Jump to content

UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .!

alien_13214-e1514013068359-680x365_c.jpg

விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து உருகி வரும் நட்சத்திரங்களைக்‌ கண்டதும் "வெள்ளி தண்ணி தாகம் எடுத்து உருகி வருது, தூ...தூ….தூ…" என மூன்று முறை நிலத்தில் துப்புவார்கள். மூன்று முறை துப்புவது மூடப் பழக்கமாக இருக்கலாம்‌, ஆனால் நட்சத்திரம்/விண்கற்கள் உருகி வந்தது உண்மை. இதுதான் 'Unidentified Flying Object' என்கிறார்கள்.

நமது ஊர்ப் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றுவதற்காக பேய் வருகிறது பூச்சாண்டி வருகிறது என்று எப்படி சொல்கிறார்களோ, அதே போல்தான் மேற்கத்திய நாட்டு உலகத்தில் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் ஏலியன்ஸ்கள் நம்மை அவர்கள் கிரகத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்கள் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவார்கள்.

யுஎஃப்ஒ காணப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும். முதன் முதலில் யுஎஃப்ஒ தோன்றிய சம்பவத்தைக் காண நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குத் தான் செல்ல வேண்டும். ஆம், இயேசு கிறிஸ்து ஜெருசலேம், பெத்லகேமில் பிறந்ததாக அறியப்பட்டு, வானியலைக் கணிப்பவர்கள் அவரைக் கண்டு வழிபட்டுச் செல்ல ஜெருசலேம் நகருக்கு வருகிறார்கள். ஜெருசலேம் பகுதியை உள்ளடக்கிய யூதேயா பிரதேசத்தின் ராஜா ஹேரால்டை சந்தித்து தாங்கள் வந்ததின் நோக்கத்தை தெரிவிக்கிறார்கள்.

"கிழக்கில் நட்சத்திரம் ஒன்று உதித்ததை நாங்கள் பார்த்தோம். இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் பிறந்திருக்கிறார். யூதர்களின் ராஜா எங்கே? நாங்கள் அவரை வணங்க வேண்டும்" என்கிறார்கள். (பைபிளின் தமிழ் பதிப்பில் 'சாஸ்திரிகள்' என்றும், ஆங்கிலத்தில் 'Wise men' என்றும் கூறப்படுகிறது. வேல்பாரியில் வரும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழரைப் போன்ற நபர்கள்) இந்த செய்தியைக் கேட்டு பயந்து போய் நடுங்கி இருப்பான் ஹேரால்ட். தனியாக அந்த அறிஞர்களை‌ அழைத்து "அந்த நட்சத்திரம் தோன்றிய காலத்தை கணித்துச் சொல்லுங்கள். நீங்கள் போய் முதலில் அந்த குழந்தையைப் பாருங்கள் பின்னர் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்பான்.

வானிலை அறிஞர்கள் அதைக் கேட்டு கிளம்பியதும் அந்த நட்சத்திரம் அவர்களுக்கு காட்சி அளிக்கும். அவர்கள் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள். பெத்லகேம் நகரத்தில் வந்ததும் அந்த நட்சத்திரம் நின்று விடும். அந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவைக் காண்பார்கள் அந்த வானிலை அறிஞர்கள். பின்னர் அந்த நட்சத்திரம் பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. ஒருவேளை அது மறைந்திருக்கும். இதுதான் முதல் யுஎஃப்ஒ சம்பவம்.

பின்நாட்களில் இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நட்சத்திரம் நமது சூரிய கிரகத்திலுள்ள Venus மற்றும் Saturn என்ற இரண்டு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்ததாக இருக்கலாம் என்று கூறினார்கள். அது எந்த நட்சத்திரம்? அது எப்படி நகர்ந்து சென்றது? எப்படி தானாக மறைந்தது? என்று யாருக்கும் தெரியாது. அறிவியலாளர்கள் இது ஒரு தற்செயலான சம்பவம் என்கிறார்கள். இந்த நட்சத்திரம் தோன்றி மறைந்தது தான் முதல் யுஎஃப்ஒ சம்பவமாக இருக்கலாம்.

