Jump to content

சில ஞாபகங்கள் -7


Recommended Posts

அப்பா வீட்டில்  சட்ட திட்டம் போடுவது  குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில்  நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும்.
 
இலங்கை வானொலியில்  பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி  சாமி கும்பிட்ட  பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில்   இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம்.
 
இங்கு கனடாவில் சமர் காலத்தில் இரவு ஒன்பது மணிக்கும் வெயில் எறிக்கிறது. வின்ரரில் நாலு மணிக்கே இருட்டி விடுகிறது. இதனால் என் பிள்ளைகளுக்கு நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்கிற இந்த நாட்களாவது செய்து பார்போமென்றால் புது சிக்கல் வருகிறது. சின்னவளுக்கு ஆறு மணிக்கு வயித்து குத்து வருகிறது. அல்லது சொல்லி வைத்தால் போல் சரியாக ஆறு மணியாகிறபோது ஏதாவது ஒரு வருத்தம் வந்து சேர்வதாக சொல்கிறாள்.  இப்படியாக இதை அமுல் படுத்துவதில் இப்போதும் தோற்றே போகிறேன்.
 
 
வயதும் வகுப்பும் சரியாக நினைவில்லை.அப்போது  சித்தாந்தம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தேன். அது சமயமும் சடங்கும் பொய்யென்றது. கடவுள் மறுப்பும் கலந்திருந்தது. சரியென பட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திகொண்டேன். அப்பாவின் சின்ன வயது பழக்கமொன்று முதன் முதலாக கைவிட்டு போனது.  
 
 
பொன்னரின் ஒரு பனை கள்ளுக்கு ஊருக்குள்  வாடிக்கையாளர் வட்டம் ஒன்று இருந்தது. அப்பாவும் ஆனந்தன அண்ணாவும் சில விடுமுறை நாட்களில் அங்கு போவதுண்டு. அங்கிருந்து வந்ததும் சேர்ந்து காட்ஸ்  விளையாடுவோம்.304 இல் சரியாக  கம்மாரசு அடிப்பது எப்போதும் திரில். கொஞ்சம் பிந்தினாலும் முந்தினாலும் ஆட்டம் கவிழும். கொஞசமும் அசர முடியாது.  வைத்து கொண்டு துரும்பால் வெட்டுவதில் ஆனந்தன் அண்ணா கில்லாடி. கண்டு பிடித்தால் பொன்னரின் கள்ளு செய்த வேலையென்று  தப்பித்துக் கொள்வார்.  அரசியலும்   ஆனந்தன் அண்ணாவின் பகிடியுமென அந்த இரவுகள்  குதூகலம் நிறைந்தவை. இன்றைக்கும் சின்ன வயது ஞாபகங்களில் தொலையாமல் இருப்பவை.  
 
இரவுகள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. மகாபொல காசு கைக்கு வருகிற பேராதனை இரவுகள் பெரும்பாலும் நீளும்.   சிலருக்கு லியோன்ஸ் ஸ்பெசலோடு  அது  முடிந்துவிடும். படிப்பு செலவுக்கு அரசாங்கம் தருகிற காசை சாப்பாட்டுக்கு செலவழிக்க கூச்சபடுகிறவர்  ஈரிகமவில் இருக்கிற  பாருக்கு போகலாம்.  எப்போதும் பிசியாக இருக்கிற அந்த குட்டி  பாரில் ராஜா என்கிற தனி ஆளே எல்லாமாக இருப்பான்.மேசையை துடைப்பது தேவைப்படுவதை  கொண்டு வந்து தருவது திரும்ப திரும்ப ஒன்றையே பேசுபவர் கதைகளை கேட்டது இப்படியாக  பம்பரமாக தனியொருவன்  சுழன்றபடி இயங்குவான்.  ராஜாவின் புண்ணியத்தில்  இருப்பதற்கு மூலையில் ஒரு மேசை கிடைக்கும்.  பிறகு ஒரு போத்திலும் சில  கிளாசும்  கொஞ்ச கடலையும் வந்து சேரும். கொஞ்சம் நேரம் செல்ல அரசியலும் இன்ன பிறவும் பேச்சில்  கலக்கும்.   இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை காணும்வரை அந்த மேசையில்  யாரும் ஓயமாட்டார்கள். நல்ல வேளையாக  பக்கத்து மேசையில் இருப்பர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதால் எந்த அசம்பாவிதமும்  நடப்பதில்லை . அப்படி ஏதேனும் சிக்கல் வந்தால் ராஜா ஓடி வருவான். கம்பஸ் கட்டிய என்று சமாளித்து பஸ் ஏத்தி
விடுவான்.
 
அக்பருக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு  மணியை தாண்டி இருக்கும். ரூமுக்குள்  கச்சேரி தொடங்கும். ரேடியோவில் சினிமா பாடல் அதிரும். சிவமணிகள் மேசையில் திறமையை காட்டுவார்கள். மற்றவர்கள் sp யாகவும்  ஜெசுதாசாகவும் மாறுவார்கள். அந்த இரவு முடிகிற நேரம் யாருக்கும் தெரியாது.
 
இப்போது அப்பா இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா தெரியாது.
இரவுகள் முந்தியும் பிந்தியுமென்றாலும் இன்னும்  வருகிறது.
 
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

ஞாபகங்கள் எப்பொழுதும் அலாதியானவை. அவை என்றும் மகிழ்ச்சியான மன நிறவையும் சில ஞாபகங்கள் கண்ணீரையும் தருபவை. 

அப்பாவின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் கைவிட்டது உங்கள் தேடல் தெளிவு.அதை உங்கள் அப்பா இப்போது இருந்தால் புரிந்து கொள்வார். 

உங்கள் வீட்டு சட்டம் போல கால் முகம் கழுவி சாமிகும்பிட்டு படித்த நாட்கள் ஞாபகம் வந்து போகிறது. 

அடுத்த தலைமுறையின் உங்கள் பிள்ளைகளுக்கு ஊரில் நீங்கள் படித்தது போல பின்னேரம் இருட்டு வரத் தொடங்க இருத்தி வைத்து படிப்பிப்பது சாத்தியம் இல்லை. 

இங்கு வளரும் எங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். அவர்கள் கட்டாயத்தின் பெயரில் எதையும் செய்ய வரமாட்டார்கள். அவர்கள் தாங்களாக படிக்கும் கல்விமுறையோடு வளர்க்கிறார்கள்.  
அவர்களின் ரசனை எதுவோ அது சார்ந்து நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன் என்று தைரியத்தை கொடுங்கள். அவர்கள் நன்றாகவே வளருவார்கள் வருவார்கள்.

பி.கு - நீண்ட நாட்களின் பிறகு இன்று யாழ் வாசிக்கிறேன். அதில் உங்கள் ஞாபகங்களை வாசித்தேன். 

ஞாபகங்களை தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

கருத்துக்கும் ஊக்கப்படுத்துவதட்கும் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 13/8/2020 at 11:55, suvy said:

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

நன்றி suvy 

On 14/8/2020 at 17:56, கிருபன் said:

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

நன்றி   கிருபன் .

சில நல்ல  பழக்கங்களை குடும்பங்களில்  சம்பிரதாயங்களாக கடத்தி இருக்கிறார்கள் .
கடவுள் மறுப்பின் பெயரில் அவற்றையும் சேர்த்தே சிதைக்கிறோமோ என்கிற நெருடல் இருக்கிறது .
அவ்வளவுதான் .
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.