Jump to content

தோழர் பாலன் பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 21:04, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சோபாசக்தியின் செயலைப் பாராட்டாமல் பலர் நக்கல் நளினம்செய்து வருகின்றனர். அவ்வளவும் எரிச்சல். 

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து முகநூலில் பதிவுபோடும் எம்மவர் கூட இந்த கறுப்பின மனிதனின் கொலையைக் கண்டிக்கவில்லை. எத்தனை கொடூரமாக முழங்காலால் மிதித்துக் கொலை. நாமும் கறுப்பினத்தவர்தான் என்பதை நாம் மறந்துவிட்டோம்.

இவரின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

எங்க இருந்து எல்லோரும் புறப்படுகிறீர்கள்???

எம்மை  அழித்தபோது

நாம்  வீதிகளில்  கிடந்து அழுதபோது

அமெரிக்க ஐனாதிபதியே  கறுப்பன்  தானே????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•என்னது சுமந்திரன் அன்டன் பாலசிங்கமா?
தன்னை பிரபாகரன் என்று நினைத்து கனவு காண சிறீதரனுக்கு உரிமை உண்டு.
ஆனால் அதற்காக சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக தமிழ் மக்கள் கருத வேண்டும் என்று கேட்பது ரொம்பவும் ஓவர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் பொய் சொல்வது வழமைதான்.
ஆனால் அதற்காக கொஞ்சம்கூட கூச்சமின்றி இப்படி ஒரு பொய்யை சிறீதரன் கூறியிருக்கக்கூடாது.
அன்டன் பாலசிங்கம் கொழும்பில் வாழ்ந்திருக்கிறார். அவர் எப்போதாவது கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் எனக் கூறியிருக்கிறாரா?
அன்டன் பாலசிங்கம் ஆயுதப் போராட்டத்தை வன்முறை என்றும் அதனை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறாரா?
தனது தேர்தல் செலவுக்கு சுமந்திரன் பணம் தருவதற்கு இணங்கிய காரணத்திற்காக சிறீதரன் அன்டன் பாலசிங்கத்தை இந்தளவுக்கு அசிங்கப்படுத்த வேண்டுமா?
தேர்தல் முடிவதற்குள் சுமந்திரன் பற்றி இன்னும் என்னென்னமெல்லாம் கேட்டு தொலைக்க வேண்டி வருமோ?
ஆண்டவா, தமிழ் மக்களை காப்பாத்து!
104696600_10223424023130018_173098132888
 
 
105943691_10223424024250046_169135953119
 
 
 
 
 
3 மணி நேரம்
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•நிதி விடயத்தில் சுமந்திரன் நேர்மை என்ன?
சுமந்திரன் நல்லவர், வல்லவர், நேர்மையானவர் என்றெல்லாம் அவரது தம்பிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக பண விடயங்களின் அவர் கரங்கள் கறைபடியாதவை என்று வேற பில்டப் கொடுக்கின்றனர்.
சரி. அப்படியென்றால் “தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு வந்த பணம் எங்கே? அதன் கணக்கு வழக்கு என்ன?” என்று மாவை சேனாதிராசாவின் மகன் கேட்டதற்கு ஏன் இன்னும் சுமந்திரன் பதில் அளிக்கவில்லை?
மாவை சேனாதிராசாவின் மகன் இவ்வாறு பகிரங்கமாக கேட்டதால்தான் இம்முறை மாவைக்கு எதிராக சுமந்திரன் செயற்படுகின்றார் என்று கூறுகிறார்களே. அது உண்மையா?
மாவை சோனாதிராசாவின் மகன் கேட்டதைக் கூட விட்டுவிடுவோம். தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேட்டாரே? அவருக்குகூட ஏன் சுமந்திரனால் பதில் அளிக்க முடியவில்லை?
ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இந்திய தூதர் தரும் பணம் எத்தனை கோடிகள்? அது எப்படி வேட்பாளர்களுக்கு பங்கிடப்படுகிறது? அதன் கணக்கு வழக்குகளை மக்களுக்கு காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்காவது காட்டலாம்தானே?
அதுவும் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றும் நேர்மையானவர் என்றும் அவரது தம்பிகளால் அழைக்கப்படும் சுமந்திரனால் ஏன் நேர்மையாக கணக்கு வழக்குகளைக் காட்ட முடியவில்லை@?
சுமந்திரன் ஒரு பிரபலமான வழக்கறிஞர். அவர் தனது லட்சக்கணக்கான ரூபா வருமானத்தை விட்டிட்டு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக தம்பிகள் கூறுகின்றார்கள்.
சுமந்திரனின் வழக்கு நிறுவனம் இப்போதும் இயங்குகிறது. அதனூடாக அவரது வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அதைவிட கிருத்தவ நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமந்திரன் மனைவிக்கு மாதம் 3 லட்சம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தன் பகிரங்கமாக கூறியுள்ளார். அதை சுமந்திரன் இதுவரை மறுக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இரகசிய மற்றும் பினாமி சொத்துகளை தவிர்த்து அவர் காட்டிய சொத்து பெறுமதியின்படி அவரது சொத்து மதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது.
இத்தனைக்கு பிறகும் சுமந்திரனை நேர்மையானவர் என்று எப்படி அவரது தம்பிகளால் கொஞ்சம்கூட கூச்சமின்றி கூற முடிகிறது?
குறிப்பு - சம்பந்தர் ஐயாவின் மகன் கொழும்பில் செய்யும் பிசனஸ் என்ன? அதற்குரிய முதலீடு எத்தனை கோடிகள்? அது எவ்வாறு பெறப்பட்டது என்பதையாவது சுமந்திரன் கூறுவாரா?
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், சூட்
 
