Jump to content

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து


Recommended Posts

(ஆர்.யசி)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாத குழுவின் தலைவராக இருந்தாலும் கூட அவர் தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராட்டத்தை நடத்தியவர் என்ற விதத்தில் அவர் மீது ஒரு மரியாதை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க எந்த எண்ணமும் எமக்கு இருக்கவில்லை. அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருப்பார்.

கே.பி இன்று என்ன செய்கின்றார், கருணா என்ன செய்கின்றார், பிள்ளையான் என்ன செய்கின்றார்? இவர்கள் அனைவரும் இன்றைய அரசியல் தலைவர்களின் தோழில் கைபோட்டு அரசியல் செய்வதை நாம் பார்க்கின்றோம். பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று ராஜபக்ஷக்களுடன் அரசியல் செய்கின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவர் இன்று அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நபராக இருந்திருப்பார். ஆகவே அவர் கொல்லப்பட்டதே சரியென நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சர்வதேசத்துடன் தொடர்புகள் இருந்தது. அவர்களுக்கான ஆயுத மற்றும் நிதி உதவிகள் சர்வதேச நாடுகளின் மூலமாக கிடைத்தது.

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை. இந்தியாவிற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அவர்களின் பிரதமரும் கொல்லப்பட்டார். இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.
ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

யுத்தத்தை யாராலும் வெற்றிகொள்ள முடித்து, இதனால் பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்ற நிலையில் இருந்தனர். சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர். ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம் என்றார்.

https://www.virakesari.lk/article/83207

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

வாசிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போக்கு மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும். 👍

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை.

பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தனர்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர்.

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

வரலாற்றில் எமது தமிழீழ வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் முகநூலில் போட்ட கருத்து படம் !

78630834_10158105390136855_4880540444192145408_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=guWll7heghUAX_LoRUK&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=7da075760a454af228f98cba1025247f&oe=5EFCA1D7

Source photo?fbid=10217396987104778&set=a.11131

சுதந்திர தமிழீழமே இந்தியாவிற்கு பலம் என்பதை டெல்லி உணர மறுக்கும் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் + சீனா + சிறிலங்கா இந்தியாவை உடைக்கும் நாட்களை நெருங்கிய நாட்களாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா யுத்தத்தை முடிக்க வேண்டும் என விரும்பியது அந்தக் காலம் 

ஆனால் 

இந்தியாவை முடிக்க வேண்டும் என தமிழர்  விரும்புவது இந்தக் காலம் 

 

(ஆமியைக் கண்டு புலிகளோடியது அந்தக் காலம் என்கின்ற பாட்டு யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... தான் விட்ட  தவறை, உணர்வது மாதிரி தெரியவில்லையே...
அல்லது  உணர்ந்தும்... வெளியில் காட்டிக் கொள்ளாமல், இருக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

ஆனால் இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்ததே உண்மை.

அகண்ட பாரதம் வேண்டும் என்றால் பிரிவினை இயக்கங்களை ஆதரிக்க முடியாது பொன்சேக்கா மாத்தையா....அரசியலில் எதுவும் நடக்கும் ....ஈழம் என்ற நாட்டை உருவாக்கி லாபமடைவதைவிட சிறிலங்கா என்ற நாட்டை இந்தியாவுடன் இணைத்தால் என்ன என்ற எண்ணம் உருவாகியிருக்கலாம்.....சிங்கள பகுதிக்கு இந்தியாவின் யுனியன் பிரதேசத்த்தின் அதிகாரத்தை வழங்க நினைத்திருக்கலாம் .....ஒரு நாடு இரு அரசியல் சாசனம் என்று சொல்லலாம்....கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கொங்கொங்க்,தாய்வான் போன்ற நாடுகளுக்கு சீனா அதிகாரம் செலுத்துவது போன்று......

நீங்கள் இப்படி இங்கு எழுதலாம். தாக்கம் ஒன்றுமில்லை.

