Jump to content

தாய்மடி நோக்கி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மடி நோக்கி..!

 

கிராமத்தில் வாழ்ந்தேன்

நகரம் பிடித்தது

நகரத்தில் வந்தபின்

நரகமாய் ஆனது.

 

கட்டிடக் காடும்

இயந்திரக் கடலும்

நெத்திரை குன்றிய

நேரத்தின் வேகமும்.

 

புல் தரை பொசுக்கும்

சூரிய எரிச்சலும்

புளுங்கிக் குளிக்கும்

வாகன நெருச்சலும்.

 

வந்த எனக்கு

வாட்டுது நகரம்-இங்கு

நெருப்புக்கும் காசு

நீருக்கும் காசு

அனைத்துப் பொருளோடு

அன்புக்கும் காசு

 

மூச்சுக்காற்றும்

காசுக்கு வருமுன்..

முடிவாய் இருக்கிறேன்-என்

கிராமத்தை நோக்கியே..

-பசுவூர்க்கோபி-

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பசுவூர்க்கோபி said:

மூச்சுக்காற்றும்

காசுக்கு வருமுன்..

முடிவாய் இருக்கிறேன்-என்

கிராமத்தை நோக்கியே..

-பசுவூர்க்கோபி-

இங்கும் பலர் ஊரில் வீடு கட்டவதை வாங்குவதைப் பற்றி நிறைய கதைக்கிறார்கள்.கவிதையோடு நிற்காமல் செயலிலும் காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 30/5/2020 at 21:10, பசுவூர்க்கோபி said:

மூச்சுக்காற்றும்

காசுக்கு வருமுன்..

முடிவாய் இருக்கிறேன்-என்

கிராமத்தை நோக்கியே..

-பசுவூர்க்கோபி-

கிராமத்துக்கு திருப்புபவர்கள் கிராமத்தை நரகமாக்காமல் இருக்க வேணுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.