Jump to content

வடக்கின் மீது கண் வைக்கிறதா பாகிஸ்தான்?


Recommended Posts

-சுபத்ரா


இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

Muhammad_Saad_Khattak.jpg


எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிருக்கிறார். மறுநாளும் அங்கேயே தங்கியிருந்து, நல்லூர் கந்தசுவாமி கோவிலையும் வெளிப்புறத்தில் இருந்து பார்வையிட்டிருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, யாரும் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டிருந்த சூழலில், ஆலயத்தின் முகப்புப் பகுதியில் நின்று எடுத்த படத்தை வெளியிட்டிருக்கிறார் பாகிஸதான் தூதுவர்.

இவர் தனது யாழ்ப்பாணப் பயணம் குறித்து - குறிப்பாக, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு செய்த அன்பளிப்புகள் குறித்து பேஸ்புக்கில் இட்ட பதிவுகளுக்கு அதிகளவான பாகிஸ்தானியர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அவரது செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். தங்களின் நாட்டுக்கான சிறந்த பணியை ஆற்றுவதாக பாராட்டு மழை பொழிந்திருக்கிறார்கள்.
திடீரென - பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட இந்தப் பயணம் பலரதும், புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
அவரது பயணத்துக்கான ஒழுங்குகளை ஆளுநர் செயலகம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ருவிட்டர் பதிவில் அதற்காக அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தூதுவராக முகமட் சாட் ஹட்டக் கடந்த ஜனவரி 15ஆம் திகதி பொறுப்பேற்றார். அதற்குப் பின்னர், ஜனவரி 20ஆம் திகதி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சான்றுப் பத்திரங்களைக் கையாளித்தார்.

அதற்குப் பிறகு, அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை, வர்த்தக சமூகத்தினரை, முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்த போதும், எந்தவொரு தமிழ் அரசியல் தரப்பினரையும் சந்திக்கவில்லை.

அவ்வாறான நிலையில், அவரது கவனம் யாழ்ப்பாணத்தின் மீது திரும்பியது குறித்து ஆச்சரியம் கொள்வது தவிர்க்க முடியாதது.

பாகிஸ்தான் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, முகமட் சாட் ஹட்டக்35 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேஜர் ஜெனரல் அதிகாரியாக இவர் இருந்தவர்.

பிரெஞ்சு இராணுவ இளநிலை அதிகாரிகள் கற்கையையும், பிரித்தானியாவில் பாதுகாப்பு புலனாய்வு பணிப்பாளர் கற்கையையும், மேற்கொண்டவர்.

அரசியல் விஞ்ஞானம், போர்க் கற்கைகளில் முதுமாணிப் பட்டமும், சர்வதேச உறவுகள் தொடர்பான முதுதத்துவமாணி பட்டமும் பெற்றுள்ளவர்.

பாகிஸ்தானில் எப்போதும, குண்டுச் சத்தங்கள் கேட்கின்ற பலுசிஸ்தானிலும், கைபர் பக்துன்வா பள்ளத்தாக்கிலும், கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்ற இவர், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிந்தனைக் குழாம்களுடன் இணைந்து இயங்கியவர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த இவர், அச்சு ஊடகங்களிலும், கட்டுரைகளை எழுதி வந்தார்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட பாகிஸ்தான் தூதுவர் இதற்கு முன்னர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில்- எதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை.

யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி கத்தோலிக்க பாதிரியார்களினால் நடத்தப்படும் ஒரு பழம்பெரும், புகழ் பூத்த பாடசாலை.

தமது நாட்டிலும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி புகழ்பெற்று விளங்குகிறது என்றும், அதனாலேயே, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை தாம் தேடி வந்ததாகவும், பாகிஸ்தான் தூதுவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானின் கராச்சியில கத்தோலிக்க பாதிரியார்களால் நடத்தப்படும் சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை மற்றும், சென்.பற்றிக்ஸ் கல்லூரி (பல்கலைக்கழகம்) என்பன, மிகப் புகழ்பெற்றவை.

