Jump to content

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து


Recommended Posts

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவராக இருந்தாலும் கூட அவர் தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி இன்று என்ன செய்கின்றார், கருணா என்ன செய்கின்றார், பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோழில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்ஷக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தது. அவர்களுக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகள் சர்வதேச நாடுகளின் மூலமாக கிடைத்தது.

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவிற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அவர்களின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.
ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

யுத்தத்தை யாராலும் வெற்றிகொள்ள முடித்து, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர். ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83207

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

வாசிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போக்கு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை.

பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் முகநூலில் போட்ட கருத்து படம் !

78630834_10158105390136855_4880540444192145408_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=guWll7heghUAX_LoRUK&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=7da075760a454af228f98cba1025247f&oe=5EFCA1D7

Source photo?fbid=10217396987104778&set=a.11131

சுதந்திர தமிழீழமே இந்தியாவிற்கு பலம் என்பதை டெல்லி உணர மறுக்கும் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் + சீனா + சிறிலங்கா இந்தியாவை உடைக்கும் நாட்களை நெருங்கிய நாட்களாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா யுத்தத்தை முடிக்க வேண்டும் என விரும்பியது அந்தக் காலம் 

ஆனால் 

இந்தியாவை முடிக்க வேண்டும் என தமிழர்  விரும்புவது இந்தக் காலம் 

 

(ஆமியைக் கண்டு புலிகளோடியது அந்தக் காலம் என்கின்ற பாட்டு யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... தான் விட்ட  தவறை, உணர்வது மாதிரி தெரியவில்லையே...
அல்லது  உணர்ந்தும்... வெளியில் காட்டிக் கொள்ளாமல், இருக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை.

அகண்ட பாரதம் வேண்டும் என்றால் பிரிவினை இயக்கங்களை ஆதரிக்க முடியாது பொன்சேக்கா மாத்தையா....அரசியலில் எதுவும் நடக்கும் ....ஈழம் என்ற நாட்டை உருவாக்கி லாபமடைவதைவிட சிறிலங்கா என்ற நாட்டை இந்தியாவுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் உருவாகியிருக்கலாம்.....சிங்கள பகுதிக்கு இந்தியாவின் யுனியன் பிரதேசத்த்தின் அதிகாரத்தை வழங்க நினைத்திருக்கலாம் .....ஒரு நாடு இரு அரசியல் சாசனம் என்று சொல்லலாம்....கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

நீங்கள் இப்படி இங்கு எழுதலாம். தாக்கம் ஒன்றுமில்லை.

ஆனால், எமது பிரச்சனையை, இலங்கைத்தீவின் அரசியல் ஒழுங்கு முறை கிந்தியா  விரும்பிய படி தான் இருக்கவேண்டும் என்பதை ,    ஹொங் காங் மற்றும் தைவானின் வரலாறு தெரியாமல் ஒப்பிட்டு வேறு வெளியாருடன் உரையாடாதீர்கள்.

ஹொங் காங் மற்றும் தைவான் இன் பிரச்சனைகளும் வரலாறும் முற்றிலும் வேறு பட்டது.

ஹாங் காங் மக்கள் சீன Han இனத்தவரின் புராதன பிரிவினர். புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில்,  Guangzhou உம அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பெருமளவில் உள்ளனர். Guangzhou இந்த இன்னொரு பெயர் Canton.

hong காங் எப்போதுமே சீனாவின் இறைமை உள்ள இடம், ஒப்பிய யுத்தத்தில் பிரித்தானியா ஆக்கிரமிக்க, பின்பு நீண்ட குத்தகையாக கொடுக்கப்பட்டு, சீனாவுக்கு மீண்டது 1999 இல்.   

Taiwan உம் சீனாவின் இறைமை உள்ள இடம். சீ   Taiwan தனிநாடு என்பதற்கு ஒரு வரலாற்று, இன, மொழி, மானிடவியல், ஏன் அரசியல் தனித்துவம் கூட இல்லை. சீனாவில், மாசேதுங் தொடங்கிய long march இன்னும் உத்தியோகபூர்வமாக முடியவில்லை. இதை வைத்து அமெரிக்கா புகுந்தது,. அந்த லோங் மார்ச் தைவானில் இப்பொது இருக்கும் ஆளும் குழாமை தூக்கி எறிந்த போது, தப்பி தைவான்  இற்கு சென்றார்கள். அமெரிக்கா  பாதுகாப்பு கொடுக்க. சீனாவிடம் பலம் இப்பொது, வரலாற்று மறுவான அப்போது முடிக்க முடியாமல் போன long march ஐ அடுத்த 10-20 ஆண்டுகளுக்குள் முடிவு செய்யும். 

