Jump to content

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-720x450.jpg

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,  “சமூகப் பரவல் மூலமான கொரோனா பாதிப்பு நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. ஏரானமானோா் இந்த சமூகப் பரவலால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே  இந்த கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த எதிா்பாா்ப்பு  நான்காம் கட்ட பொதுமுடக்கத்துக்குப் பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,  பொருளாதார பாதிப்புகளுக்கிடையே நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் என்பது சா்வதேச அளவில் கொரோனா  பாதிப்பால் ஏற்பட்ட 22 இலட்சம் உயிரிழப்புகள்,  நோய்த் தொற்று பரவல் வீரியம் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால்  இந்த நடைமுறை முழுமையான பலனைத் தரவில்லை என்பதை அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் நிரூபித்திருக்கின்றன.

குறிப்பாக   நோய்த் தொற்றை பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்போது  தொற்றுநோய் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவ்வாறு தொற்றுநோய் நிபுணா்களுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்திருந்தால்  பாதிப்புகளை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இந்தியாவில்-கொரோனா-பரவலை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு

 

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.


அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலி எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பலியான 204 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 76 பேர். டெல்லியில் 50, குஜராத்தில் 25, தமிழகத்தில் 11, மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8, தெலுங்கானாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 3, ஆந்திராவில் 2, அரியானா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 24,586 ஆக உள்ளது. டெல்லியில் 20,834, குஜராத்தில் 17,200, ராஜஸ்தானில் 8,980, மத்திய பிரதேசத்தில் 8,283, உத்தரபிரதேசத்தில் 8,075, மேற்குவங்காளத்தில் 5,772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆந்திராவில் 3,783, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,792, ஜம்மு காஷ்மீரில் 2,601, அரியானாவில் 2,356, பஞ்சாபில் 2,301, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உத்தரகாண்டில் 958, ஜார்கண்டில் 659, சத்தீஸ்கார் 547, திரிபுரா 420, இமாசலபிரதேசம் 340, சண்டிகார் 294, மணிப்பூர் 83, லடாக் 77, புதுச்சேரி 74, கோவா 71, நாகாலாந்து 43, அந்தமான் நிகோபர் தீவு 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசம் 22, தாதர்நகர் ஹவேலி 3, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்திலேயே உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு 2,362 பேர் பலியாகி இருக்கிறார்கள். குஜராத்தில் 1,063, டெல்லியில் 523, மத்தியபிரதேசத்தில் 358, மேற்குவங்காளத்தில் 335, உத்தரபிரதேசத்தில் 217, ராஜஸ்தானில் 198, தமிழகத்தில் 197 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 45, ஜம்மு காஷ்மீரில் 31, பீகாரில் 24, அரியானாவில் 21, கேரளாவில் 10, ஒடிசாவில் 7, உத்தரகாண்டில் 6, ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேத்தில் தலா 5, சண்டிகாரில் 4, சத்தீஸ்கார் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03035310/Coronal-impact-in-India-is-close-to-2-lakhs-The-death.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மராட்டிய மாநிலத்தை.... 🌬பெரிய புயல் 💨ஒன்றும் தாக்க இருப்பதாக கூறப் படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.