Jump to content

வடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்?


Recommended Posts

-சுபத்ரா


இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

Muhammad_Saad_Khattak.jpg


எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார். மறுநாளும் அங்கேயே தங்கியிருந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலையும் வெளிப்புறத்தில் இருந்து பார்வையிட்டிருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, யாரும் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருந்த சூழலில், ஆலயத்தின் முகப்புப் பகுதியில் நின்று எடுத்த படத்தை வெளியிட்டிருக்கிறார் பாகிஸதான் தூதுவர்.

இவர் தனது யாழ்ப்பாணப் பயணம் குறித்து - குறிப்பாக, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு செய்த அன்பளிப்புகள் குறித்து பேஸ்புக்கில் இட்ட பதிவுகளுக்கு அதிகளவான பாகிஸ்தானியர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அவரது செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். தங்களின் நாட்டுக்கான சிறந்த பணியை ஆற்றுவதாக பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள்.
திடீரென - பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட இந்தப் பயணம் பலரதும், புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை ஆளுநர் செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ருவிட்டர் பதிவில் அதற்காக அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தூதுவராக முகமட் சாட் ஹட்டக் கடந்த ஜனவரி 15ஆம் திகதி பொறுப்பேற்றார். அதற்குப் பின்னர், ஜனவரி 20ஆம் திகதி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சான்றுப் பத்திரங்களைக் கையாளித்தார்.

அதற்குப் பிறகு, அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை, வர்த்தக சமூகத்தினரை, முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த போதும், எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரையும் சந்திக்கவில்லை.

அவ்வாறான நிலையில், அவரது கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது குறித்து ஆச்சரியம் கொள்வது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர்.

பிரெஞ்சு இராணுவ இளநிலை அதிகாரிகள் கற்கையையும், பிரித்தானியாவில் பாதுகாப்பு புலனாய்வு பணிப்பாளர் கற்கையையும், மேற்கொண்டவர்.

அரசியல் விஞ்ஞானம், போர்க் கற்கைகளில் முதுமாணிப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பான முதுதத்துவமாணி பட்டமும் பெற்றுள்ளவர்.

பாகிஸ்தானில் எப்போதும, குண்டுச் சத்தங்கள் கேட்கின்ற பலுசிஸ்தானிலும், கைபர் பக்துன்வா பள்ளத்தாக்கிலும், கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்ற இவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிந்தனைக் குழாம்களுடன் இணைந்து இயங்கியவர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த இவர், அச்சு ஊடகங்களிலும், கட்டுரைகளை எழுதி வந்தார்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட பாகிஸ்தான் தூதுவர் இதற்கு முன்னர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில்- எதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கத்தோலிக்க பாதிரியார்களினால் நடத்தப்படும் ஒரு பழம்பெரும், புகழ் பூத்த பாடசாலை.

தமது நாட்டிலும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி புகழ்பெற்று விளங்குகிறது என்றும், அதனாலேயே, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை தாம் தேடி வந்ததாகவும், பாகிஸ்தான் தூதுவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானின் கராச்சியில கத்தோலிக்க பாதிரியார்களால் நடத்தப்படும் சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை மற்றும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி (பல்கலைக்கழகம்) என்பன, மிகப் புகழ்பெற்றவை.

1861இல் தொடங்கப்பட்ட இந்த சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை கராச்சியில் உள்ள இரண்டாவது பழைமையாக பாடசாலை. இதனை விடப் பழைமையானது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி. இது 1850ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு பிரதமர்களை மத்திரமன்றி, இந்தியாவின் துணைப் பிரதமர் ஒருவரையும் உருவாக்கியது கராச்சி சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை தான்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான சௌகத் அசீஸ், மொகமட் கான் ஜூனேயோ, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆசிவ் அலி சர்தாரி, பர்வேஸ் முஷாரப், போன்றவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தான்.

சிந்து மாகாணத்தின், நான்கு முதலமைச்சர்கள், பாகிஸ்தான் அமைச்சர்கள், போன்றவர்களை மாத்திரமன்றி, ஜாவிட் மியான்டட், டனிஸ் கனேரியா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களையும் உருவாக்கியிருக்கிறது.

அவ்வாறான ஒரு பாடசாலையின் இணைப் பாடசாலையாக கருதி, யாழ்ப்பாணத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் வந்திருப்பது அதிகம் ஆச்சரியமானது அல்ல.

