Jump to content

"சுவாசக்குழாய்" பொருத்தி இருப்பதன், அர்த்தம் என்னவென்று புரியாதவர்களுக்கு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

101552406_2613150925607702_1556019956456357888_n.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeFxyQizX6rORHoSgJeLiyn1_7LCqgJswMf_ssKqAmzAx0Jzy1I8xxS9JmWMOh5Gd0LbL6AHBw1Eu5mKGu2KgsAP&_nc_ohc=N4ESHFXBh4wAX9wpYpq&_nc_ht=scontent-frx5-1.xx&oh=7342d4959a009d1192f036366eb31583&oe=5EFC5C76

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, 40% உடல் தசையை இழக்கிறார். வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார், அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம். இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள். உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.

ஆனால் சிலர் முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்...

ச. பழனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும். நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.

கொரோனாவால் உயிழந்தவர்களை விட இந்த வென்ரிலேட்டர் போட்டே நிறைய பேர் இறந்து போனார்கள்.

ஆனாலும் என்ன சீனா மீது சுலபமாக பழியைப் போட்டு தப்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

கொரோனாவால் உயிழந்தவர்களை விட இந்த வென்ரிலேட்டர் போட்டே நிறைய பேர் இறந்து போனார்கள்.

ஆனாலும் என்ன சீனா மீது சுலபமாக பழியைப் போட்டு தப்பிக்கிறார்கள்.

சீனா மீது, இருக்கிற...  "பழைய கறல்" எல்லாத்ததையும், 
சந்தர்ப்பம் பார்த்து.... இப்ப கொடுக்கிறார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா?

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது.

மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா?

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது.

மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.

ஏராளன்... உங்களுடைய சகோதரர் வேறு மருத்துவ காரணங்களுக்காக...  
சுவாசக்  குழாய் பொருத்தப் பட்டிடிருக்கலாம் என நினைக்கின்றேன்.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

அத்துடன்.... தற்போது, மருத்துவ மனைகளில் சுவாசக் கருவி தட்டுப் பாடாக உள்ள நிலையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும்... கருவிகள் தரமற்ற  நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

 

2 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

10-20 வென்டிலேற்றர்களை போடுவதற்கு தகுந்த ஆளாக ஆஸ்பத்திரிகளில் ஓரிருவர் இருந்திருப்பர்.
திடீரென 500-1000 என அதிகரிக்கும் போது அதை இயக்க அந்த ஓரிவரே போதாது.திடீரென ஆக்களை எடுத்து பயிற்சி கொடுப்பதும் முடியாது.

 நாங்கள் யுரியூப் பார்த்து சமையல் செய்வது போல பலரும் முயற்சி செய்ய முயன்றே பலரைக் கொன்றிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

10-20 வென்டிலேற்றர்களை போடுவதற்கு தகுந்த ஆளாக ஆஸ்பத்திரிகளில் ஓரிருவர் இருந்திருப்பர்.
திடீரென 500-1000 என அதிகரிக்கும் போது அதை இயக்க அந்த ஓரிவரே போதாது.திடீரென ஆக்களை எடுத்து பயிற்சி கொடுப்பதும் முடியாது.

 நாங்கள் யுரியூப் பார்த்து சமையல் செய்வது போல பலரும் முயற்சி செய்ய முயன்றே பலரைக் கொன்றிருக்கிறார்கள்.

நல்ல உதாரணம், ஈழப்பிரியன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன்... உங்களுடைய சகோதரர் வேறு மருத்துவ காரணங்களுக்காக...  
சுவாசக்  குழாய் பொருத்தப் பட்டிடிருக்கலாம் என நினைக்கின்றேன்.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு... சுவாசக்  குழாய் பொருத்தும் போது,
எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றார்கள் என,
பல் வேறு நாடுகளும்... குற்றம் சாட்டுகின்றன.

அத்துடன்.... தற்போது, மருத்துவ மனைகளில் சுவாசக் கருவி தட்டுப் பாடாக உள்ள நிலையில்,
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும்... கருவிகள் தரமற்ற  நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஓம் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

வென்டிலேட்டர் அவ்வளவு மோசமா?

ஆனால் எனது தம்பி 35 நாட்கள் சுவாச கருவி மூலமே உயிர் பிழைத்தார். முதல் 1 வாரம் வாய்க்குள் செலுத்தி சுவாசிக்கவும் மூக்கால் திரவ உணவு வழங்கப்பட்டது. பின்னர் தொண்டைப்பகுதியில் துளை போடப்பட்டு அதனூடாக சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்தார். 

அவருக்கு guillain-barré syndrome ஏற்பட்டிருந்தது. மருந்தாக immunoglobulin iv ஒரு நாளைக்கு 36g (எடை கூட) படி 5 நாட்கள் செலுத்தப்பட்டது. 3 நாட்களுக்கான மருந்திற்காக அண்ணளவாக 9 லட்சம் செலவாகியது. 2 நாட்களுக்கான மருந்தை யாழ் போதனா வைத்தியசாலை வழங்கியது.

மிக ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர். தற்போது மாற்றுத்திறனாளியாக உள்ளபோதும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக இருக்கின்றார்.

உங்கள் தம்பி மீண்டதை கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கு, நீங்களும் கவனமாக இருங்கள் . 

வாழ்த்துகள் உங்கள் தம்பியிற்கு, அதுவும் நம்மூர் பிரதேச சபை உறுப்பினராக இருப்பதிற்கு, மகிவும் மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நன்மை செய்வாராக சதி மத வேறு பாடு இன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.