ஆனால், எமது பிரச்சனையை, இலங்கைத்தீவின் அரசியல் ஒழுங்கு முறை கிந்தியா  விரும்பிய படி தான் இருக்கவேண்டும் என்பதை ,    ஹொங் காங் மற்றும் தைவானின் வரலாறு தெரியாமல் ஒப்பிட்டு வேறு வெளியாருடன் உரையாடாதீர்கள்.

ஹொங் காங் மற்றும் தைவான் இன் பிரச்சனைகளும் வரலாறும் முற்றிலும் வேறு பட்டது.

ஹாங் காங் மக்கள் சீன Han இனத்தவரின் புராதன பிரிவினர். புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில்,  Guangzhou உம அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பெருமளவில் உள்ளனர். Guangzhou இந்த இன்னொரு பெயர் Canton.

hong காங் எப்போதுமே சீனாவின் இறைமை உள்ள இடம், ஒப்பிய யுத்தத்தில் பிரித்தானியா ஆக்கிரமிக்க, பின்பு நீண்ட குத்தகையாக கொடுக்கப்பட்டு, சீனாவுக்கு மீண்டது 1999 இல்.   

Taiwan உம் சீனாவின் இறைமை உள்ள இடம். சீ   Taiwan தனிநாடு என்பதற்கு ஒரு வரலாற்று, இன, மொழி, மானிடவியல், ஏன் அரசியல் தனித்துவம் கூட இல்லை. சீனாவில், மாசேதுங் தொடங்கிய long march இன்னும் உத்தியோகபூர்வமாக முடியவில்லை. இதை வைத்து அமெரிக்கா புகுந்தது,. அந்த லோங் மார்ச் தைவானில் இப்பொது இருக்கும் ஆளும் குழாமை தூக்கி எறிந்த போது, தப்பி தைவான்  இற்கு சென்றார்கள். அமெரிக்கா  பாதுகாப்பு கொடுக்க. சீனாவிடம் பலம் இப்பொது, வரலாற்று மறுவான அப்போது முடிக்க முடியாமல் போன long march ஐ அடுத்த 10-20 ஆண்டுகளுக்குள் முடிவு செய்யும். 

Link to comment
Share on other sites

On 1/6/2020 at 23:44, ampanai said:

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார்.

தமிழின விரோத ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழர் பலம் பெறுவதை விரும்பாது தமிழின அழிப்பில் கூடிய நாட்டம் கொண்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஹிந்திய அரச பயங்கரவாதிகள் தமிழீழ மண்ணில் நடத்திய சமூகவிரோத செயற்பாடுகளும், சித்திரவதைகளும், படுகொலைகளும் தெரியாததல்ல.

அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தமிழின படுகொலைகளில் பல்வேறு விதங்களில் பங்களித்தமையும் தெரியாததல்ல. இதற்கான விலையை ஹிந்திய அரச பயங்கரவாதிகள் கொடுத்தே ஆவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

புராதன காலத்தில் வடமேற்கு சீனாவில் இருந்து இடம் பெயர்ந்து இப்பொது தென்கிழக்கு சீனாவில், 

 

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...
(எமக்கு பக்கத்தில் இருக்கும் இந்தியா , சீனாவை போன்று இராணுவபலத்தை பாவிக்ககூடிய தைரியம் இருந்தால் சிறிலங்காவை முழுதாக கையகப்படுத்தலாம் ....கையக படுத்தினாலும்...கேட்க சர்வதேசம் வந்தாலும் சீனாவை போன்று துணிந்து நிற்க வேண்டும்)தீபேத்தை கைப்பற்றி தன்னகத்தே வைத்திருப்பது போன்று..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ampanai said:

உயிருடன் சரணடைந்த பாலச்சந்திரன் என்ற சிறுவனை கொன்றதன் மூலம் நீங்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் / அரச பயங்கரவாதிகள் என்பது மீண்டும்  உறுதியானது.   

