Jump to content

லண்டனில் பிறந்த குழந்தையின் 31 ஆம் நாளைக் கொண்டாடிய தமிழ்க் குடும்பத்துக்கு நடந்த கதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள்.

இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள்.

விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழர்களே தற்போது பிரித்தானியாவில் உள்ள சட்ட திட்டங்கள் படி, 6 பேர் தான் கூட முடியும் என்பதனை நினைவில் வைத்திருங்கள். இன்றுவரை அந்த சட்டம் தளர்த்தப்படவில்லை. புதிய அறிவித்தல் வரும்வரை மிக அவதானமாக இருப்பது நல்லது.

ஏன் எனில் விழா வைக்கும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுவதோடு, விழாவில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் தண்டம் அறவிடப்படுகிறது.

http://www.newjaffna.com/2020/06/02/14988/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இது ஆதாரம் இல்லாத செய்தி.

அவனவன், வீட்டுக்கு வெளியால போகாம படுத்துக்கிடக்கிறான். கோவில் வேற பூட்டிக் கிடக்குது.

உதுக்குள்ள, 31ம் நாள் தொடக்கு கழிவோ?

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான். 

இங்கே 20 பேராம். எதிரி.காம் தளத்தில் 35 குடும்பங்கள் என்று போட்டுள்ளார்கள்.

போன ஞாயிறு கோரோனோ கேஸ் செத்தவீடு, 6 பேரோட, லைவ் டெலிகாஸ்ட் பன்னுகினம்.

இது யாரோ, யாழ்பாணத்திலை, அவிச்சு இறங்கின கதை....

நான் கேள்விப்படேல்ல.

பெருமாள்....? வேற யாரும் லண்டன் காரர்?

கொரனோ  இரண்டாவது அலை யில் தேவையில்லாமல் ஒரு தமிழரும்  இறக்க கூடாது செய்தி உண்மையோ பொய்யோ இப்போதைக்கு உண்மையாக இருக்கட்டும் ஏற்கனவே  அழிந்து போயுள்ளம் .

உள்ளூர் செய்திகள் குற்றம்கள் என்பன மொபைலில் உடனுக்குடன் அறிய nextdoor app இருக்கு லண்டனில் பிரியோசனமான ஒன்று .

அட இணைத்தவர்  இவரே கொழும்பாரே அவர் அப்படியான சேதியை தான் தேடி இணைப்பார் புலம்பெயர் தமிழர் மீது அவ்வளவு அன்பு அவருக்கு நன்றி கொழும்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அய்யர் போகமாட்டார், ஒருத்தனும் எட்டிப்பாக்கான்

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வதந்திதான் அது

21 hours ago, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன். இலண்டனில் 1000 பவுண்ட்ஸ் எல்லாம் தண்டம் வைக்கமாட்டார்கள். லொக்டவுனை மதிக்காவிட்டால் 100 பவுண்ட்ஸ் தண்டம். அதை 14 நாளுக்குள் கட்டினால் 50 பவுண்ட்ஸ்தான்.

 

ஆனால் ஐயரைக் கூப்பிட்டு வீட்டுக்குள் நடந்த இரண்டு கலியாணங்களின் வீடியோக்கள் முகநூலில் வந்தன. ஒன்றில் ட்ரோனில் வேறு வீடியோ எடுக்கின்றார்கள்!

 

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வெறும் வதந்திதான் அது

புத்திசாலிச் சனம். வீண்செலவு இல்லாமல் தள்ளிப்போடாமல் லொக்டவுனில் கலியாணத்தை முடிச்சிட்டினம் 

இவவின்ரை பிரச்சனைவேறை...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

இந்த ஐயரை எங்கேயோ கண்ட மாதிரி இருக்கு 😛

உள்ள   கோயிலுகளுக்கெல்லாம் விரதம் இருந்தால் எல்லா பூசாரியளையும் பக்கெண்டு ஞாபகத்துக்கு வராதுதானே 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2020 at 21:33, கிருபன் said:

இந்த 31 துடக்குகழிவு வதந்தி என்றுதான் நினைக்கின்றேன்.

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 பலர் இதை உண்மை மாதிரி கதைக்கிறார்களே 😟

ஊரிலை வதந்தி பரப்புவர்களும் இங்கு வந்து தனி இணையம் வைத்து வதந்தி பரப்புகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

தெரிந்தும் தெரியாத ஆள் போல்.

உங்கடை அயல் நாகபூசணி மெயின் அய்யர் தான் .

எனக்கு அவரைத் தெரியாமல் இருக்குமா 😅 ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன்🤣 ..பெருமாளுக்கு இவரை கண்ணில் காட்டக்  கூடாது என்று நினைக்கிறேன் :unsure:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப லண்டன் வல்வை சுமனின்யூ  ரியூப் நாடகம் போகுது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.