1861இல் தொடங்கப்பட்ட இந்த சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை கராச்சியில் உள்ள இரண்டாவது பழைமையாக பாடசாலை. இதனை விடப் பழைமையானது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி. இது 1850ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் இரண்டு ஜனாதிபதிகள், இரண்டு பிரதமர்களை மத்திரமன்றி, இந்தியாவின் துணைப் பிரதமர் ஒருவரையும் உருவாக்கியது கராச்சி சென்.பற்றிக்ஸ் உயர்நிலைப் பாடசாலை தான்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான சௌகத் அசீஸ், மொகமட் கான் ஜூனேயோ, பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிகளான ஆசிவ் அலி சர்தாரி, பர்வேஸ் முஷாரப், போன்றவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் தான்.

சிந்து மாகாணத்தின், நான்கு முதலமைச்சர்கள், பாகிஸ்தான் அமைச்சர்கள், போன்றவர்களை மாத்திரமன்றி, ஜாவிட் மியான்டட், டனிஸ் கனேரியா போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ர்களையும் உருவாக்கியிருக்கிறது.

அவ்வாறான ஒரு பாடசாலையின் இணைப் பாடசாலையாக கருதி, யாழ்ப்பாணத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் வந்திருப்பது அதிகம் ஆச்சரியமானது அல்ல.

Muhammad_Saad_Khattak_new.jpg

20 ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவ்வாறாயின் அவர் 2000ஆம் ஆண்டளவில், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அது விடுதலைப் புலிகளுடன் கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது, பாகிஸ்தானின் இராணுவ உதவிகளை இலங்கை இராணுவம் பெற்றிருந்தது. 
யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பெருமளவில் உதவிகளை வழங்கியது.
அதில் தற்போதைய பாகிஸ்தான் தூதுவருக்கு பங்கு இருந்ததா என்ற கேள்வியும் உள்ளது,

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

கொரோனா அச்சுறுத்தல் அதிகமான பகுதியாக இருந்த  கடந்த வாரமே திறந்து விடப்பட்ட கொழும்பில் இருந்து, யாழ்ப்பாணம் வந்தவர்கள், சுயதனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்த சூழலில், பாகிஸ்தான் தூதுவர் எந்த கட்டுப்பாடுகளுமின்றி யாழ்ப்பாண நகரில் நடமாடியிருக்கிறார்.

கொரோனாவுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் என்று எதுவும் கிடையாது.

இந்திய தூதுவர் கோபால் பாக்லே கொழும்பு வந்து, இரண்டு வாரங்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே, வழக்கமான பணிகளை ஆரம்பித்தார்.

அவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்தில், சுகாதார நடைமுறைகளில் இருந்து விலக்களிப்பு பெற்றது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

அவரது பயணத்துக்கு அரசாங்க ஒத்துழைப்பு இருந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

ஏனென்றால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்து விட்டு, தனது மகளை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்த, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் வீட்டுக்குச் சென்று, பொலிசாரும், சுகாதார அதிகாரிகளும், சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் தூதுவர் அரசாங்க பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, அவரைத் தனிமைப்படுத்தவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை.

பாகிஸ்தான் தூதுவரின் இந்தப் பயணம், தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டத்துடன் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருந்தாலும், தமிழ் அரசியல் தரப்புகளுடன் அவர் பெரிதாக எந்த சந்திப்புகளையும் நடத்தவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

இலங்கையின் வடகுப் பகுதியில், பாகிஸ்தானின், நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டது இல்லை.

ஏனென்றால், பாகிஸ்தானுக்கு எப்போதுமே, இன்னொரு முகம் இருப்பதாக இந்தியா உறுதியாக நம்புகிறது,

இலங்கையில் பாகிஸ்தான் தூதுவர்களாக பெரும்பாலும், இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களும், தூதுரகப் பணிகளுக்கு அமர்த்தப்படும், ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளும், இந்தியாவுக்கு எதிராக செயற்படுவதிலேயே கவனம் செலுத்துவதாக புதுடெல்லி நம்புகிறது.

இந்தியாவில், பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் பாகிஸ்தான் தூதுவரின் வடக்கிற்கான பயணத்தை, இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.
மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.
இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

புதிய இந்திய தூதுவர், மறைந்த ஆறுமுகன் தொண்டமானை தவிர, தமிழர் தரப்பில் வேறெவருடனும் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், சந்திப்புகளை நடத்தவில்லை.

மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

பாகிஸ்தான தூதுவரின் இந்தப் பயணம் இந்தியாவை நிச்சயம் உசுப்பி விடும். கூடிய விரைவில் இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண பயணத்தை எதிர்பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/83121

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் தான் இருக்கு திருவிளா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இனி தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகட்டுரைகள் படித்து மகிழலாம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மற்றொரு புறத்தில், இந்தியாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட கோபால் பாக்லே, இங்கு வந்து சேர்ந்ததும், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் இணையவழியில் கலந்துரையாடியிருந்தார்.

தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்ட பின்னர், அவர், முதலில் கொழும்பு கங்காராமய விகாரைக்குத் தான் சென்றிருந்தார்.

இவையெல்லாம், சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்துவதில் இந்தியத் தூதுவர் அதிக கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்த்துகிறது.

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

இவற்றுக்கு அப்பால், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட முறைதான் அதிக கேள்விகளை எழுப்பியிருக்கிறது,

இவ்வளவு அடி அடித்தும் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறது என்று பார்க்க வந்திருக்கலாம்.

இந்தியாவில் இருந்து ஒரு கப்பல் கிரிக்கட் உபகரணங்கள் யாழ் பாடசாலைகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

1 hour ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

ஈழத்தமிழர்கள் தான் அதிக 'அடுப்பங்கரை சூட்டை' இந்தியாவிடம் இருந்து கண்டவர்கள்.

இருந்தாலும், சீனாவின் பக்கமோ இல்லை பாகிஸ்தான் பக்கமோ சாயாமல் சரியாமல், டெல்லி பக்கமே பார்த்து தலைவைத்து துயில் கொள்பவர்கள். 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இரண்டாவது பொருளாதார அபிவிருத்தி கண்ட மாநிலமாகவும் அமைதியான மாநிலமாகவும் இந்திய கொள்கைகளுக்கு கட்டுண்ட மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. ஆக, எதை வைத்து டெல்லி பயம் கொள்ளும்?  

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

சிங்களவர்கள் தமிழர்களின் மீது காட்டும் துவேசத்திற்கு காரணம் அவர்கள் மீதான அச்ச உணர்வே. பக்கத்தில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து எம்மை அழித்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு. அந்த அச்ச உணர்வைப் போக்கினால் போதும் அவர்கள் தமிழர்களை சம‍ உரிமை வழங்குவர்கள். இன்னும் சொல்லப்போனால் உண்மையான  நண்பர்களாக பழகுவார்கள் மதிப்பார்கள். 

அவ்வாறு சிங்களவர்கள் நினைத்தால் அதற்கு ஒரு காரணமே உள்ளது : இவ்வாறான ஆதரமில்லாதா கூற்றை வைத்து 80% பௌத்தர்களை ஏமாற்றும் நோக்கமே. மேலும், அதன் மூலம் சிறுபான்மை மக்களை நசுக்கி, இறுதியில் நாட்டையும் அழிவு பாதையில் இட்டு செல்வதுமே !  

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஆனால் இந்திய அரசிடம் இருப்பது தமிழர்கள் எமக்கு கீழ்பட்ட கீழ்ஜாதி சூத்திர‍ர்கள் என்ற பார்பன அதிகார திமிர். அது நாம் எவ்வளவு தான் கீழ்ப்படிந்து அவர்களை ஏற்றுக்கொண்டாலும்  எமது துன்பத்தில் தான் இன்பம் காணுமே தவிர என்றுமே எமக்கு சம உரிமை வழங்க ஒத்து கொள்ளாது. 

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

இனித்தான் தான் இருக்கு திருவிளா

என்ன‌ மூத்த‌வ‌ரே , யாழ்க‌ள‌ வாத்தியார் வ‌ருவ‌தில்லை என்ற‌ நினைப்பில் க‌ண்ட‌ ப‌டி எழுதுறீங்க‌ள் /

இனித்தான் தான் இருக்கு திருவிழா , ஊரில் பெரிய‌ ப‌டிப்பு ப‌டிச்சிட்டு வ‌ந்த‌ நீங்க‌ளே இப்ப‌டி எழுத‌லாமா , நாம‌ தான் அரைகுறை ப‌டிப்பு ப‌டிச்சோம் ஊரில் போர் சூழ‌லில் /

ஜ‌ஸ் யோக் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

Link to comment
Share on other sites

36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ampanai said:

அந்தளவிற்கு ஐயா அவர்களுக்கு துணிவு இல்லை. டெல்லியின் விருப்பத்திற்கு எதிராக மூச்சும் விடார்.  

பரவாயில்லை, டெல்லியை கொஞ்சம் என்றாலும் எமது மக்களுக்காக திருப்பும் இராசதந்திரமும் இல்லை. 