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நீங்களே கூறியிருக்கின்றீர்கள் புராதன காலத்தில் குடியேறிய சீனர்கள் அங்கு வாழ்வதால்....பிறகு பிரிடிஷ் குத்தகைக்கு எடுத்துபடியால் அது மீண்டும் சீனாக்கு சொந்தம் என்ற கருத்துபட அத்துடன் மாவோவையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...

ஏன் அதே கொள்கை இலங்கைக்கு சரிவராது...
புராதான காலத்தில் குடியேறிய தமிழர்கள் ,பிரிடிஷ் போர்தொடுத்து கைப்பற்றிஆட்சி செய்து விட்டு சென்ற நாடு...

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

தெரிந்த சக உறவு ஒருவர். ஒரு தமிழீழ புலப்பெயர் போராட்டங்களில் வெளிப்படையாக பங்குபற்றாதவர். 

14வயது மகள் டொரோண்டோ மத்திய நகர பகுதியில் ஆர்பாட்டத்தில் அவள் கலந்து கொள்ள கேட்டதை அலட்சியப்படுத்த அவளோ அவரை, 'உங்களுக்கு இந்த பெண் இறந்ததை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம், ஆனால், நான் போயாக வேண்டும்", என கேட்க இவரும் கோவிட் 19குள்ளும் அழைத்து சென்றுள்ளார். 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

Link to comment
Share on other sites

3 hours ago, putthan said:

எங்களுடைய சில புத்திஜீவிகளும் ,சிவப்புசட்டைக்காரரும், புலம்பெயர்ந்த சிங்கள மக்களும் ,தாயக சிங்களவர்களும் முழுமூச்சாக கருத்து எழுதுகிறார்கள் அமேரிக்கா கறுப்பினத்தவரின் படுகொலைக்கு எதிராக....

78099272_10159488373316037_4404178547581648896_n.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=giSVAIW-eS8AX8JI0Om&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=a30cb094986f36c4d08676903a9427bc&oe=5EFC92CD

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

Picture 1) a Srilankan woman in United States , bravely standing up with humanity and supporting the protesters against the racism and brutality .
#blacklivesmatter

Picture 2)Srilankan military brigadier making throat slitting gesture towards the tamil protestors in London .
He was convicted by UK court , but, then brought back to srilanka as a national hero and given promotions in military for his “brave achievements “!
#tamilslivesmatter too

#black_lives_matter
#tamils_lives_matter_too

Source : FB 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

Joining hands In solidarity with this sister who raised the voice against the oppressions anywhere !
Hope she will raise her voice against all the racism !

சான்ஸே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

பிரித்தானிய, காலனித்துவ அரசுகள் ஆக்கிரமித்த போது, சீன சீனவாகத தான் இருந்தது, hong kong, தைவானுடன். 

இந்தியா ஒன்று இருந்ததா? 

இலங்கைத் தீவு ஆகக்குறைந்தது, அந்த நிலத்தில் இல்லாத எந்த வேறு அரசின் கீழ் இருந்ததா?  

மொழி, இனம் ஒன்றா? 

சீனாவின் ஹாங் காங், தைவான் பிரச்சனைகள் வேறு. 

மாவோ  உள் பிரச்னை, எந்த அரசியல் சித்தாந்தம் வேண்டும் என்பதிலேயே தவிர, சீனாவின் நிலப்பகுதிகளை பங்கு போடுவதற்கு அல்ல. 

அதனால் இந்த மேற்கு பயப்பிடுகிறது, சீன regional order ஐ தானாக இருந்த நிலைக்கு கொண்டுவரும், அது கிந்தியவை முற்றாக முறிக்காவிட்டாலும், கிந்தியாவை தளர்த்தும். 

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை....மாவோவும் சித்தாந்தவாதிகளும் தங்களது அரசியலை உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகுத்த பல வருடங்களாக முயன்றுவருகின்றனர்...1975 ஆண்டுக்கு முன்பு புரட்சிகர அமைப்புக்களை உருவாக்கி ஆயுத போராட்டங்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினார்கள் ...தற்பொழுது சோசலிசம் பேசும் முதலாளிகளை உருவாக்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்...