 
 
 
14 ம  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•வாயால் சுட்ட வடை!
எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க ?
வடை வாங்கிட்டு வரச் சொன்னா சம்பந்தர் ஐயா சுட்டதா? சுமந்திரன் சுட்டதா? என்று கேட்கிறான்.
குறிப்பு - எலெக்சன் கடி ஜோக் -1 ( இப்படி எலெக்சன் முடியும்வரை வரும்.)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 மணி நேரம்
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
அது எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற நடுக்கம்தான்!
புலிகளை தடை செய்துவிட்டோம் என்றார்கள்
புலிகளை கொன்று புதைத்து விட்டோம் என்றார்கள்.
புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்றார்கள்
ஆனாலும் அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கிகளுக்குகூட தம்மை விளம்பரப்படுத்த பிரபாகரன் படம்தான் தேவையாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சினிமா நடிகரான விஜய்க்குகூட விளம்பரப்படுத்த பிரபாகரன் படம் தேவையாக இருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மனங்களில் பிரபாகரன் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
39137830_10216941667035167_5425172825952485376_n.jpg?_nc_cat=105&_nc_sid=e3f864&_nc_oc=AQm7DiK9PWSHb7Fyv2Mqr1roE5xpXhnTUBl-2m7cEkr8AKrwfCJXmRSl-iWQv5WMgBo&_nc_ht=scontent-lht6-1.xx&oh=8e898b35bde29470ae8aae42c4df693c&oe=5F28B630
தாய்த் தமிழகத்தின் அர்ப்பணிப்பு விபரங்கள் வெளிவருமா?
தமிழகத்தில் இருந்து வந்து ஈழப் போராட்டத்தில் பங்குபற்றி வீர மரணம் அடைந்தவர்கள் பற்றி நான் எழுதும்போதெல்லாம் பலரும் என்னிடம் கேட்பது இவர்கள் பற்றிய விபரங்களை நூலாக வெளியிடுமாறு.
(1) நான் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை
(2) நான் இவர்களுடன் நேரிடையாக ஒருபோதும் பழகியதில்லை
(3) இப்பகூட இவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் என்னிடம் இல்லை.
மேற்கண்ட காரணங்களால் நான் பெரிதும் விரும்பினாலும்கூட என்னால் அவர்கள் பற்றிய விபரங்களை நூலாக எழுத முடியவில்லை.
நான் மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த தமிழ்நாடு மீட்சிப்படையினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஈழம் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பற்றிய சில செய்திகள் அறிய முடிந்தது.
அவர்களிடம்கூட ஈழம் சென்று வீர மரணம் அடைந்தவர்கள் முழு விபரம் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை.
ஆனால் இவ்வாறு ஈழம் சென்று தாக்குதல்களில் பங்குபற்றிய ஒருவரின் எழுத்தை படிக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது.
அவர் தன் அனுபவங்களை தொகுத்து எழுதிய நூலை என் கருத்தை அறிவதற்காக தந்திருந்தார்.
அதில் முழு விபரங்கள் இல்லாவிடினும் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவரின் முதல் நூல் என்ற பெருமை அதற்கு கிடைக்கும் என அவருக்கு கூறியிருந்தேன்.
வெகுவிரைவில் அந் நூல் வெளிவரும் என நம்புகிறேன். அந் நூல் இதேபோல் மற்றவர்களையும் நிச்சயம் எழுத தூண்டும்.
இவ்வாறு பலரும் எழுதும்போது தமிழகத்தில் இருந்து சென்று பங்குபற்றியவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்தவர்கள் விபரம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் கிடைக்கும்.
ஆனால் இந்திய உளவு நிறுவனங்கள் இவ் விபரங்கள் வெளிவரவோ அல்லது அவ் வீர மரணமடைந்தவர்களை மக்கள் நினைவு கூரவோ ஒருபோதும் அனுமதிக்காது.
ஏனெனில் இனிவரும் காலங்களில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாவதற்கு இவர்கள் வரலாறு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்ற அச்சம் அவற்றுக்கு உண்டு.
ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி தமிழினம் ஒன்று சேர்ந்து போராடப் போவது உறுதி.
குறிப்பு – கீழே தரப்பட்ட விபரங்கள் எந்தளவு தூரம் சரியானவை என்பது குறித்து என்னால் உறுதி செய்ய முடியவில்லை.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர்
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 ம
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•தேர்தலும் பேஸ்புக்கும்
தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தமக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகின்றனர்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் போட்டியிடுபவர்கள் ஆதரவு கேட்பது வழமையான ஒன்றுதானே.
ஆனால் சுமந்திரன் சார்பாக என்னுடன் பேசிய நபர் “ நீங்கள் சுமந்திரனை ஆதரிக்க வேண்டாம். ஆனால் தேர்தல் முடியும்வரை அவருக்கு எதிராக பேஸ்புக்கில் எழுதாமல் இருந்தால் போதும்” என கேட்டுக் கொண்டார்.
அவர் இவ்வாறு கேட்டது எனக்கு வித்தியாசமாகவும் உண்மையில் ஆச்சரியமாகவும் இருந்தது. எனவே நான் அவரிடம் “ ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்” என்று கேட்டேன்.
அதற்கு அவர் “ உங்கள் எழுத்துகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது அலையை அது உருவாக்கிறது” என்றார்.