சரி, அப்ப என்ன இவரிடம் இருக்கு என கேட்டுவிடாதீர்கள்.  🙂 

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பழுவூர்கிழான் said:

நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!

பூனை சூடு காண்பதற்கு முன்னர் அடுப்பங்கரைப் பக்கம் வந்ததா ? 🤔

7 hours ago, ampanai said:

இந்திய கொள்கை வகுப்பாளர்களை தமிழர் தரப்பால் கணக்கிட முடியவில்லை. இல்லை, இந்திய கொள்கை வகுப்பாளர்களை சிங்கள + சீன + பாகிஸ்தான் கொள்கை வகுப்பாளர்கள் தொடர்ந்தும் மூக்குடை பட வைக்கிறார்களோ தெரியவில்லை. 

அன்று, ஒரு இடைக்கால தமிழீழ அரசை ஆண்டவர்கள் புது டெல்லியை பகைத்துக்கொள்ளவும் பல கலாச்சார  வழிகளால்  பின்னிபிணைந்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் சீன - பாகிஸ்தான் உறவுகளை விரும்பி இருக்கவில்லை. 

பிரிவினையை மறுத்து, ஒற்றையாட்சியை மறுத்து, ஒரே நாட்டிற்குள் அதிகரா பரவலை கேட்க்கும் இன்றைய சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பும் கூட டெல்லியை மீறி எதுவும் செய்வதில்லை. 

இருந்தும், டெல்லி தமிழர்களை இன்னும் நம்ப மறுக்கின்றது. ஏன்?  

ஏனென்றால் நாங்கள் இந்தியாவுக்கு எப்போதுமே சூத்திரர்கள்தான். 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, manimaran said:

இந்திய பார்ப்பனிய மனப்பாங்கிலான அதிகார திமிர் தமிழரை ஒருபோதும் சக மனிதனாக மதித்ததில்லை அல்லது மதிக்கப் போவதில்லை. இந்தியாவால் ஈழத்தமிருக்கு ஒரு விடுதலை கிடைக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பே எம்மை இன்னும் ஒரு கீழ் நிலைக்கே இட்டுச் செல்லும்.

இந்தியாவின் இந்த மனப்பாங்கின் விளைவே விடுதலைப்புலிகள் அவர்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
 

சரியாகச் சொன்னீர்கள்.

நாங்கள் இந்திய சார்பு நிலைப்பாட்டால் இதுவரை அவமானப்பட்டது ஒன்றுதான் மிச்சம். தன்மானத்துடன் வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்றால் சிங்களத்துடன் வாழ்வது எவ்வளவோ மேல். 👍

எமது அரசியற் தலைமைகள் எல்லோருமே (சுமந்திரனைத் தவிர்த்து) இந்தியாவிடம் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்கள். அவர்கள் சுயமாகச் சிந்திப்பார்கள் என எதிர்பார்த்தால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது 🙂

எப்போது நாம் சுயாதீனமான கொள்கை ஒன்றைக் கைக்கொள்ள முயற்சிக்கின்றோமோ அன்றுதான் எல்லோரும் எம்மைத் தேடி வருவார்கள். 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்...

இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது. 

ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார். 

எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔

அதுதான் விடயமே. தனது பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாடி பிடித்தறிய முயன்றிருக்கலாம். 🤔

வடக்கே கால் வைப்பதற்கு ஏதாவது ஒரு வலுவான காரணம் வேண்டும். அதற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுதான் St. Patrick’s College. இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

//மறுபக்கத்தில், பாகிஸ்தான் தூதுவரோ, யாழ்ப்பாணத்தின் இந்து ஆலயத்தையும், கத்தோலிக்கப் பாடசாலையையும் தமக்கு நெருக்கமானதாக காட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்.