நவீன யுஎஃப்ஒ-களைப் பற்றியதான காலம் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் ஐடோகோ மாகாணத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தர் மற்றும் விமானி Kenneth Arnold. இவர் ஜுன் மாதம் 24 ஆம் தேதி  தன்னுடைய விமானத்தில் (இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம்) Washington’s Mount Rainier அருகில் பறக்கும் போது தன்னுடைய விமானத்தின் அருகில் மூன்று பறக்கும் தட்டுகள் (flying disc or saucer) 'V' வடிவில் தன் விமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக 1700 mph வேகத்தில் பறந்து சென்றதாகத் தெரிவித்தார். இந்த யுஎஃப்ஒ கதை உடனே அந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது.

ஆரம்பத்தில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் சோதனைப் பயிற்சிக்காக அந்தப் பகுதியில் பறந்திருக்கலாம் என்றே அவர் நம்பினார். ஆனால், அப்படி ஏதும் பயிற்சிகள் அந்தப் பகுதியில் நடைபெற வில்லை என்று விமானப் படை அறிவித்தது. பின்னர் விமானப் படை அமைப்பு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து 'operation sign' என்ற பெயரில் இதிலிருக்கும் உண்மைகளை‌ ஆராயத் தொடங்கினர். 1948ல் Kenneth Arnold பார்த்ததாக கூறப்படும் யுஎஃப்ஒ-களில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டது. கடைசி வரையில் தான் கண்டது நிஜம் என்றே தன்னுடைய நிலைப்பாட்டில் நின்றார் Kenneth Arnold.

இதே ஆண்டில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் (Roswell, New Mexico) என்ற கிராமத்திலிருந்து 75 மைல்கள் தொலைவிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த பாலைவனப் பகுதியில், ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் வழக்கத்திற்கு மாறான உடைந்து போன பொருட்களையும், அதனுடன் வித்தியாசமான மனித உருவங்கள் போன்ற பொம்மைகளையும் தற்செயலாகப் பார்க்கிறார். உடனடியாக தகவல் அருகில் உள்ள விமானப் படை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை காலநிலை கண்டறியப் பயன்படுத்திய பலூன் ஒன்று வெடித்துச் சிதறியது எனக் கூறி‌ அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இது ஏலியன்ஸ் பயன்படுத்திய ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியில் தரையிறங்கிய போது வெடித்துச் (crash-landing) சிதறியது என்ற செவி வழிக் கதை அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. அடுத்த நாள் உள்ளூர் செய்தித்தாள் "RAAF Capture Flying saucer in Roswell region," என்று  முதல் பக்க செய்தியாக இதனை வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கூட்டியது. மக்கள் இன்றளவும் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்கள் நமது பூமியில் உள்ள பொருட்கள் இல்லை எனவும், அவைகளெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.

1950 காலகட்டங்களில் அமெரிக்க இராணுவம் சோதனை முயற்சியாக அதிகப்படியான 'dummy troops' பொம்மை வீரர்களை உருவாக்கி வானத்திலிருந்து கீழே விழும் சோதனைகள் செய்து கொண்டிருந்தார்கள். வானத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பைலட் கீழே விழுந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற சோதனை தான் நியூ மெக்சிகோ பகுதிகளில் நடைபெற்றது. அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என மக்களால் நம்பப்பட்டது. இன்றளவும் மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து 'ஏலியன்ஸ் இங்குதான் தரையிறங்கி இருக்கிறார்களா' என்று வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள். மேலும் இது ராணுவத்தால் பாதுகாக்கப்படும்  classified செய்யப்பட்ட பகுதியாகும்.