அவர் என் குறித்து சற்று மிகைப்படுத்தி கூறியிருக்கிறார். ஆனால் அவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது. அதாவது இம்முறை தேர்தலில் பேஸ்புக் முக்கிய பங்காற்றுகிறது என்பது.
பல நாடுகளில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பேஸ்புக் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கொரோனோ காலமாக இருப்பதால் வழக்கத்தை விட இன்னும் அதிகமாக பேஸ்பக் பங்கு வகிக்கிறது போலும்.
அதுவும் சிங்கள பகுதியைவிட தமிழ் பகுதிகளில்தான் இம்முறை பேஸ்புக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் சுமந்திரன் எதிர்ப்பு.
அதனால்தான் ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என திமிராக பேட்டியளித்த சுமந்திரன் இப்போது 5 நாளில் 79 சந்திப்பகளை நிகழ்த்தியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் இருந்து சுமந்திரனுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளிப்படுகின்றன.
பெருகி வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் தன்னந்தனியாக சுமந்திரன் தடுமாறுகிறார். பலத்த எதிர்ப்பு அவரைத் துரத்துகிறது.
துரத்தியடிக்கும் பலத்த எதிர்ப்பு
சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடிக்கும் சுமந்திரன்!
குறிப்பு - சுமந்திரன் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையும் தாண்டி சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால் அது உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 ஜூலை, பிற்பகல் 1:12
  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
•தோழர் சண் அவர்களின் 100வது பிறந்ததினம்!
இன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் 100 பிறந்த தினம் ஆகும் (03.07.1920 – 03.07.2020)
தோழர் சண் அவர்கள் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களின் மதிப்பை பெற்றிருந்த தமிழ் தலைவர் அவர்
அதுமட்டுமல்ல சர்வதேசத்திலும் மதிப்பு பெற்றிருந்த இலங்கைத் தமிழ்த் தலைவர் அவர்.
மாசேதுங் சிந்தனைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இறுதிவரை கொள்கை மாறாது செயற்பட்ட புரட்சியாளர் அவர்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதற்குரிய அரசியலை வழங்கியவர் அவரே.
அதனாலேயே அனைத்து ஆயுத பிரிவு போராளிகளின் தலைமைகளும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர்.
அவர் தமிழீழ கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களை ஜே.ஆர் ஜெயவர்தனா “பயங்கரவாதிகள்” என்றார். அமிர்தலிங்கம் “பொடியன்கள்”என்றார். ஆனால் சண்முகதாசன் மட்டுமே முதன் முதலாக அவர்களை “போராளிகள்”என்று அழைத்தார்.
அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், என்எம் பெரோரா, கொல்வின் ஆர்டி சில்வா போன்ற தலைவர்கள் இருந்த மேடையில் இவ்வாறு கூறினார்.
அதனால்தான் தமிழ் போராளிகளின் தலைவர்களும் அவர் மீது மதிப்பு கொண்டதுடன் அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனைகள் பெற்று வந்தார்கள்.
இறுதியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அவரது மகள் அவரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருந்தார்.
இங்கிலாந்திலும் அவர் சும்மா இருக்கவில்லை. பல சர்வதேச புரட்கர சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சர்வதேச அகிலம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும் இங்கிலாந்தில் அவர் ஓரிரு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இறுதியாக 08.02.1993 யன்று தனது 73வது வயதில் அவர் உயிர் பிரிந்தது.
அவருடன் அவருடைய இறுதிக்காலங்களில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை எனக்கு மதிப்பு மிக்க அனுபவத்தை தந்தது.
அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் எழுதிய “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் தமிழ் நூல் பதிப்பை நானே முதலில் வெளியிட்டிருந்தேன்.
அவரை நினைவு கூர்வது என்பது அவர் காட்டிய பாதையில் சென்று அவர் விரும்பிய புரட்சியை மேற்கொள்வதே ஆகும்.
குறிப்பு- தோழர் சண் பற்றி அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
•பிரான்சும் இந்தியாவும்!
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.
பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களான செல்லப்பா மகேந்திரன் தேவி தம்பதிகளின் புதல்வியான சேர்ஜியா சட்டம் படித்து இன்று துணை முதல்வராக வந்துள்ளார்.
ஆனால் இந்தியாவில் 1983ம் அண்டு முதல் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர் குடியுரிமை பெறவும் முடியவில்லை. உயர் கல்வி பெறவும் முடியவில்லை.
மாறாக இந்த கொரோனோ காலத்திலும் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் அவலநிலை.
இந்த லட்சணத்தில் இந்திய பிரதமர் மோடி தனக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தா ஐயா பெருமையாக கூறுகிறார்.
என்னே கேவலம் இது!
107708962_10223587792304145_470571652926
 
