Jump to content

உறவுகளின் கண்ணீர் போராட்டம்1200 ஆவது நாளை எட்டியது!


Recommended Posts

உறவுகளின் கண்ணீர் போராட்டம்1200 ஆவது நாளை எட்டியது!

 

 

  by : Yuganthini

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 1200 ஆவது நாளை  எட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டமொன்று,  வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.15 மணியளவில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின்  கொடிகளையும் ஏந்தியவாறு, “சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள், தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள்” என்ற வாசகம் தாங்கிய பதாதை தாங்கியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை  போன்றதானபுகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது அதிகளவிலான புலனாய்வாளர்கள், குறித்த போரட்டத்தினை புகைப்படமெடுத்ததுடன் அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

pro-1.jpg

 

pro-4.jpg

pro5.jpg

pro-6.jpg

http://athavannews.com/உறவுகளின்-கண்ணீர்-போராட்/

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 1200 ஆவது நாளை  எட்டியுள்ளது.

நீதி ஒருநாள் வென்றே தீரும்.

இவர்களின் அறப்போராட்டம் வெல்ல ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பும் அவசியம்.

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் உடையை அணிவித்துள்ளமை  போன்றதான புகைப்படமொன்றினையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

சுமந்திரனின் சுயரூபத்தை படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டியுள்ளனர்.

Link to comment
Share on other sites

On 1/6/2020 at 15:35, Gowin said:

இவர்களின் அறப்போராட்டம் வெல்ல ஒவ்வொரு தமிழரின் பங்களிப்பும் அவசியம்.

இந்த விடயத்தில் தமக்கென பிரச்சனைகள் வரும் வரை கண்டுகொள்ளாதிருக்கும் பெரும்பாலான தமிழ் மக்களின் மனநிலை மாற்றமடையும் அறிகுறிகள் இல்லை.

கூட்டமைப்பு போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் முண்டு கொடுக்கும் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வரையில் இதற்கு சாத்தியமில்லை.

முக்கியமாக இந்த உறுப்பினர்கள் எந்தவொரு தனித்த அரசியல் கட்சிகளை / அரசியல்வாதிகளை சார்ந்து இருக்காது, அவர்களுடன் தேவையான இடைவெளியை பேணியவாறு தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, போல் said:

இந்த விடயத்தில் தமக்கென பிரச்சனைகள் வரும் வரை கண்டுகொள்ளாதிருக்கும் பெரும்பாலான தமிழ் மக்களின் மனநிலை மாற்றமடையும் அறிகுறிகள் இல்லை.

கூட்டமைப்பு போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் முண்டு கொடுக்கும் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வரையில் இதற்கு சாத்தியமில்லை.

முக்கியமாக இந்த உறுப்பினர்கள் எந்தவொரு தனித்த அரசியல் கட்சிகளை / அரசியல்வாதிகளை சார்ந்து இருக்காது, அவர்களுடன் தேவையான இடைவெளியை பேணியவாறு தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எம் புதிய தலைமுறை இளைஞர்கள் நினைத்தால் சுழற்சி முறை அகிம்சை போராட்டதால் அரசையும் மக்களையும் கவனயீர்ப்பு செய்யலாம், அழுத்த இன்னும் கூடும் தேர்தல் நெருங்குவதால். யார் தொடக்கி வைப்பது என்பதே கேள்வி? 

Link to comment
Share on other sites

5 minutes ago, உடையார் said:

யார் தொடக்கி வைப்பது என்பதே கேள்வி?

சாத்தியமாகும் அறிகுறிகள் தெரிகின்றன.
தேர்தலுடன் இது சம்பந்தப்படாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.