உருது மொழியில் பேஸ்புக்கில் படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில் 500 ஆண்டுகள் பழைமையான இந்து ஆலயம் என்று அதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.//

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அவர் ஒரு இராச தந்திரியாக மட்டும் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். ஒஸ்மானியாக் கல்லூரிக்குப் போயிருந்தால் இலங்கையில் நொந்து போயுள்ள முசிலிம்களுக்கு தெம்பைக் கொடுக்கும் செய்தியாக முடிந்திருக்கும் (கோட்டபாயவிற்கு வேறு அது பிடிக்காது). அதனைத் தவிர்த்து வடக்கிலுள்ள தமிழர்களைப் பார்க்க வந்திருப்பதாக நிறுவ முயற்சிக்கிறார்.🙂

மிக விரைவில் கச்ச தீவிற்கும் நெடுந்தீவுக்கும் போனாலும் ஆச்சரியப்பட முடியாது. 🙂

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ராயதந்திரி சம்பந்தர் இவரோடு சந்திப்பொன்றை நிகழ்த்த வேண்டும்..  முதலாளி கேட்டால் "தனிபட்ட கருத்து"  போல  மரியாதை நிமித்தமான சந்திப்பு என்டு அடித்து விடுக.. உடல் நிலைய காரணம் காட்டலாம் .. இதெல்லாம் அவருக்கு சொல்லியா தெரிய வேண்டும்..👍

மிக விரைவில் அந்த சந்திப்பு நடக்கும். இருந்து பாருங்கள். 👍

 

2 hours ago, Nathamuni said:

அடுத்த மெடிக்கல் செக்கப்புக்கு டெல்லி போகோணும் மெல்லோ. 😎

கோடாரிக் காம்புகளை நாம்தானே தெரிவு செய்தோம். அவரைக் குறை கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. 😂

13 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு இப்ப மூக்கில் 🤥 வேர்த்திருக்குமே.

பாகிஸ்தானின் அழைப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இல்லையேல் அவர்கள் Central College அல்லது Jaffna Hindu Collegeஐத்தான் தெரிவு செய்திருப்பார்கள். 

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

Link to comment
Share on other sites

வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆன்வ்ராட் ھ ạ yhmpt அவரது அலுவலகத்தில் சந்திப்பில் பாகிஸ்தான் மாகாணத்தில் இருபக்க உறவுகள் குறித்து விரிவான உரையாடல். பாகிஸ்தான் அரசாங்கமாக இருந்த அனைத்து வகையான ஆதரவையும் நான் நம்பினேன். நன்றியுடன்.

100592525_1714260665381506_9189121034173808640_o.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=VDNZl4dZE_MAX807BSo&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=ddbc2fc54ff0ee335d5fe3b0685f8901&oe=5EF9E8C2

photo?fbid=1714260655381507&set=pcb.1714

இதையும் போட்டுள்ளார் 

97259423_10217396987144779_1402650655750881280_n.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=kngAUORBPNQAX_lJL2d&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=c5d5e5e7116a40838523eb4e3913c5bf&oe=5EFCDC8F

photo?fbid=10217396987104778&set=a.11131

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சைவ பாடசாலைகளுக்கு போனால் பிரச்சனையோ?

1) Jaffna Central College சைவப் பாடசாலையல்ல. மெதடிஸ்ற் கிறீத்துவக் கல்லூரி. தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்த பின்னர் (எனது தகவல் சரியானால்) சமய ரீதியிலான அதிபர் நியமனங்கள் இல்லை என நம்புகிறேன். 

2) Jaffna St. Patrick’s College ஐ தெரிவு செய்ததற்கு கட்டுரை ஆசிரியர் கூறிய காரணங்கள் பொருந்தலாம். 

3) யாழ்ப்பாணத்தில்  மெதுவாக சந்தடியின்றி கால் எடுத்து வைக்க கொறோனா ஒர் வாய்ப்பை வழங்கியுள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு கெட்டியாகப் பிடிக்குமானால் எல்லோருமே எம்மைத் தேடி சீர் வரிசையுடன் வருவார்கள். 👍

ஆனால் நாம் எப்போதும் அடிமைச்  சேவகம் செய்து பழக்கப்பட்டவர்கள் ஆயிற்றே. வடக்கின் மனம் நோக விரும்பப் போவதில்லை. ☹️

(வடக்கத்தேயர் வடக்கத்தேயர் என்று இந்தியரை குறைவாக எடைபோடும் எமது சமூகம் வடக்கத்தயவர்களுக்கு பயப்படுவது எவ்வளவு முரண்ணகை 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

சென் பற்றிக்ஸ், நல்லூர் எல்லாம் போனவர்....  
முஸ்லீம் பகுதிகளுக்கு செல்லாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. :)

இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை மதிக்கிறார் என்றால் நவீன சிந்தனை கொண்ட முஸ்லிமாக இருக்க வேண்டும். மதவாத தாடியும் இல்லை முஸ்லிம் உடைக்கு பதிலாக ரிசேட் 👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.