Jump to content

மக்களின் காணிகளில் வேலியிட்டுள்ள படையினர்


Recommended Posts

-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார்

வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளைப் பிடித்து, விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக, படையினர் வேலியிட்டுள்ளார்களென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு, தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அவர்களுக்கு இடையூறு செய்து, நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக எனவும் வினவினார்.

அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/மககளன-கணகளல-வலயடடளள-படயனர/72-251190

Link to comment
Share on other sites

9 minutes ago, ampanai said:

அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார்.

இதை சிவமோகன் கோட்டில் வழக்கு தொடுத்து கேட்கலாமே!
இப்ப சிவமோகன் தேர்தல் நாடகமாடும் இந்த அறிக்கை அரசியலில் கொஞ்ச நாளாகவே மும்மரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.