Jump to content

கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு


Recommended Posts

(நா.தனுஜா)

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது.
சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.

சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.

எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/83226

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

புது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி?  " இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது". 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புது டெல்லிக்கு சொல்லப்பட்ட செய்தி?  " இலங்கையில் இந்தியா தலையிடுவதை சீன அரசு அனுமதிக்காது". 

செய்தி அதுவல்ல அம்பானையார்.

யுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார். 

டெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...

இதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...😎

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

செய்தி அதுவல்ல அம்பானையார்.

யுத்தக்குற்ற விசாரணை அது இது எண்டு தாரும் வந்தால், இந்த சப்பட்டை மூக்கன் பாத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்று சொல்லுறார். 

டெல்லிக்காரனும் அந்த நிலை எண்டபடியால், அவர்களது வாயிலும் அல்வா தானே இருக்கும்...

இதை தான் (டெல்லி)திருடனுக்கு தேள் கொட்டின கொடுமை என்பது...😎

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

அதென்னே புதுசே...

சும்மா அப்பப்ப, பொழுது போகாட்டில் ஓதுவினம்...

தாரும் காது கொடுத்து கேட்கமாட்டினம் எண்டு தெரியுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்க சொல்லி வற்புறுத்தினால்? 

அதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும். ☹️

Link to comment
Share on other sites

54 minutes ago, Kapithan said:

அதெப்படி முடியும். கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினவர்கள் எப்படி இலங்கையை வற்புறுத்த முடியும். ☹️

அரசியலில் அதெல்லாம் சாகசமப்பா   🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

உண்மை ச‌கோத‌ரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் வழமையான சரவெடிதான்.

சீனா எப்போது எங்கு தான் நீதியின் பக்கம் நின்றிருக்கிறது. இப்போ ஹிந்தியா தான் நெருக்கடியில்.. சுற்றிவர எதிரிகளை தனதாக்கியது தான் மிச்சம். 

எம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /

எம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /

இந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /

2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dfg.jpg

குல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்.. 👍

தெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு  இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் . 

அது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும் 

கொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்ள தமிழர்களே..அவன் எஸ்கேப் ..

கிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன்  இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.. 👌

மற்றும் கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

இந்தியனுக்கு ஆப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

எம்ம‌வ‌ர் 2005ம் ஆண்டும் இந்தியாவுட‌ன் ந‌ல் உற‌வை பேன‌வே விரும்பினார்க‌ள் , அத‌ ப‌ல‌ வ‌டிவ‌த்தில் எடுத்தும் சொன்னார்க‌ள் /

எம்ம‌வ‌ர் இருந்து இருக்க‌னும் இந்தியாவுக்கு பாதுகாப்பாய் இருந்து இருப்பின‌ம் /

இந்தியா எப்ப‌வும் த‌ன் த‌லையில் தானே ம‌ண் அள்ளி போட்டு தானே ப‌ழ‌க்க‌ம் /

2009ம் ஆண்டுட‌ன் இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது 😠😡

ஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...

இந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, putthan said:

ஆனால் சீனாக்கார்னை விட இந்த இந்தியன் பிழையில்லை என நினைக்கிறேன்.....எம் இனத்தை அழித்தவர்கள் அதில் மாற்றுக்க்ருத்துக்கு இடமில்லை ....சீனாக்காரனின் கொள்கையுடன் தாக்குபிடிக்கமுடியாது...

இந்தியா உடைந்தால் சிங்களவன் சீனாக்காரனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை ஆளநினைப்பான்

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி புத்த‌ன் மாமா ,

பொறுத்து இருந்து பாப்போம் எதிர் வ‌ரும் கால‌ங்க‌ளில் என்ன‌ ந‌ட‌க்குது என்று 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2020 at 23:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Dfg.jpg

குல சேகர பட்டணத்தில் ரோகேற் ஏவுதளம் , தஞ்சையில் புதிய விமான படை தள விரிவாக்கம் என்டு கிந்தியனும் அவனால் முடிந்ததை செய்து கொண்டுதான் இருக்கான்.. 👍

தெற்கில் தமிழீழம் இருந்தால் சீனனுக்கோ அல்லது வேறு நாட்டு  இந்தியாவை தாக்குவதற்கு முன் தடுப்பு முன்னரங்கு அதுவாகதான் இருந்து இருக்கும் . 

