியகுழு, நாடாளுமன்ற குழு கூடியே முடிவுகள் எடுக்கிறோம். யாரும் தனிப்பட்ட ரீதியில் முடிவெடுப்பதில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவரை அடையாளம் கண்டுவிட்டீர்களா என்ற கேள்விக்கு,

அது மக்களின் அதிகாரம். கட்சியின் அதிகாரம். உரிய நேரத்தில், உரியவர் அந்த பொறுப்பில் வருவார். இந்த பொறுப்பில் இருப்போமென நாம் கற்பனை செய்தோமா? தமது கடைமையை உண்மையாகவும், நேர்மையாகவும் மக்கள் பணியை செய்து வந்தால், மக்கள் தமது தலைவர்களை தீர்மானிப்பார்கள்.

நான் தேசியக்கொடியை மதிக்கிறேன். தேசியக்கொடியை ஏற்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத கேள்விகள். இந்த கேள்விகளால் எமது சமூகத்திற்கு என்ன நன்மை? இப்படியான கேள்விகளால் எமது மக்களை குழப்ப பலர் முயற்சிக்கிறார்கள். ஊடகங்களும் முயற்சிக்கின்றன. இப்படியான கேள்விகளிற்கு பதிலளித்து, அதற்கு நான் உதவலாமா? இப்படியான கேள்விகளிற்கு நான் பதிலளிக்க மாட்டேன். இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்றார்.

https://www.pagetamil.com/127344/

Link to comment
Share on other sites

7 hours ago, பெருமாள் said:

இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இப்ப தேர்தல் மட்டும் இல்லை என்டால் சம்பந்தன் கிடைச்ச சொகுசு பங்களாவில் இழுத்து போத்திக்கொண்டு படுத்திருப்பார்.

சம்பந்தனின் ஜனநாயகம் என்டால் தமிழின கொலைகாரர்களுக்கு முண்டு கொடுப்பதும், அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்குவதும் என்டு தான் அர்த்தம். அத தான் அவர் 30-40 வருஷமா செய்றார்.

சம்பந்தனின் மனித உரிமை என்டால் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளிகள் தப்ப உதவுவதும், அதனால் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பதும் என்டு தான் அர்த்தம்.

7 hours ago, பெருமாள் said:

சுமந்திரன் பேசியது தனிப்பட்ட விடயம். அது பற்றி நான் கதைக்க விரும்பவில்லை.

அனந்தி சசிதரன் ஜெனீவா சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அதுவும் அவரின் கணவர் உட்பட பலரைப் பற்றிய உண்மைகளை பேசியது மட்டும் எப்படி தனிப்பட்ட விஷயம் இல்லாம அவர் மேல் நடவடிக்கை எடுத்து விலத்தப்பட்டார்?

உங்க போலி ஜனநாயக வேடம் பற்றி உங்க போலி மனித உரிமை பற்றி கைக்கூலி அரசியல்வாதிகள் சம்பந்தனும் மாவை சேனாதிராசாவும் பதில் சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினாலும் தடுக்க முடியாது.

உங்கள் கூற்று உண்மை என்றால்; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அது கிடைத்திருக்க வேண்டும். இல்லை, ஆயத்தப் போராட்டம் மௌனித்த உடன் கிடைத்திருக்க வேண்டும். சர்வதேசம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடும் உங்களால், அது முடியுமா ஐயா? சும்மா தேர்தலுக்காக சொல்லி வைக்க கூடாது. நீங்கள் சொல்வது எல்லாம் சொல்லி விட்டு, எமது கட்சியை உடைக்கிறார்கள் என்றோ, பத்திரிகைகள் மீதோ பழியை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள். ஆயுதப் போராட்டமே, இன்று ஒரு முடிவை எடுக்க சிங்களத்தை நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள். அதனாலேயே சிங்களம் அந்தக் கேள்வியால் உங்களை மாட்டுகிறது. அதில் இருந்தே உங்கள் பொறுப்பு எது? என்பதை உணருங்கள். பொறுப்பாக அதன் காரணத்தை தெளிவுபடுத்துங்கள். ஆயுதப் போராட்டத்துக்கும், ஒரு இனத்தின் அழிவுக்கும் நீங்களும், சிங்கள அரசுமே காரணம் என்று சுட்டுங்கள். இளைஞர் வெறும் அம்புகளே, என்று சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை.

பேசிப் பயனில்லையா?

பேச பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்பயமாத்தானிருக்கும் டிமாண்ட் பண்ணி கதைத்தால்  வீடு வந்து சேரு முன் மார்கயா இப்பதானே செயட்கையாக இதய செயலிழப்பை செய்யகூடிய மருந்துகள் வகை வகையாய் உள்ளது .

ஆறுமுகம் தொண்டைமானின் மகனுடன் ஏன் அவசரப்பட்டு கொள்ளுப்படுகிறார் கோத்தா ? மகளை  தனிமை படுத்துகினம் அவ வைத்தியரா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்த்தனமாக பதிலளித்து சர்ச்சையில் மாட்டுவது, அல்லது தெனாவெட்டாய் வெருட்டுவது சம்பந்தனுக்கு கைவந்த கலை. உந்தக் கோவத்தை காட்ட வேண்டிய இடம் இதுவல்ல. முண்டு கொடுத்து காப்பாற்றிய இடத்தில் காட்டப் பயம், இங்கு பாய்ந்து விழுகிறார். எங்கே மாட்டிவிடுவேனோ என்கிற பயமும்.  இருக்க, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எப்படி சம்பந்தர் வந்தாரோ, அவ்வாறு வரவேண்டியவர் மாவையே. ஆனால் சுமந்திரன் என்கிற குள்ள நரி, அதுக்கு கண் வைத்து, விக்கியருக்கு எதிராக மாவையை கொம்பு சீவி அந்தப் பக்கம் தள்ளிப்போட்டு, சம்பந்தரின் கக்கத்துக்கய் காவல் காக்கிறார். பாவம்! காலம் யாரை தெரியுமோ, அவர் தான் தலைவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

பேசப்பயமாத்தானிருக்கும் டிமாண்ட் பண்ணி கதைத்தால்  வீடு வந்து சேரு முன் மார்கயா இப்பதானே செயட்கையாக இதய செயலிழப்பை செய்யகூடிய மருந்துகள் வகை வகையாய் உள்ளது .

 

 

இதேதான்..ராயப்பு அடிகளாருக்கும் ...நடந்தது...அணிலின் நரித்தனம்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி ..👌

2b5e96c371f13108af924ebef1e6f7895a2829a8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 50 வருசப் பழசு.. சுமந்திரன் 10 வருசப் பழசு.. பழசுகளின் கதையை விட்டிட்டு.. மக்கள் புதிசுகளாத் தெரிவு செய்யுங்கோ. இந்த தேர்தலை பழசுகளை கழிய ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துங்கோ. 

Link to comment
Share on other sites

On 31/5/2020 at 07:00, பெருமாள் said:

ஆறுமுகம் தொண்டைமானின் மகனுடன் ஏன் அவசரப்பட்டு கொள்ளுப்படுகிறார் கோத்தா ? மகளை  தனிமை படுத்துகினம் அவ வைத்தியரா ?

முகக்கவசம் அணியாம மீடியாக்களுக்கு பிலிம் காட்டும் மகனின் அட்டகாசம் யாராலயும் சகிக்க முடியல என்று பௌத்த அமைப்புகளும் வைத்தியர்களும் கோத்தாவிடம் போட்டு குடுத்திருக்கீனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.