Muhammad_Saad_Khattak_new.jpg

20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவ்வாறாயின் அவர் 2000ஆம் ஆண்டளவில், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அது விடுதலைப் புலிகளுடன் கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்தது. 
யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் உதவிகளை வழங்கியது.
அதில் தற்போதைய பாகிஸ்தான் தூதுவருக்கு பங்கு இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது,

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பகுதியாக இருந்த  கடந்த வாரமே திறந்து விடப்பட்ட கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் வந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த சூழலில், பாகிஸ்தான் தூதுவர் எந்த கட்டுப்பாடுகளுமின்றி யாழ்ப்பாண நகரில் நடமாடியிருக்கிறார்.

கொரோனாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் என்று எதுவும் கிடையாது.

இந்திய தூதுவர் கோபால் பாக்லே கொழும்பு வந்து, இரண்டு வாரங்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே, வழக்கமான பணிகளை ஆரம்பித்தார்.

அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பு பெற்றது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

அவரது பயணத்துக்கு அரசாங்க ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஏனென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து விட்டு, தனது மகளை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் வீட்டுக்குச் சென்று, பொலிசாரும், சுகாதார அதிகாரிகளும், சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் தூதுவர் அரசாங்க பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, அவரைத் தனிமைப்படுத்தவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை.

பாகிஸ்தான் தூதுவரின் இந்தப் பயணம், தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ் அரசியல் தரப்புகளுடன் அவர் பெரிதாக எந்த சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

இலங்கையின் வடகுப் பகுதியில், பாகிஸ்தானின், நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டது இல்லை.

ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எப்போதுமே, இன்னொரு முகம் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது,

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர்களாக பெரும்பாலும், இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களும், தூதுரகப் பணிகளுக்கு அமர்த்தப்படும், ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதிலேயே கவனம் செலுத்துவதாக புதுடெல்லி நம்புகிறது.

இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் தூதுவரின் வடக்கிற்கான பயணத்தை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.
மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.
இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

புதிய இந்திய தூதுவர், மறைந்த ஆறுமுகன் தொண்டமானை தவிர, தமிழர் தரப்பில் வேறெவருடனும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், சந்திப்புகளை நடத்தவில்லை.

மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/83121

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் தான் இருக்கு திருவிளா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இனி தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகட்டுரைகள் படித்து மகிழலாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.

இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

இவ்வளவு அடி அடித்தும் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று பார்க்க வந்திருக்கலாம்.

இந்தியாவில் இருந்து ஒரு கப்பல் கிரிக்கட் உபகரணங்கள் யாழ் பாடசாலைகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

1 hour ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

ஈழத்தமிழர்கள் தான் அதிக 'அடுப்பங்கரை சூட்டை' இந்தியாவிடம் இருந்து கண்டவர்கள்.

இருந்தாலும், சீனாவின் பக்கமோ இல்லை பாகிஸ்தான் பக்கமோ சாயாமல் சரியாமல், டெல்லி பக்கமே பார்த்து தலைவைத்து துயில் கொள்பவர்கள். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது பொருளாதார அபிவிருத்தி கண்ட மாநிலமாகவும் அமைதியான மாநிலமாகவும் இந்திய கொள்கைகளுக்கு கட்டுண்ட மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. ஆக, எதை வைத்து டெல்லி பயம் கொள்ளும்?  

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

அவ்வாறு சிங்களவர்கள் நினைத்தால் அதற்கு ஒரு காரணமே உள்ளது : இவ்வாறான ஆதரமில்லாதா கூற்றை வைத்து 80% பௌத்தர்களை ஏமாற்றும் நோக்கமே. மேலும், அதன் மூலம் சிறுபான்மை மக்களை நசுக்கி, இறுதியில் நாட்டையும் அழிவு பாதையில் இட்டு செல்வதுமே !  

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

இனித்தான் தான் இருக்கு திருவிளா

என்ன‌ மூத்த‌வ‌ரே , யாழ்க‌ள‌ வாத்தியார் வ‌ருவ‌தில்லை என்ற‌ நினைப்பில் க‌ண்ட‌ ப‌டி எழுதுறீங்க‌ள் /

இனித்தான் தான் இருக்கு திருவிழா , ஊரில் பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்சிட்டு வ‌ந்த‌ நீங்க‌ளே இப்ப‌டி எழுத‌லாமா , நாம‌ தான் அரைகுறை ப‌டிப்பு ப‌டிச்சோம் ஊரில் போர் சூழ‌லில் /

ஜ‌ஸ் யோக் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

Link to comment
Share on other sites

36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

பூனை சூடு காண்பதற்கு முன்னர் அடுப்பங்கரைப் பக்கம் வந்ததா ? 🤔

7 hours ago, ampanai said:

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

ஏனென்றால் நாங்கள் இந்தியாவுக்கு எப்போதுமே சூத்திரர்கள்தான். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, manimaran said:

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 

சரியாகச் சொன்னீர்கள்.

