Jump to content

ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்

MicrosoftReuters

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர்.

இது தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சி என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.

”மற்ற நிறுவனங்களை போல மைக்ரோசாஃப்ட்டும் வழக்கமாக தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சியை செய்து வருகிறது. இது சில இடங்களில் முதலீடுகளை அதிகரிக்கும். சிறிது காலத்திற்கு பிறகு நிறைய பேரை வேலையை விட்டு அனுப்ப காரணமாக அமையலாம். ஆனால் இந்த முடிவு கோவிட்-19ஆல் எடுத்த முடிவு அல்ல,” என மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

மற்ற நிறுவனங்களை போல பிற செய்தி நிறுவனங்களுக்கு அவர்களின் செய்தியை வலைத்தளத்தில் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட்டும் பணம் வழங்கி வருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம்PA Media

ஆனால் எந்த செய்தி வர வேண்டும் அது எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை முடிவு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பத்திரிகையாளர்களை வைத்துள்ளது.

சுமார் 50 ஒப்பந்த செய்தி தயாரிப்பாளர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் வேலையை இழப்பார்கள் என சியாட்டல் டைம்ஸ் கூறியுள்ளது. மற்ற முழு நேர பத்திரைகையாளர்கள் இருப்பார்கள் எனவும் சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

”எங்கள் வேலையை ஓர் இயந்திரம் பார்த்துவிடும் என நினைப்பது நியாயமானதல்ல. ஆனால் அதுதான் நடக்கிறது”, என்று சியாட்டல் டைம்ஸ்க்கு இதனால் பாதிக்கப்படும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

வேலையை விட்டு அனுப்பப்பட்ட சில பத்திரிகையாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதழியலுக்கான கோட்பாடுகளை முழுவதும் அறிந்திருக்காது, இதனால் தவறான செய்திகள் வெளியிட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர்.

வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் 27 பேரை பிரிட்டனின் பி.ஏ மீடியா வேலைக்கு எடுத்துள்ளது என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் , ”நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன். இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்துக்கொண்டது,” என்று கூறினார்.

ரோபோட் இதழியல் எனக் கூறப்படும் இந்த முறையை செலவை குறைப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்தி பார்க்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய கூகுள் நிறுவனமும் சில திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.

 

https://www.bbc.com/tamil/science-52862134

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.