Jump to content

டாலருக்கு வந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டாலருக்கு வந்த வாழ்வு

புதிய ஏற்பாடு:

அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம்  இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று மிதப்பில் உலகப் பொருளாதாரத்தையே தன் கைக்குள் அடக்கியாளப் பார்க்கிறது. அமெரிக்க அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து ஏமாற உடன்படாத நாடுகளைத் தன் வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடைகள் விதிக்கிறது.

டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால்தான் அமெரிக்க அரசின் கொட்டமும் அடங்கும். இது சாபம் அல்ல. டாலர் தான் என்றென்றும் உலகப் பணமாக இருந்ததா, என்ன? இல்லவே இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா? உலக வரலாற்றில் எந்தெந்த நாடுகள் வல்லரசுகளாக முன்னணியில் இருந்தனவோ அந்தந்த நாடுகளின் நாணயம் உலகப்பணமாகத் தாக்கம் செலுத்தியுள்ளது. அவ்வாறு முதலில் போர்த்துக்கீசிய நாணயத்திலிருந்து டாலர் வரை உலகப் பணமாக 6 நாணயங்கள் மாறியுள்ளன. டாலருக்கு முன்பு பிரிட்டிஷ் பவுண்டு உலகப் பணமாக இருந்தது. வரலாற்று வழியாக உலகப் பணமாக ஒரு நாணயத்தின் ஆயுட்காலம் சராசரியாக 90 ஆண்டுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறப்பு என்று இறந்தால் இறப்பும் உண்டு இல்லையா, அதற்கு டாலர் மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனால் டாலர் தான் ஏற்கெனவே இறந்து பிணமாகி விட்டது என்று கூறினோமே! ஆமாம் அமெரிக்க டாலர் செத்தும் 76 ஆண்டுகளாக உலகப் பணமாக நீடித்து வருகிறது. அது எப்படி என்பதைப் பார்ப்போமா?

தங்கத்தின் மதிப்பு குறைந்தால் கூட அமெரிக்க டாலர் மதிப்பு குறையாது, டாலர் விலையுயர்ந்தது, அமெரிக்கா சம்பந்தப்பட்ட அனைத்துமே விலையுயர்ந்ததுதான். ஏனென்றால் அமெரிக்கப் பொருளாதாரம் நவீனமயம், தொழில்வளர்ச்சி மற்றும் வெளிப்படைத் தன்மையால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி ஆராய்ந்தால் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என அதிர்ந்து போவோம். ஏமாந்தது நீங்களும் நானும் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் 37 வருடங்களுக்கு மேல் ஏமாற்றியுள்ளது. இது எப்படிச் சாத்தியமானது.

உதாரணமாக நாம் ஒரு கடையில் தங்கம் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அது 24 காரட் மதிப்பில் இருந்ததால் நம்பிக்கை ஏற்பட்டு அந்தக் கடையின் வாடிக்கையாளராகி விடுகிறோம்., சில மாதங்களுக்குப் பின் தங்கத்துக்கு பதிலாக அச்சு அசலாகத் தங்கம் போல் உள்ள மதிப்பில்லாத போலியை கடைக்காரர் நம் தலையில் கட்டுகிறார். ஆனால் நம்பிக்கை, நாணயம், கைராசி அடிப்படையில் வாடிக்கையாளரான நமக்கு வாங்கிய பொருளின் மதிப்பைச் சரிபார்க்க வேண்டும் என்று ஒரு போதும் தோன்றவில்லை. ஆனால் நம் இரவல் பணத்தில் கடைக்காரர் இலவசமாக ஒரு சொகுசு வாழ்க்கையையும், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்று அமோகமாக வாழ்கிறார். இப்போது கடைக்காரருக்கு பதிலாக அமெரிக்க அரசையும், போலித்தங்கத்திற்கு பதில் டாலரையும் போட்டுப் பார்த்தால் நாம் ஏமாந்து போன கதையின் சுருக்கம் கிடைக்கும்.

டாலர் பற்றிய உண்மையை அறிய முதலில் டாலர் எப்பொழுது உலகப் பணமானது என்பதிலிருந்து பார்ப்போம். டாலருக்கு முன் பிரிட்டிஷ் பவுண்டுதான் உலகப் பணமாக இருந்தது என்று கூறியிருந்தோம் இல்லையா.. இந்தியாவிடமிருந்து பெருமளவு சுரண்டியிருந்த போதும் இரண்டு உலகப்போர்களால் பிரிட்டிஷ் பொருளாதாரம் கடனில் மூழ்கி நிலைகுலைந்ததால் பிரிட்டனின் தங்க இருப்பு குறைந்து போனது. அதனால் பிரிட்டிஷ் பவுண்டை தங்கமாக மாற்ற வழியில்லாமல் போனது. போரில் நேரடியாகப் பங்கேற்காத அமெரிக்கா ஆயுத விற்பனையால் பெருலாபம் பெற்று அதிக உபரித் தங்கத்தைக் கொண்டிருந்தது. உலகின் தங்க இருப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்தது, அதனால் டாலர் அதிகாரப்பூர்வமாக உலக பணமாகும் தகுநிலை பெற்றது.

இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களில்,1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போரினால் பாதிக்கப்பட்ட சர்வதேசப் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி ஐக்கிய நாடுகளின் நாணய மற்றும் நிதி மாநாடு (இதுவே பிரெட்டன்வுட்ஸ் மாநாடு என்று அழைக்கப்படுகிறது) நியூ ஹாம்ப்ஷயரின் பிரெட்டன்வுட்ஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் உலகின் 44 நாடுகளிலிருந்தும் 730 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மூன்று வாரம் நடைபெற்ற மாநாட்டில் அன்று ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய நிதி அமைப்புகளே இன்று நவீன தாராளமயத்தால் உலகமக்களை அடக்கியாண்டு வருகின்றன.

அந்த அமைப்புகளாவன:

  1. சர்வதேசப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐபிஆர்டி) இதுதான் இப்போது உலக வங்கி என்று அழைக்கப்படுகிறது.
  2. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்). கூடுதலாக, வணிகம் மற்றும் கட்டண வீதங்கள் தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) ஏற்படுத்தப்பட்டது இது தற்போது உலக வர்த்தக அமைப்பு (WTO )என அழைக்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் தங்க மதிப்பின் அடிப்படையில் உலகப் பணமாக / சர்வதேசப் பணமாக அங்கீகரிக்கப்பட்டது. $35 அமெரிக்க டாலரின் மதிப்பு நிலையான விகிதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு முழுமையாக மாற்றத்தக்கதாக நிர்ணயிக்கப்பட்டது. உலகளாவிய நாணயங்களும் யு.எஸ். டாலருடன் இணைக்கப்பட்டன. இவ்வாறு அமெரிக்கா உலகின் புதிய பொருளாதாரத் தலைவராக உருவெடுத்தது. பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் விளைவாக, டாலர் "தங்கத்தைப் போலவே பாதுகாப்பானது" என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

1960களில் அமெரிக்காவின் வெளிநாட்டுத் தலையீடுகளாலும், ஆடம்பர நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உபரித் தங்கத்தின் மதிப்பு குறைந்து போனது. வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரால் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கடன்பட்டிருந்தது. இந்தப் பெருகிவரும் கடனாலும், தொடர்ச்சியான மோசமான நிதி/நாணயக் கொள்கைகளாலும் அமெரிக்க டாலர் மதிப்பிழந்தது. மற்ற நாடுகள் டாலரின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கின. தங்க இருப்பு குறைந்த நிலையில் மற்ற நாடுகளிடம் உள்ள டாலர்களுக்கு ஈடாக அமெரிக்கா தங்கம் வழங்க வேண்டியிருந்தது. இவ்வாறு வாஷிங்க்டன் தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டது. 1971 ஆகஸ்ட் 15,இல், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் யு.எஸ். டாலர்களை இனிமேல் தங்கமாக மாற்ற முடியாது என பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டை அதிகாரப்பூர்வமாக முடித்துவைத்து உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இவ்வாறு உலகப்பணமாகிய அமெரிக்க டாலர் 27 வயதிலே மதிப்பிழந்து மண்டையைப் போட்டது அதாவது மதிப்பில்லா வெற்றுக் காகிதமானது.

புதிய ஏற்பாடு:

அமெரிக்கா தங்க சாளரத்தை அதாவது டாலருக்கான தங்க மாற்றீட்டை ஒரு சுமையாக, தனது செலவினங்களுக்கு ஒரு தடையாகக் கருதியதால் தங்க சாளரத்தை மூடியது."தங்க சாளரத்தை மூடுவதன்" மூலம், வாஷிங்டன் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையை மட்டுமல்ல - உலகளாவிய பொருளாதாரக் கொள்கையையும் பாதித்தது. பிரெட்டன்வுட்ஸின் சர்வதேச தங்கத் தரத்தின் கீழ், அனைத்து நாணயங்களும் டாலரின் மதிப்பிலிருந்து அவற்றின் மதிப்பைப் பெற்றன. டாலர் அதன் தங்க இருப்புகளின் நிலையான விலையிலிருந்து அதன் மதிப்பைப் பெற்றது. ஆனால் டாலரின் மதிப்பு தங்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட போது, டாலர் “மிதக்கும்” நாணயமானது” (floating currency).அதாவது மதிப்பு நிர்ணயிக்கப்படாத நாணயமானது. “மிதக்கும் நாணயம்” என்பதற்கு, நாணயத்தின் மதிப்பு எதனுடனும் இணைக்கப்படவில்லை என்று பொருள். டாலர் ஒரு "மிதக்கும்" நாணயமாக மாறிய போது, முன்னர் டாலருடன் பிணைக்கப்பட்டிருந்த உலகின் பிற நாணயங்கள் திடீரென்று "மிதக்கும்" நாணயங்களாக மாறின. அது நாணய ஊக வணிகத்தையே ஊக்குவித்தது.