"மொழி, இனம் ஒன்றா? "
தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கினறது..

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு 800 வருடங்களுக்கு முந்திய சரித்திரம் பேச முடியாது தானே....

இனிவரும் காலங்களில் இனம் மொழி பிரிவினையை விட ,புதிய அரசியல் ஆக்கிரமிப்புக்கு மதங்களை .... பயன்படுத்துவார்கள்...மொழி இனங்களை விட மதங்கள் இலகுவாக மக்களை வெறிகொள்ள வைக்கும்...

இந்து,கிறிஸ்தவம்,இஸ்லாம்,பெளத்தம் நாகரீக போர்கள் நடக்க வாய்ப்புக்கள் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

 

ஆனால், அந்த சிறு பெண்ணிற்கு தனது ஈழ (சிறுவர்கள்) இனப்படுகொலை பற்றி ஒருநாள் தெரியவரும்பொழுது, அதை சொல்லி வளர்க்காமல் விட்டதற்கு பெற்றோர்கள் மனம் வருந்துவார்கள்.     

unarmed black 

சர்வதேச ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வோரு தடவையும்unarmed black man என்ற வசனத்தை பாவிப்பார்கள்.....இது புலம் பெயர்ந்த எமது சிறார்களுக்கு மனதில் இலகுவாக படிந்து விடுகிறது...

எமது மக்கள் இறந்த கதையை கேட் கவோ சொல்லவோ யாருமில்லை...

எமது மக்களே அடுத்த சந்ததிக்கு சொல்ல முயலவில்லை என்பது கவலையளிக்கும் விடயம்...

கறுப்பர்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாகின்றனர் என்று மார்டின் லூதர் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லிகொண்டிருப்பதால் ஒரு சிறு சம்பவம் பெரிய எழுச்சியை உண்டாக்கின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 20:25, nedukkalapoovan said:

புலிகளை அழித்து ஹிந்தியா பிராந்தியத்தில் தனக்கான மரணப் படுகுழியை தானே தோண்டி விட்டுள்ளது. இதனையே இன்று நாம் பார்கிறோம்.

ஹிந்தியாவைச் சுற்றி யாருமே ஹிந்தியா நம்பக் கூடிய நண்பர்களாக இல்லை. இந்த நிலையை ஹிந்தியா தனது தப்பான கொள்கைகளால் உருவாக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அப்படி.. சீனா அப்படி.. நோபாளம் அப்படி.. சொறீலங்கா அப்படி.

பாகிஸ்தானில் இருந்து பிரித்துக்கொடுத்த பங்காளதேசுடனும் நல்லுறவில்லை.  பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பது ஒருகுறுகிய வட்டம். அதன் விளைவே சுற்றிவரப் பகைநாடுகளை உருவாக்கிவருகிறது. தமிழீழத்தை அங்கீகரிப்பதூடாகத்   தமிழகத்திற் தனக்கொரு பாதுகாப்பான தளவமைவை உருவாக்குவதே இந்தியத் தென்பகுதியில் பாதுகாப்பிற்கான உறுதியினை வழங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சீனா இந்தியாவின் சீக்கிம்  பிராந்தியத்தை ஆக்கிரமிக்க கூறும் காரணம் பெளத்தமும் சீனர்களும் என்ற அடையாளமா?

தீபேத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும்

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 07:55, putthan said:

அயல்நாடுகளை ஆக்கிரமித்து சோவியத் யூனியன் என்ற ஒரு நாடு உருவாகி  பிறகு உடைந்தது போன்று சீனாவும் உடையும், நில ஆக்கிரமிப்பு செய்வது தான் தற்போதய சீனாவின் நிலை

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:16, Kadancha said:

காலனித்துவ ஆட்சி முடியும் பொது அதன் பின்பும் ஆக்கிரமிப்பை செய்து காட்டியது அதனை தொடர்ந்ததும்  கிந்தியா. அந்த நேரத்தில் கூட பிரித்தானியவோ, அமெரிக்காவோ ஒன்றும் எதிர்க்காமல், பச்சை கோடி காட்டி விட்டார்கள்.  