அது இல்லாமல் போக இப்போ கொஞ்சம் எக்ஸ்றன் பண்ணி தமிழ்நாடுக்கு வந்து இருக்கான் . முதல் அடி இங்கு தான் விழும் 

கொஞ்சம் யோசித்தால் பலி ஆவது பாக் ஜல சந்தி இரு பக்கத்தில் உள்ள தமிழர்களே..அவன் எஸ்கேப் ..

கிந்தியனுக்கு அடி மேற்கில் பாகிஸ்தான் , வடக்கே சீனன்  இருந்து நேரடியாக விழ தமிழர் தரப்பு சேதாரம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.. 👌

மற்றும் கிழக்கில் பங்களாதேஸ்/பர்மா ..அவை இருந்தும் ஒன்றுதான் இல்லாம இருப்பதும் ஒன்றுதான்..

அதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்! -உண்மை என்ன.?

maxresdefault.jpg

தஞ்சாவூர்: நேற்று தஞ்சாவூரில் பயங்கரமான சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் திடீர் என்று மதிய நேரத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. பெங்களூர் முழுக்க பல்வேறு பகுதிகளில் சத்தம் கேட்டது.

இதனால் பெங்களூரில் எங்காவது வெடிகுண்டுகள் வெடித்துவிட்டதா என்று மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக இணையம் முழுக்க நிறைய விவாதங்கள் நடந்தது. பெங்களூருக்கு ஏலியன் வந்துவிட்டதா என்றும் கூட விவாதம் செய்தனர்.

உண்மை என்ன.?

இந்த நிலையில் பெங்களூரில் இப்படி மிக அதிகமாக பயங்கர சத்தம் கேட்க காரணம் சோனிக் பூம் என்று இந்திய விமானப்படை விளக்கம் அளித்தது. பொதுவாக விமானப்படை விமானங்கள் சப் சோனிக், சோனிக், சூப்பர் சோனிக், ஹைப்பர் சோனிக் என்று பல விதமான வேகங்களில் செல்லும்  திறன் கொண்டது. இதில் விமானம் சோனிக் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் பறந்தால் பயங்கர சத்தம் கேட்கும்.

அதிர்ச்சி அலைகள் வரும்

விமானம் அல்லது ராக்கெட் காற்றை கிழித்து கொண்டு செல்லும் போது ஏற்படும் அதிர்ச்சி அலைகள் ஒன்றாக சேர்ந்து இப்படி சத்தம் கேட்கும். இதைத்தான் சோனிக் பூம் என்று கூறுவார்கள். பெங்களூரில் இப்படித்தான் அன்று சோனிக் பூம் கேட்டு இருக்கிறது. விமானப்படை புதிய வகை சோனிக் ரக விமானம் ஒன்றை வைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்த பயங்கர சத்தம் கேட்டு இருக்கிறது.
காரணம்.

தஞ்சாவூர்

Brihadeeswarar-Temple-1-1.jpg

இந்த நிலையில் தஞ்சாவூரில் இதேபோல் சோனிக் பூம் சத்தம் கேட்டு இருக்கிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுக்கூர், நாகப்பட்டினத்தில் சில பகுதிகளில் இந்த சத்தம் கேட்டு இருக்கிறது. பயங்கரமாக வெடி வெடிப்பது போல சத்தம் கேட்டது. இதனால் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இதற்கும் சோனிக் பூம்தான் காரணம் என்கிறார்கள்.

விமானப்படை

தஞ்சையில் விமானப்படை சமீப நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு இருக்கும் விமானப்படை தளத்திற்கு புதிய வகை விமானங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு சோனிக் ரக விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு இப்படி சத்தம் கேட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக விமானப்படை இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தயார் நிலை

கடந்த ஒரு மாதமாகவே நாடு முழுக்க விமானப்படை தீவிர பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. தங்களின் விமானங்களை நாட்டுக்கு உள்ளேயே பறக்க வைத்து தீவிரமாக பயிற்சிகளை செய்து வருகிறது. இதனால் நாடு முழுக்க பல இடங்களில் அடிக்கடி சோனிக் பூம் சத்தங்கள் கேட்டு வருகிறது.

https://tamil.oneindia.com/news/thanjavur/the-huge-sound-heard-in-tanjore-sonic-boom-may-be-the-reason-387796.html

டிஸ்கி :

hqdefault.jpg

கோயில் இருக்கும் இடத்தில் குள்ள நரிக்கு என்ன வேலை.?

தூக்கி வேற இடத்திற்கு வையுங்கப்பா.😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.