எப்படியாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க செய்யவேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாயிருந்தது. ஏன் உலகப் பொருளாதாரத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற பொது நலமா என்ன? இல்லை டாலர் உலகப்பணமாக இல்லாமல் போனால் பிறகு எப்படி அமெரிக்கா விரும்பிய படி ஏகாதிபத்தியப் போர்ச் செலவுகள் செய்ய முடியும்? அந்நாட்டின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு யார் தீனி போட முடியும்? என்ற சுய தன்னலம்தான்.

அமெரிக்கா நிதி ஒழுங்கை நிலைநாட்ட விரும்பவில்லை. மற்ற நாடுகளின் தயவில் புதிதாய்க் கிடைத்த இரவல் ஆடம்பர வசதி வாய்ப்பையும் விட விரும்பவில்லை. நிதி ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என மற்ற நாடுகளை ஏவும் அமெரிக்க அரசு, தனது நாணயத்தின் மதிப்பில் நிதி ஒழுங்கை நிலைநாட்டவில்லை. டாலரை நியாயமான முறையில் உலகப் பணமாக நீடிக்கவைக்க அமெரிக்கா என்ன செய்திருக்க வேண்டும்? முதலாவதாக தனது பெருகிவரும் கடனையும், செலவினங்களையும் குறைத்திருக்க வேண்டும். இரண்டாவதாக புதிய பொருளாதார யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் துல்லியமாக தங்கத்தின் டாலர் விலையை அதிகரித்திருக்கவேண்டும். இதைச் செய்திருந்தால் டாலர் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான நம்பகத் தன்மையை மீட்டெடுத்திருக்கலாம். ஆனால் இவை இரண்டுமே நிதிக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரப் பொறுப்பாண்மையையும் கோருவதால் ஆடம்பர அமெரிக்கா அவற்றை விரும்பவில்லை, குறுக்கு வழியையே விரும்பியது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்சன் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர், பிரெட்டன்வுட்ஸ் ஏற்பாட்டின் கீழ் சர்வதேசத் தங்கத் தரத்தை நீக்குவது அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தனர். அமெரிக்கா தனது ஆடம்பர மற்றும் போர்ச் செலவினங்களை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டுமானால் இந்த "செயற்கை டாலர் தேவையை" பராமரிப்பது மிக முக்கியமானது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

டாலரைத் தங்கமாக மாற்ற முடியாததால், சர்வதேச அளவில் அதன் நம்பகத்தன்மை காலாவதியாகி விட்டது. அதனால் உலக அளவில் டாலரின் தேவை குறைந்து விட்டால் அதன், மதிப்பும் குறைந்து விடும். பின் அமெரிக்கா நினைத்தபடி செலவு செய்ய முடியாது. என்ன செய்தாவது டாலரை உலகப் பணமாக நீடிக்க வைக்க வேண்டும், ஆனால் தங்கச்சுமை வேண்டாம் என்றே முடிவு செய்தனர்.

டாலரின் மதிப்பை அதிகரிக்க வேண்டுமானால் டாலருக்கான தேவை அதிகமாக வேண்டும். டாலருக்கான சர்வதேசத் தேவையை அதிகமாக்க வேண்டுமானால் எந்தப் பொருளுக்கு சர்வதேச அளவில் அதிகத் தேவையுள்ளதோ அந்தப் பொருளின் வர்த்தகத்தை டாலருடன் கோர்த்து விட வேண்டும், அதாவது டாலரில் விற்க வாங்கச் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் நிக்சன் அரசு தீர்மானித்தது உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள், கச்சா எண்ணெய்க்கே என்றென்றும் குறையாத அதிகத் தேவை உள்ளதால் கச்சா எண்ணெய் விற்பனையை டாலருடன் கோர்த்து விட முடிவு செய்தது.

தீவிர முயற்சிகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவையைத் தக்கவைக்கும் முயற்சியில், பெட்ரோ டாலர் அமைப்பு என்று புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டது.

