Jump to content

இரண்டு கொடிய வைரஸ்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உரக்கச் சொல்கிறோம்

நாங்கள் அமெரிக்கர்கள்!

இரண்டு கொடிய வைரஸ்கள் 

இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன.

ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம்.

 

இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் 

சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன.

எச்சரிக்கைக் காட்சிகளால்

சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள்

நசுக்கப்படும் மனிதத் தலைகள்... 

இங்கே, சட்ட உலகம் 

இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது

இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை.

ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர 

“நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை.

 

மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய்

குற்றமேதுமின்றிப் பலர்

சொர்க்கவாசலை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள்!

இறுக்கப்பட்ட எங்கள் முகத்துக்கு எதிராக

அவர்கள் கதவுகள் என்றும் மூடப்பட்டே இருக்கிறது.

அவர்கள் சட்டத்தின் வரிகளில் 

எங்களுக்காகவே வரையப்பட்ட வெறுப்பின் வரிகள்

எங்களைப் பிடிக்கவென்றே வரையப்பட்ட

வெள்ளை மேலாதிக்க விஷ வன்மங்கள்

ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன.

 

நண்பர்களே மூச்சை அடக்க பயிற்சி செய்யுங்கள்

எந்தவேளையிலும் உங்கள் குரல்வளைகள் நசுக்கப்படலாம்.

எங்கள் நேசிப்புக்குரிய நகரம்

சிவப்பு பிழம்பாகத் தீப்பிடித்து எரிகிறது.

வானத்தை நோக்கி கரும்புகை திரண்டு உரக்கச் சொல்கிறது

எங்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று.

 

என்னைச் சுற்றி எல்லா இடங்களிலும்

இனவெறி நிரம்பிப்போயுள்ளது.

சருமத்தின் நிறம் கொண்டு முகஸ்துதி செய்யும்

கருப்பு, வெள்ளை, பழுப்பு, மஞ்சள்

பிரிப்புவாதம் வேண்டாம்.

 

சொற்கள் கத்திகள் போல் கூர்மையாய் - இன்னும்

முட்கள் நிறைந்த ஊசிகளாய் வலியுடன் குத்தும்.

வெறுப்பை மட்டும் விதைக்கும் சொற்கள்

இனவெறியின் இன்னொரு முகம்.

 

அமெரிக்காவின் காயங்கள் புதியவை அல்லவே

ஆதிக்கம், இடைவெளி, இரத்தக்களரி அது போகாது.

ஒரு மரணத்தால் சொர்க்கத்தை சம்பாதித்துக் கொண்டவர்களே!

காயங்களைப் பற்றி எனக்குத் தெரியும்: அவை நீங்காது.

இங்கு நியாயமான பயணம் என்பது 

பொய்யான வார்த்தைகளால் நிரம்பிப் போயுள்ளது.

 

இன்னும் நம்புங்கள் உறவுகளே...

மக்களை, மக்களால், மக்களுக்காக ஆளும்

சமத்துவமும் மரியாதையும் வெல்ல இயலாத

ஒரு போலி ஜனநாயக நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று.

 

-தியா-

Link to comment
Share on other sites

44 minutes ago, theeya said:

ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம்.

அமெரிக்காவிலும் உலகிலும் பலரையும் வறுமை கூட கொல்லுகின்றது 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீயோடு தீயாய் சுடும் கவிதை.......நாடிழந்தவனுக்கு சுடுகாடும் தெருவே.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேப்ப படைக்கபட்ட நல்ல கவிதை, எங்குபோனாலும் இந்த இனவாதம் மனிதரில் தவை விரித்தாடுகின்றது, அம்பனை சொன்ன மாதிரி, வறுமையும் சேர்ந்து வாட்டுகின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 1/6/2020 at 22:52, theeya said:

இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன.

அமெரிக்கர்களும் வைரசுக்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில பேச்சு வழக்கில சொல்லுவினமே "அவன் கெட்ட கிருமி" என்று அப்படியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 19:22, theeya said:

இரண்டு கொடிய வைரஸ்கள் 

இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன.

ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம்.

 

இலங்கைக்கும் இக் கவிதை பொருந்தும் இனவாதமும் கொரோனவும் ஈழத் தமிழரையும் கொல்லுது.
அருமையான கவிதை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2020 at 18:05, உடையார் said:

காலத்திற்கேப்ப படைக்கபட்ட நல்ல கவிதை, எங்குபோனாலும் இந்த இனவாதம் மனிதரில் தவை விரித்தாடுகின்றது, அம்பனை சொன்ன மாதிரி, வறுமையும் சேர்ந்து வாட்டுகின்றது

உண்மைதான் 

17 hours ago, uthayakumar said:

இலங்கைக்கும் இக் கவிதை பொருந்தும் இனவாதமும் கொரோனவும் ஈழத் தமிழரையும் கொல்லுது.
அருமையான கவிதை 

 நன்றி .  இலங்கைக்கு எந்தக் கவிதைதான் பொருந்தாது. கூழ்முட்டையள் ஆட்சி, எங்கடை தமிழ் தலைமைகள் ஒருபக்கம் என

On 1/6/2020 at 13:08, ampanai said:

அமெரிக்காவிலும் உலகிலும் பலரையும் வறுமை கூட கொல்லுகின்றது 😞 

அதென்னமோ உண்மைதான். காலங்காலமாக வறுமையால் இறப்பவர்கள் தான் உலகில் அதிகம்

On 1/6/2020 at 14:23, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கவிதை

நன்றி 

On 2/6/2020 at 15:54, suvy said:

தீயோடு தீயாய் சுடும் கவிதை.......நாடிழந்தவனுக்கு சுடுகாடும் தெருவே.....!  

நன்றி . ஓம் அதெண்டால் உண்மைதான் 

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.