Jump to content

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை

தன்னிச்சையான கைதுகள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் உரிமைகள் குழுவென்ற அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த பரப்புரைகளை மேற்கொண்டுள்ள மக்கள் உரிமை குழு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றப்படுதல் நியாயமான விசாரiணைகள் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமீபகாலத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து குறிப்பிட்ட அமைப்பு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.srilanka-police-5.jpg
இவ்வாறான மீறல்கள் தொடச்சியாக காணப்பட்டுள்ள போதிலும் தனது கருத்தினை வெளிப்படுத்தியமைக்கா ரம்ஜி ராசீக் என்ற சமூகசெயற்பாட்டாளர் கைதுசெய்யப்பட்டமையும்,பிரபலமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டமையும் இலங்கையில் சட்டத்தின் ஆட்சியின் வீழ்ச்சி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Hejaaz-Hizbullah-300x211.jpg

இது தவிர கொவிட் 19 தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கும் பொலிஸ் ஊரடங்குகள், போன்றவற்றினால் கருத்துசுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என மக்கள் உரிமைகள் குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஏப்பிரல் 10 ம் திகதி தீவிரவாத கொள்கைகளிற்கு எதிராக கொள்கை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என தனது முகநூலில் பதிவு செய்தமைக்காக ரம்ஜிராசீக் கைதுசெய்யப்பட்டார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவர் இனவெறிக்கு எதிரானவர் சமூக ஐக்கியம் சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிப்பவர் என்பது அவரது முகநூல் பதிவுகள் மூலம் வெளியாகியுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.ramzy-razzek.jpg
அவர் மீது ஐசிசிபிஆர் மற்றும் சைபர் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் ஆபத்துள்ளது என குறிப்பிட்டுள்ள மக்கள் உரிமைகள் குழு மனித உரிமை ஆணைக்குழு வெறுப்பை தூண்டும் பேச்சு குறித்த சட்டங்கள் பற்றி வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களை இலங்கை காவல்துறையினர் புறக்கணிப்பது கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளது.

பௌத்தத்தை இழிவுபடுத்தும் நாவலை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் எழுத்தாளர் சக்திக சத்குமார தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும், பௌத்த இலச்சினைகள் காணப்பட்ட சேலையை அணிந்தமைக்காக இஸ்லாமிய பெண் கைதுசெய்யப்பட்டமையும் ஐசிசிபிஆர் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சிறந்த உதாரணங்கள் என மக்கள் உரிமை குழு தெரிவித்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏப்பிரல் 14 ம் திகதி கைதுசெய்யப்பட்ட பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஒரு மாத காலத்திற்கு மேல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் சட்டத்தரணிகளை பார்ப்பதற்கான அனுமதியில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் மக்கள் உரிமைகள் குழு என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை ஹில்புல்லாவிற்கு உரிய நடைமுறைகள் மறுக்கப்பட்டமை ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என மக்கள் உரிமைகளிற்கான குழு தெரிவித்துள்ளது.hezaz-hisbulla1-300x158.jpg
சர்வதேச சமூகத்தினதும் இலங்கையர்களினதும் கவனம் கொரோனா வைரஸ் குறித்து திரும்பியுள்ளதை பயன்படுத்தி அரச அதிகாரிகள் இலங்கையின் அரச அமைப்பும, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையும் உத்தரவாதம் செய்துள்ள உரிமைகளை மோசமாக மீறிவருகின்றனர் என மக்கள் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.coronavirus__Lanka_AP-300x150.jpg
கொரோனா வைரஸ் பாதிப்புகளிற்கு இனமுத்திரை குத்துதல்.முஸ்லீம்களிற்கும் சில கிறிஸ்தவர்களிற்கும் உடல்களை புதைப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுதல்,போன்ற கொரோனா வைரசினை அடிப்படையாக கொண்ட இனவெறியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது இலங்கை மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரிதவேகத்தில் பறிக்கப்படுவதை காணமுடிகின்றது எனவும் மக்களின் உரிமைகளிற்கான குழு தெரிவித்துள்ளது.

 

http://thinakkural.lk/article/44528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.