Link to comment
Share on other sites

On 1/6/2020 at 23:44, ampanai said:

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

தமிழின விரோத ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழர் பலம் பெறுவதை விரும்பாது தமிழின அழிப்பில் கூடிய நாட்டம் கொண்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழீழ மண்ணில் நடத்திய சமூகவிரோத செயற்பாடுகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் தெரியாததல்ல.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தமிழின படுகொலைகளில் பல்வேறு விதங்களில் பங்களித்தமையும் தெரியாததல்ல. இதற்கான விலையை ஹிந்திய அரச பயங்கரவாதிகள் கொடுத்தே ஆவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில், 

 

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...
(எமக்கு பக்கத்தில் இருக்கும் இந்தியா , சீனாவை போன்று இராணுவபலத்தை பாவிக்ககூடிய தைரியம் இருந்தால் சிறிலங்காவை முழுதாக கையகப்படுத்தலாம் ....கையக படுத்தினாலும்...கேட்க சர்வதேசம் வந்தாலும் சீனாவை போன்று துணிந்து நிற்க வேண்டும்)தீபேத்தை கைப்பற்றி தன்னகத்தே வைத்திருப்பது போன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

தெரிந்த சக உறவு ஒருவர். ஒரு தமிழீழ புலப்பெயர் போராட்டங்களில் வெளிப்படையாக பங்குபற்றாதவர். 

14வயது மகள் டொரோண்டோ மத்திய நகர பகுதியில் ஆர்பாட்டத்தில் அவள் கலந்து கொள்ள கேட்டதை அலட்சியப்படுத்த அவளோ அவரை, 'உங்களுக்கு இந்த பெண் இறந்ததை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம், ஆனால், நான் போயாக வேண்டும்", என கேட்க இவரும் கோவிட் 19குள்ளும் அழைத்து சென்றுள்ளார். 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

78099272_10159488373316037_4404178547581648896_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=giSVAIW-eS8AX8JI0Om&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=a30cb094986f36c4d08676903a9427bc&oe=5EFC92CD

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

Picture 1) a Srilankan woman in United States , bravely standing up with humanity and supporting the protesters against the racism and brutality .
#blacklivesmatter

Picture 2)Srilankan military brigadier making throat slitting gesture towards the tamil protestors in London .
He was convicted by UK court , but, then brought back to srilanka as a national hero and given promotions in military for his “brave achievements “!
#tamilslivesmatter too

#black_lives_matter
#tamils_lives_matter_too

Source : FB 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

சான்ஸே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்...

"மொழி, இனம் ஒன்றா? "
தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது..

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே....

இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்...

இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

unarmed black 

சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது...

எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை...

எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்...

கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 20:25, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

பாகிஸ்தானில் இருந்து பிரித்துக்கொடுத்த பங்காளதேசுடனும் நல்லுறவில்லை.  பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பது ஒருகுறுகிய வட்டம். அதன் விளைவே சுற்றிவரப் பகைநாடுகளை உருவாக்கிவருகிறது. தமிழீழத்தை அங்கீகரிப்பதூடாகத்   தமிழகத்திற் தனக்கொரு பாதுகாப்பான தளவமைவை உருவாக்குவதே இந்தியத் தென்பகுதியில் பாதுகாப்பிற்கான உறுதியினை வழங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும்

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 07:55, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:16, Kadancha said:

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

அந்த வகையான ஆக்கிரமிப்பை இந்தியா சிறிலங்கா மீது செய்து விடுவார்கள் என்ற பயம் சிங்கள கொள்கை வகுப்பாளர்களுக்கு அன்றே(சுதந்திரத்திற்கு பின்பு) ஏற்பட்டுவிட்டது அதன் விளைவு தமிழர்கள் மீதும் தமிழர்கள் பகுதிகள் மீதும் அதிக கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்கள் ...தமிழர்  பகுதியில் சிங்கள குடியேற்றம்(சீனாவின் கொள்கை)தமிழர் பகுதியை இராணுவ மயப்படுத்தல் முக்கியமாக தமிழருக்கு என்ற ஒரு பகுதி அது மாகாணசபையாகவோ ,மாவட்ட சபையாகவோ இருக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்....இந்து மதம் ,இஸ்லாம் மதங்கள் போன்றவை ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருப்பதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை....அதன் தொடர்ச்சிதான் கொத்தாபாய அடிக்கடி பேசும் பொழுது சொல்வது வடபகுதி மக்களுக்கு பொருளாதார பிர்ச்சனை மட்டுமே உண்டு மற்றவை பயங்கரவாதிகளால் உருவானவை என்று....

காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைந்து விட்டார் அத்துடன் மேற்கு நாடுகள் ,நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களின் அடிப்படையிலயே உருவாக்கினார்கள் .
இந்தியாவை உருவாக்கும் பொழுது பல திசைகளிலும் செக் வைத்து தான் உருவாக்கினார்கள் ,முக்கியமாக இந்தியாவின் கிழக்கேயும் மேற்கேயும் ஒரே நாட்டை உருவாக்கினார்கள் இரு பிராந்திய மக்களினதும் மதம் ஒன்றாக இருந்தாலும் கலாச்சாரம் ,மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தார்கள். தெற்கே சிறிலங்கா பெளத்தம்  நினைத்திருந்தால் வட பகுதி தீவுகளையும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ்பேசும் இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம்...ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அந்தமான்,மற்றும் லட்ச தீவுகளை இந்தியாவுடன் இணைத்தார்கள் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தமிழர் பகுதி ?????
காஷ்மீரின் இஸ்லாமிய பகுதியை பாகிஸ்தான் படைஎடுத்து தனது  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அந்த பகுதியில் சீனா தனது பெரிய அபிவிருத்தி திட்டத்தை தொடங்கிவிட்டது பாகிஸ்தானின் அரபிக் கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து நேரடியாக வர முடியும்....காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்பை இந்தியா,சீனா,பாகிஸ்தான் கணக்கில் எடுக்கவில்லை...பாகிஸ்தானால்  சீனாவின் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாவிடின் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சீனாவுக்கு ....(இந்தியா அந்த பகுதியை தங்கள் வசம் எடுப்போம் என குத்தி முறிகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்).
கொவா..போர்த்துகீசர் காலணித்துவத்தின் கீழ் இருந்த பகுதி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் மேற்கத்தைய கலாச்சாரத்தை உள்வாங்கியோரும் அதிகமாக இருந்தனர் ..இந்த நாடு மேற்குலகினால் இந்தியாவுக்கு வைக்கப்பட்டை ம்ற்றுமொரு செக்..
சீக்கிம் இதுவும் கோவா போன்ற ஒர் நாடு கிஸ்தவமும் இந்துக்களும் அதிகமாக இருந்த நாடு 
இதே போன்று சீனாவுக்கு செக் வைக்கப்பட்ட பிரதேசஙள் தான் கொங்கொங்,தைவான்,மாக்கே(போர்த்துகீஸ்)இந்த பிரதேசங்களுக்கு தனி நாணயங்கள் புலக்கத்தில் உண்டு ....மாக்கே க்கு தற்பொழுது இல்லை.

இந்தியாவுக்கு  மேற்குலகு செக் வைத்தமைக்கு காரணம் பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு போராட்டங்கள் மூலம் வெள்ளையரை வெளியேற்றிய படியாலும் எதிர்காலத்தில் காந்தீயம் என்ற கொள்கையை உலகம் பின்பற்றினால் உலக வியாபாரம் படுத்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே)
ஆனால் இந்தியா மேற்குலகின் ஆசைப்படியே மாறிகொண்டு வந்தது (ஜனநாயகம் என்று  உரக்க சொல்ல தொடங்கியது...

இந்தியாவிக்கு செக் வைக்கப்பட்ட நாடுகளில் சிரிலங்காவை தவிர எனையவற்றை தனகப் படுத்தியது ...
நேபாளமும் அதில் ஒன்று தற்பொழுது ,நேபாளமும் சிறிலங்காவும் இந்தியாவுக்கு பெரிய தலையிடியாக உள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:24, Rajesh said:

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

20லட்சம் தமிழ்மக்களின் ஆசை  இதில் நானும் ஒருத்தன்.....இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை ..
ஐரோப்பாவில் அப்படி இல்லை ...

On 5/6/2020 at 19:14, Kadancha said:

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

இதற்கு பிறகு பதில போடுகிறேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.