 
107622398_10223587795464224_730992297671
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 ம  · பொது உடன் பகிர்ந்தது
IBOXrWGhcIu.png
 
அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல்.
இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது.
இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார்.
சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால்
அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள்.
கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும்.
இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும்.
எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள்.
சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள்.
இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’எல்லோரிட பேசி புரிய வைக்க முயற்சிக்காதீர்கள் சில நேரங்களில் எதிரில் நிற்பது எருமையாக கூட இருக்கலாம்’ எனச்சொல்லும் உரை
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

•சுமந்திரன் உருவப் பொம்மையை எரித்தால்
இலங்கை அரசு ஏன் எரிச்சல் அடைகிறது?

கடந்த மே மாதம் 14ம் திகதி இயக்குனர் களஞ்சியம் அவர்கள் தமிழ்நாட்டில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்படி வழங்கி எரித்தார்.

உடனே இலங்கைப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் களஞ்சியம் அவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர் என அறிய வருகிறது.

“எமக்கு தமிழ்நாட்டில் 200 பேர் இருக்கிறார்கள். கருணா அம்மானுக்கு 300 பேர் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து உன்னை தூக்குவோம்” என்று களஞ்சியம் அவர்களை கொச்சைத் தமிழில் மிரட்டியுள்ளனராம்.

இதைவிட தமிழக கியு பிரிவு பொலிஸ் “தேவையானால் மோடியின்ரை உருவப் பொம்மையை கொளுத்துங்க. ஆனால் சுமந்திரன் உருவப் பொம்மையை மட்டும் கொளுத்தாதீங்க” என்று கேட்கிறார்களாம்.

சுமந்திரன் உருவப் பொம்மை எரித்தமைக்கு நேரடியாக வழக்கு போட முடியாததால் கொரோனோவில் வீட்டை விட்டு வெளியேறியது குற்றம் என்று வழக்கு போடுகிறார்களாம்.

இப்போது எமது கேள்வி என்னவெனில் சுமந்திரன் தமிழர் தலைவர் என்றால் அவரது உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள்தானே எரிச்சல்பட வேண்டும். ஏன் இலங்கை இந்திய அரசுகள் எரிச்சல் அடைகின்றன?

இலங்கை இந்திய அரசுகள் தாம் நேரடியாக செய்ய முடியாததை சுமந்திரன் மூலம் சாதிக்க முனைகின்றன என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

எனவேதான் சுமந்திரன் தோல்வியுற்றால் மீண்டும் தமிழ் தேசிய உணர்வு மேலோங்கிவிடும் என இவ் அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் அச்சமடைகின்றன.

குறிப்பு- இயக்கனர் களஞ்சியம் அவர்கள் நான் எழதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். இந்த படத்தை பார்த்ததும் இதற்காக இன்னொருமுறை களஞ்சியத்தை கியூ பிரிவினர் விசாரிக்கப் போகிறார்கள்? பாவம் மனுசன்.

Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing and beard
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.