1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா விமானப் படை நிர்வாகம் 231 பக்க அறிக்கையில், ஏலியன்ஸ் வந்து இறங்கியதற்கான சான்று ஏதுமில்லை, case closed என அறிவித்து விட்டார்கள். இந்தப் பகுதி இப்போது ஒரு யுஎஃப்ஒ சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கடவுள், யுஎஃப்ஒ, ஏலியன்ஸ் இவைகளைப் பற்றி அமெரிக்க அறிவியலாளர் Carl sagen, Science Friday என்ற வானொலி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக எடுத்துரைத்தார்‌. "1947 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ ராஸ்வெல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலியன்ஸ் வகையான பொம்மைகளை மக்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்ததாகவே நம்பினார்கள்.

ஆனால், இராணுவம் அந்தப் பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்து இது ஒரு வகை பலூன் தான் என்றும், நாங்கள் அதனுள் வைத்தது சோதனைப் பொம்மைகள் தான் என்றும் கூறியது."

"யுஎஃப்ஒ என்பது கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் பறக்கிறது, அவ்வளவு தான்" என்றார் அவர்.

கடவுளைப் பற்றி அவர் கூறும்போது "கடவுள் தான் உலகைப் படைத்தார் என்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. அதனால், நான் அறிவியலை நம்புகிறேன்" என்றார்‌.

'Science' என்ற லத்தீன் சொல்லுக்கு அறிவு என்று பொருள் என்று கடைசியில் முடித்தார். (பேட்டி ஒலி வடிவில்; https://www.sciencefriday.com/stories/_sf_s=Ufo)

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏலியன்ஸ் பற்றிய வேடிக்கையான கதை ஒன்று பிரபலமாகியது. 'Area 51' என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நவேடா என்ற மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனப் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது.

இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்தன.

The Archangel-12 என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள் வேகத்தில் பறந்து ஆகாயத்தில் இருந்து பூமியின் படங்களை எடுத்து அனுப்பியது. இந்த விமானங்கள் வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம்.

கடந்த ஆண்டு ஒரு Facebook event group மூலம்  'Storm Area 51' எனப் பெயர் சூட்டி இந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் ஏலியன்களை உள்ளே வைத்து சோதனைகள் நடைபெறுகிறது; இதனைப் பார்ப்பதற்காக ஒன்னரை மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் கையொப்பமிட்டு இருந்தார்கள். 'இந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம், இது அமெரிக்க அரசின் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்' என்றது அமெரிக்க விமானப் படை.

ஏலியன்ஸ் மற்றும் UFO (unidentified flying object) இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உலகளவில் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும்  ஐம்பது விழுக்காட்டினர் இவைகள் உண்மை தான் என்றே நம்புகிறார்கள்.

வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்திற்கும் காப்பீடு  இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால், ஏலியன்ஸ் யுஎஃப்ஒ-களால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை 'alien abduction insurance' என்று அழைக்கிறார்கள்.

லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது. ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக நீங்கள் இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

'Storm Area 51' - இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் புதிதாக காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.

UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப் பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் Falcon Heavy test flight ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவினார். அதில் அவர் பயன்படுத்திய Tesla's roadster வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள்.

அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் 'Made in Earth by humans' என்று எழுதி இருந்தது. ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் 'இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது' என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது.

கடந்த 2019ல் அமெரிக்காவில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ-கள் காணப்பட்டதாக மக்களிடம் இருந்து தகவல் வந்ததாகக் கூறுகிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதுவே அமெரிக்க மக்கள் எந்தளவுக்கு இதன் மீது ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒன்று, இதனால் ஹாலிவுட்காரர்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

சரி, ஒருவேளை யுஎஃப்ஒ மற்றும் ஏலியன்கள் உண்மையாகவே இருப்பதாக இருந்தால், அதனை ufologist போன்றோர்கள் ஆராய்ச்சி செய்து அறிவிப்பார்கள். அதுவரை... ஏலியன்ஸ் நேரில் வரட்டும், அவைகளை நாமும் பார்ப்போம், அப்போது நம்புவோம்.

(தரவுகள்: https://www.livescience.com/20645-ufo-sightings.html)

- பாண்டி‌
http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/40240-ufo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.