Jump to content

தமிழ் தேசிய பற்றாளர் சபேசன் சண்முகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர்.

https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam

 

 

Link to comment
Share on other sites

மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சபேசன் சாவடைந்தார்

எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அவர்கள் இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது.

எமது விடுதலை போராட்டத்தின் மீதும் தலைமை மீதும் அளவற்ற பற்றோடு செயற்பட்ட சபேசன் அண்ணை, மிகவும் ஆக்கபூர்வமான அரசியல் விடுதலை போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அனைவர் மனத்திலும் இடம்பிடித்தவர்.

எமது மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவால், மிகவும் மனமுடைந்துபோன அவர், அதனைத் தொடர்ந்த நாட்களில் மனரீதியாக அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாதவராக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்.WhatsApp-Image-2020-05-29-at-09.18.50.jp

மெல்பேர்ண் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாள் பொறுப்பாளராகவும் பரப்புரை பொறுப்பாளராகவும் செயற்பட்டு, இன்று மீளாத்துயில் கொள்ளும் சபேசன் அண்ணையின் நினைவுகளுடன் இவரது இழப்பின் துயரால் வாடும் குடும்பத்தினருடன் எமது கரங்களை இறுக பற்றிக்கொள்கின்றோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

http://www.ilakku.org/மூத்த-தமிழ்த்-தேசிய-செயற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

தமிழீழ கனவுடன் செயல்பட்ட அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

Sabeshan-annai-724x1024-1-660x330.jpg

தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம்: இறுதிவணக்க நிகழ்வு!

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநில முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் தமிழ்த்தேசியபற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு இன்று 01-06-2020 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பு அனைவரையும் கவலைகொள்ளச் செய்கின்றது.

எமது மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டங்களில் வழிகாட்டியாக பயணித்து, எமது விடுதலைப் போராட்டத்தின் தலைமை மீது அபாரமான பற்றுதலை வெளிப்படுத்தியதோடு மட்டுமன்றி, அத்தலைமையின் கருத்துக்களை தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் மக்கள் முன்கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்த இவர், தாயகம் சென்றிருந்த வேளையில் அங்கு நடைபெற்ற போராட்டத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் துடிப்போடு பங்குகொண்டு செயற்பட்டிருந்தார்.

தாயகத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பெரும்போரில் பேரழிவை எமது மக்கள் எதிர்கொண்டபோது, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி, கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் , நீண்ட பயணங்களை மேற்கொண்டு, பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பங்குகொண்டு செயற்பட்டிருந்தார்.

விடுதலைப் போராட்டத்தின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகவும் தென்துருவ நாடுகளின் பரப்புரைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்த இவர், தமிழ்க்குரல் (3CR) வானொலி ஊடாக 28 ஆண்டுகளுக்கு மேலாக, தனது தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை அனைவரும் கவரும் விதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழர் மருத்துவ நிதியத்துடன் இணைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், வானொலி நிதிசேகரிப்பு (Radiothon) நிகழ்வை ஒழுங்குபடுத்திக்கொடுத்து, தாயக மக்களின் மேம்பாடுகளுக்காக பேருதவி புரிந்தவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டிருந்த இவர், தனது அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தவர்களுடனும் இனிமையான புன்முறுவலுடன் பழகி தனது நிலைப்பாடுகளை உறுதியாக முன்வைப்பவராக விளங்கினார்.

தமிழ்த்தேசியத்தை நிலைப்படுத்துவது எனின் தமிழ்மொழியை வளர்த்து, தமிழ்ப் பண்பாட்டை பின்பற்றி வளரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி, தமிழ்மொழி முறை திருமணங்களை நடத்துவதிலும், பல்வேறு தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதிலும் ஆர்வமாக இருந்தவர். இளையோர் மத்தியில் தமிழ்மொழி மீதான பற்றுதலை ஏற்படுத்துவதிலும் தமிழ்த்தேசிய ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டவர். தமிழர் வாழ்வியலோடு தொடர்புபட்ட நிகழ்வுகள் பற்றி, ஆய்வுநோக்கில் தகவல்களை சேகரித்து அதனை முழுமையான தகவற்பெட்டகமாக மக்கள் முன்கொண்டுசெல்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டிருந்த பேரழிவின் பின்னரும் சோர்ந்துவிடாது, அதில் பாதிக்கப்பட்ட சிலரை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் தன்னால் முடிந்தவரை அதற்கான ஒழுங்கமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கனதியாக செயற்பட்டவர். ஆனாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பெருத்த பின்னடைவின் பெருந்துயரில் இருந்து மீளமுடியாதவராக, அதன் பாதிப்புகளை சுமந்தவராக இவரது காலங்கள் கடந்து நின்றன.

எமது மக்களிற்கான விடுதலைப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பின் துயரால் வாடும் இவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு எமது கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

Sabeshan-annai-724x1024.jpg
viber_image_2020-06-01_12-32-32-1024x498
viber_image_2020-06-01_12-32-36-1024x498
viber_image_2020-06-01_12-32-37-1024x498
viber_image_2020-06-01_15-28-12-1024x682
nov27-2xxx011-691x1024.jpg
sabesan-annai-724x1024.jpg
 

http://eelamurasu.com.au/?p=28008

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

இவரைபோல் மனமுடைந்து அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் பலர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.