நாங்கள் இந்திய சார்பு நிலைப்பாட்டால் இதுவரை அவமானப்பட்டது ஒன்றுதான் மிச்சம். தன்மானத்துடன் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றால் சிங்களத்துடன் வாழ்வது எவ்வளவோ மேல். 👍

எமது அரசியற் தலைமைகள் எல்லோருமே (சுமந்திரனைத் தவிர்த்து) இந்தியாவிடம் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பார்கள் என எதிர்பார்த்தால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது 🙂

எப்போது நாம் சுயாதீனமான கொள்கை ஒன்றைக் கைக்கொள்ள முயற்சிக்கின்றோமோ அன்றுதான் எல்லோரும் எம்மைத் தேடி வருவார்கள். 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

அதுதான் விடயமே. தனது பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாடி பிடித்தறிய முயன்றிருக்கலாம். 🤔

வடக்கே கால் வைப்பதற்கு ஏதாவது ஒரு வலுவான காரணம் வேண்டும். அதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுதான் St. Patrick’s College. இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அவர் ஒரு இராச தந்திரியாக மட்டும் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். ஒஸ்மானியாக் கல்லூரிக்குப் போயிருந்தால் இலங்கையில் நொந்து போயுள்ள முசிலிம்களுக்கு தெம்பைக் கொடுக்கும் செய்தியாக முடிந்திருக்கும் (கோட்டபாயவிற்கு வேறு அது பிடிக்காது). அதனைத் தவிர்த்து வடக்கிலுள்ள தமிழர்களைப் பார்க்க வந்திருப்பதாக நிறுவ முயற்சிக்கிறார்.🙂

மிக விரைவில் கச்ச தீவிற்கும் நெடுந்தீவுக்கும் போனாலும் ஆச்சரியப்பட முடியாது. 🙂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

மிக விரைவில் அந்த சந்திப்பு நடக்கும். இருந்து பாருங்கள். 👍

 

2 hours ago, Nathamuni said:

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

கோடாரிக் காம்புகளை நாம்தானே தெரிவு செய்தோம். அவரைக் குறை கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. 😂

13 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

பாகிஸ்தானின் அழைப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆன்வ்ராட் ھ ạ yhmpt அவரது அலுவலகத்தில் சந்திப்பில் பாகிஸ்தான் மாகாணத்தில் இருபக்க உறவுகள் குறித்து விரிவான உரையாடல். பாகிஸ்தான் அரசாங்கமாக இருந்த அனைத்து வகையான ஆதரவையும் நான் நம்பினேன். நன்றியுடன்.

100592525_1714260665381506_9189121034173808640_o.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=VDNZl4dZE_MAX807BSo&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ddbc2fc54ff0ee335d5fe3b0685f8901&oe=5EF9E8C2

photo?fbid=1714260655381507&set=pcb.1714

இதையும் போட்டுள்ளார் 

97259423_10217396987144779_1402650655750881280_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=kngAUORBPNQAX_lJL2d&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=c5d5e5e7116a40838523eb4e3913c5bf&oe=5EFCDC8F

photo?fbid=10217396987104778&set=a.11131

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

1) Jaffna Central College சைவப் பாடசாலையல்ல. மெதடிஸ்ற் கிறீத்துவக் கல்லூரி. தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் (எனது தகவல் சரியானால்) சமய ரீதியிலான அதிபர் நியமனங்கள் இல்லை என நம்புகிறேன். 

2) Jaffna St. Patrick’s College ஐ தெரிவு செய்ததற்கு கட்டுரை ஆசிரியர் கூறிய காரணங்கள் பொருந்தலாம். 

3) யாழ்ப்பாணத்தில்  மெதுவாக சந்தடியின்றி கால் எடுத்து வைக்க கொறோனா ஒர் வாய்ப்பை வழங்கியுள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு கெட்டியாகப் பிடிக்குமானால் எல்லோருமே எம்மைத் தேடி சீர் வரிசையுடன் வருவார்கள். 👍

ஆனால் நாம் எப்போதும் அடிமைச்  சேவகம் செய்து பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே. வடக்கின் மனம் நோக விரும்பப் போவதில்லை. ☹️

(வடக்கத்தேயர் வடக்கத்தேயர் என்று இந்தியரை குறைவாக எடைபோடும் எமது சமூகம் வடக்கத்தயவர்களுக்கு பயப்படுவது எவ்வளவு முரண்ணகை 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை மதிக்கிறார் என்றால் நவீன சிந்தனை கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும். மதவாத தாடியும் இல்லை முஸ்லிம் உடைக்கு பதிலாக ரிசேட் 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.