பெட்ரோ டாலர்:

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவுதி அரச குடும்பத்துடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் மூலம் 1973ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பெட்ரோ டாலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, 1) சவுதி அரேபியா எண்ணெய் விற்பனை அனைத்தையும் யு.எஸ். டாலர்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யு.எஸ். டாலர் தவிர வேறு எந்த நாட்டுப் பணத்தையும் தங்கள் எண்ணெய் ஏற்றுமதிக்கான கட்டணமாக சவுதி அரேபியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.) இவ்வாறு சவுதி அரேபியாவிலிருந்து ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் சவுதிப் பணமான ரியாலில் விற்க அமெரிக்கா தடை விதித்தது. இந்தப் புதிய ஏற்பாட்டின் கீழ், சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வாங்க முற்படும் எந்தவொரு நாடும் முதலில் தங்கள் சொந்தத் தேசிய நாணயத்தை யு.எஸ். டாலராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

2) சவுதி அரேபியா தங்கள் உபரி வருவாயை யு.எஸ். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு பதிலாக அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்கள் வழங்குவதாகவும் இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து அதன் எண்ணெய் வயல்களைப் பாதுகாப்பதாகவும் வாக்குக் கொடுத்தது.

தங்கத்துக்கு டாலர் என்றிருந்த அமைப்பு எண்ணெய்க்கு டாலர் என்று மாறியது. எண்ணெய் உற்பத்தியாளரால் எண்ணெய் விற்பனைக்கு ஈடாகப் பெறப்படும் அமெரிக்க டாலரே பெட்ரோ டாலர் என அழைக்கப்படுகிறது, பெட்ரோ டாலர்களை அமெரிக்க நிதிப் பத்திரங்களில் முதலீடு செய்வது பெட்ரோ டாலர் மறுசுழற்சி என அழைக்கப்படுகிறது..

1975இல் சவுதியின் ஆதிக்கத்தினால் ஒபெக் அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எண்ணெய் விற்பனையை அமெரிக்க டாலர்களில் செய்யவும், அமெரிக்க. அரசின் கடன் பத்திரங்களில் தங்கள் உபரி எண்ணெய் வருமானத்தை முதலீடு செய்யவும் ஒப்புக் கொண்டன.

இதனால் அமெரிக்க டாலருக்கான தேவை செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் எண்ணெய்த் தேவை காரணமாக அமெரிக்க. டாலர்களுக்கான தேவையும் அதிகரித்தது. இவ்வாறு டாலர் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டது.

யு.எஸ். டாலர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பால் அமெரிக்க அரசு பெருங்கொள்ளை அடிக்கிறது நாசூக்காகச் சொல்ல வேண்டுமெனில் பெரும் லாபமடைகிறது. இது எப்படி எனப் பார்த்தோமானால், டாலர்களுக்கான உலகளாவிய தேவை அமெரிக்க மத்திய அரசுக்கு மேலும் டாலர் அச்சிட “அனுமதிச் சீட்டு” அளிக்கிறது. அது வரையறை இல்லாமல் தன் விருப்பம் போல் அச்சிடுகிறது. மிதக்கும் நாணயங்களின் இந்தப் புதிய சகாப்தத்தில் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தங்கத் தரத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால் புதிய நாணய உற்பத்திக்கு ஈடான தங்க இருப்புக்கள் இல்லை என்ற அச்சம் இல்லாமல் இப்போது விரும்பிய படி "டாய்லெட் பேப்பர்” போல் டாலர் நோட்டுக்களை அச்சிட்டுக் கொண்டே இருக்கிறது.

மற்ற நாடுகளில் இந்தளவிற்குப் பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் எக்கச்சக்கமாக உயர்ந்து விடும். ஆனால் அமெரிக்கா பணவீக்கத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா அதிக அளவில் ஆயுதங்களை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை, அமெரிக்க டாலரையும் ஏற்றுமதி செய்கிறது.

இதனால்தான் புதிய "எண்ணெய்க்கான டாலர்கள்" முறை முந்தைய "தங்கத்திற்கான டாலர்கள்" முறையை விட அமெரிக்க அரசால் மிகவும் விரும்பப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கான உலகளாவிய தேவையின் முதன்மைப் பயனாளி அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஆகும். இது பொதுத்துறை வங்கியல்ல. இது ஒரு தனியார் வங்கி. யு.எஸ். டாலர் பெடரல் ரிசர்வ் மூலம் அமெரிக்க அரசாங்கத்திற்குக் கடனாக வழங்கப்படுகிறது, டாலர்களை பெடரல் ரிசர்வ் வங்கிக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இவ்வாறுதான் அமெரிக்கா குறுக்கு வழியில் ஓர் இடைத்தரகு ஏற்பாட்டின் மூலம் நாணயமில்லா டாலருக்கு நாணயமில்லா முறையில் மறுவாழ்வு கொடுக்க சவுதி அரேபியாவைக் கட்டாயப்படுத்தியது.      

 

http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-may20/40253-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.