காஷ்மீர் - 1949 
Goa.       - 1961
சிக்கிம் - 1975

ஆனால், சீனாவின் Han இனத்தவர் Tibet இனத்தவருடன் திபெத் நிலப்பரப்புக்கு Mongol காலத்தில் இருந்து போட்டி இருந்து வந்தது உண்மை. 

சீன திபெத்தில் தலியடா வழிகோலியது கிந்தியவும், மேற்கும்.

இது வரைக்கும் சீன-ஹிந்திய யுத்தத்தில்  பெரமும் பகுதிகளில் இருந்து சீன தானாக வெளியேறியது.   

அந்த வகையான ஆக்கிரமிப்பை இந்தியா சிறிலங்கா மீது செய்து விடுவார்கள் என்ற பயம் சிங்கள கொள்கை வகுப்பாளர்களுக்கு அன்றே(சுதந்திரத்திற்கு பின்பு) ஏற்பட்டுவிட்டது அதன் விளைவு தமிழர்கள் மீதும் தமிழர்கள் பகுதிகள் மீதும் அதிக கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்கள் ...தமிழர்  பகுதியில் சிங்கள குடியேற்றம்(சீனாவின் கொள்கை)தமிழர் பகுதியை இராணுவ மயப்படுத்தல் முக்கியமாக தமிழருக்கு என்ற ஒரு பகுதி அது மாகாணசபையாகவோ ,மாவட்ட சபையாகவோ இருக்க கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்....இந்து மதம் ,இஸ்லாம் மதங்கள் போன்றவை ஒரு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருப்பதை சிறிலங்கா அரசு விரும்பவில்லை....அதன் தொடர்ச்சிதான் கொத்தாபாய அடிக்கடி பேசும் பொழுது சொல்வது வடபகுதி மக்களுக்கு பொருளாதார பிர்ச்சனை மட்டுமே உண்டு மற்றவை பயங்கரவாதிகளால் உருவானவை என்று....

காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்து இணைந்து விட்டார் அத்துடன் மேற்கு நாடுகள் ,நாடுகளை உருவாக்கும் பொழுது மதங்களின் அடிப்படையிலயே உருவாக்கினார்கள் .
இந்தியாவை உருவாக்கும் பொழுது பல திசைகளிலும் செக் வைத்து தான் உருவாக்கினார்கள் ,முக்கியமாக இந்தியாவின் கிழக்கேயும் மேற்கேயும் ஒரே நாட்டை உருவாக்கினார்கள் இரு பிராந்திய மக்களினதும் மதம் ஒன்றாக இருந்தாலும் கலாச்சாரம் ,மொழி போன்றவற்றால் வேறுபட்டிருந்தார்கள். தெற்கே சிறிலங்கா பெளத்தம்  நினைத்திருந்தால் வட பகுதி தீவுகளையும் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ்பேசும் இந்து,கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை தமிழ்நாட்டுடன் இணைத்திருக்கலாம்...ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அந்தமான்,மற்றும் லட்ச தீவுகளை இந்தியாவுடன் இணைத்தார்கள் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் தமிழர் பகுதி ?????
காஷ்மீரின் இஸ்லாமிய பகுதியை பாகிஸ்தான் படைஎடுத்து தனது  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அந்த பகுதியில் சீனா தனது பெரிய அபிவிருத்தி திட்டத்தை தொடங்கிவிட்டது பாகிஸ்தானின் அரபிக் கடலில் இருக்கும் துறைமுகத்துக்கு சீனாவிலிருந்து நேரடியாக வர முடியும்....காஷ்மீர் மக்களின் விருப்பு வெறுப்பை இந்தியா,சீனா,பாகிஸ்தான் கணக்கில் எடுக்கவில்லை...பாகிஸ்தானால்  சீனாவின் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியாவிடின் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சீனாவுக்கு ....(இந்தியா அந்த பகுதியை தங்கள் வசம் எடுப்போம் என குத்தி முறிகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம்).
கொவா..போர்த்துகீசர் காலணித்துவத்தின் கீழ் இருந்த பகுதி கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் மேற்கத்தைய கலாச்சாரத்தை உள்வாங்கியோரும் அதிகமாக இருந்தனர் ..இந்த நாடு மேற்குலகினால் இந்தியாவுக்கு வைக்கப்பட்டை ம்ற்றுமொரு செக்..
சீக்கிம் இதுவும் கோவா போன்ற ஒர் நாடு கிஸ்தவமும் இந்துக்களும் அதிகமாக இருந்த நாடு 
இதே போன்று சீனாவுக்கு செக் வைக்கப்பட்ட பிரதேசஙள் தான் கொங்கொங்,தைவான்,மாக்கே(போர்த்துகீஸ்)இந்த பிரதேசங்களுக்கு தனி நாணயங்கள் புலக்கத்தில் உண்டு ....மாக்கே க்கு தற்பொழுது இல்லை.

இந்தியாவுக்கு  மேற்குலகு செக் வைத்தமைக்கு காரணம் பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு போராட்டங்கள் மூலம் வெள்ளையரை வெளியேற்றிய படியாலும் எதிர்காலத்தில் காந்தீயம் என்ற கொள்கையை உலகம் பின்பற்றினால் உலக வியாபாரம் படுத்துவிடும் என்ற காரணமாக இருக்கலாம் (எனது ஊகம் மட்டுமே)
ஆனால் இந்தியா மேற்குலகின் ஆசைப்படியே மாறிகொண்டு வந்தது (ஜனநாயகம் என்று  உரக்க சொல்ல தொடங்கியது...

இந்தியாவிக்கு செக் வைக்கப்பட்ட நாடுகளில் சிரிலங்காவை தவிர எனையவற்றை தனகப் படுத்தியது ...
நேபாளமும் அதில் ஒன்று தற்பொழுது ,நேபாளமும் சிறிலங்காவும் இந்தியாவுக்கு பெரிய தலையிடியாக உள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 21:24, Rajesh said:

அதுக்கு முதல் உடைய வேண்டியது இந்தியா என்டு நினைக்கிறன்,.

20லட்சம் தமிழ்மக்களின் ஆசை  இதில் நானும் ஒருத்தன்.....இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை ..
ஐரோப்பாவில் அப்படி இல்லை ...

On 5/6/2020 at 19:14, Kadancha said:

சீனாவை சோவித்யதுடன் ஒப்பீடு செய்ததின் படி உங்களின் சீன, சோவியத் வரலாறு, கலாசாரம், அரசியல், ,பொருளாதாரம், சித்தாந்தம், ஆட்சிமுறை   போன்றவற்றில் நீங்கள் இன்னும் அறிய வேண்டி உள்ளது என்பது வெளிப்படை. 

அது மட்டுமல்ல, சமகாலத்து சீனாவை பற்றி நீங்க அறியவுமில்லை, புரியவும் இல்லை.  நீங்கள் இன்னும் கெடுபிடி யுத்தத்தின் காலத்திற்கு  மிகவும் முற்பட்ட காலத்திலேயே உங்களின் சீன பற்றிய புரிதல் உள்ளது   

ஒன்று மட்டும் சொல்கிறேன், சீன மக்களின் வாழ்வில், வரலாற்றில் கடந்த 40 வருடங்களேமிகச் சிறந்த காலம் என்றே சீன மக்கள் நம்புகிறார்கள்.

மேற்கு ஊடகங்கள் சொல்வது சீனவை பெரும் பூச்சாண்டியாக காட்டுவது. objective ஆக சீனாவை அறிந்து, விளங்கி வாருங்கள் கதைப்போம். 

கீழே உள்ள பேட்டி சுருக்கமாக இதை சொல்கிறது .

 

 

இதற்கு பிறகு பதில போடுகிறேன்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.