Jump to content

சீனத்தின் ஹொங்கொங் பாதுகாப்புச் சட்டம், இமாலயத்தில் படைக்குவிப்பு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங்காங் மக்களின் பேச்சுரிமை, ஒன்றுசேரும் உரிமை, தகவல் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.

ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான subversion   (அரசுக்கு எதிரான ), பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் தண்டிக்கவும் இந்தச் சட்டம் தேவைப்படுவதாக சீனா கூறிக் கொண்ட போதிலும், இவை போன்ற பாதுகாப்புச் சட்டங்கள் எனப்படுகிறவை ஒடுக்குமுறைக் கருவிகளே தவிர வேறல்ல என்பதை ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் நன்கறிவார்கள்.

1997ம் ஆண்டு ஹொங்கொங்கை சீனாவிடம் பிரித்தானியா ஒப்படைத்த போது, சீனம் ஏற்றுக் கொண்ட சீன-பிரித்தானியப் பிரகடனத்தால் உத்தரவாதமளிக்கப் பெற்ற ஹொங்கொங்கின் தன்னாட்சியை, சீனாவின் பாதுகாப்புச் சட்டம் சட்மென்பது, ஹொங்கொங்கின் தன்னாட்சி இறைமையினை பெரிதும் அழித்து விடும் என்று ஒஸ்திரேலியாவும், பிரித்தானியாவும், கனடாவும், அமெரிக்காவும். தெரிவித்துள்ள கவலையை ஈழத் தமிழர்களாகிய நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்னும் வரையப்படாத ஹொங்கொங்குக்கான பாதுகாப்புச் சட்டத்துக்கு, ஹொங்கொங் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கேட்பதைத் தவிர்த்து ,மாறாக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் இந்தச் சட்டத்தை ஹொங்கொங் மக்கள் மீது ஒருதரப்பாகத் திணிக்கவுமான சீனாவின் திட்டம், ஹொங்கொங்கில் இப்போதுள்ள ஆட்சிமுறையை மீறுவதாகும். ஹொங்கொங்கின் தன்னாட்சியைப் பாதுகாக்கும் இந்த ஆட்சி முறை பேச்சுவழக்கில் 'ஒரு நாடு இரு ஆட்சிமுறை ' ( "one country, two systems") என்று அழைக்கப்படுகிறது.
 

ஹொங்கொங்கில் ஜனநாயகக் போராளிகள், குறிப்பாக மாணவர்கள் 2014 ( "Umbrella Movement"  )'குடை இயக்கத்தை' 2019ம் ஆண்டு இரண்டாம் முறை நிகழ்த்திக் காட்டிய போது உலகின் கவனம் ஈர்த்தார்கள். ஹொங்கொங் நீதியமைப்புக்கும் சீனாவின் நீதியமைப்புக்குமான அடிப்படைப் பிரிவுக் கோட்டை அழித்து விட்டிருக்கக் கூடிய இந்த சட்டத்தை (ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கொண்டு விசாரணை செய்வதற்கு வழிகோலும் சட்டம்) இயற்ற சீனம் வகுத்த திட்டத்தை இந்தப் போராட்டம்தான் முறியடித்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அப்போது தோழமை உணர்வில் ஹொங்கொங் போராட்டக்காரர்களின் கரங்களைப்பிடித்து நின்றது. இப்போதும் அதே தோழமை உணர்விலும் முறையே எல்லோரதும் உரிமைப் போராட்டங்களின் தோழமை நெருக்கத்திலும் அவர்களின் கரங்களைப்பிடித்து நிற்கிறது.

இதேவேளை இமாலயத்தில் எல்லையருகே இந்தியத் துருப்புகளுடனான சீனாவின் படைக்குவிப்பு கெடுபிடியையும் (military adventurism) இந்த நேரத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. குறிப்பாக உலகம் கொவிட்-19 நோயால் பெரும் நெருக்கடியினை சந்தித்கொண்டிருக்கும் இவ்வேளையில் இராணுவ முன்னெடுப்புக்களுக்கு இடமே இல்லை எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இன்றைய தேவை ஒத்துழைப்பும் மனிதநேயச் செயலுமே எனத் தெரிவித்துள்ளது.
இணைப்பு இல்லை
மின்னஞ்சலில் வந்தது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வேற இடைக்கிடை கிளுகிளுப்பை மூட்டிக் கொண்டிடு.... 😂😂😂😂

Link to comment
Share on other sites

இன்று ஈழத் தமிழருக்காக உலகநாடுகளுடன் தொடர்புகொள்ளக்கூடியதும், தமிழீழ அரசியல்பற்றி அலசும் ஆற்றலைக் கொண்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றுமட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்க என்ன சத்தம்....

நாடு கடந்த அரசாங்கம் கண்டிச்சு.... சீனா இனிமேல் இந்திய எல்லையில் வாலாட்ட முடியாது. 

அனேகமாக கொத்தாவின் நடுநிலைமையுடன் சீனாவுக்கும் நா க அரசாங்கத்துக்கும் இடையில், இந்திய சீன எல்லையில் பதட்டம் தொடர்பாக சீனாவுக்கு இருக்கும் கவலைகளை சீன அதிகாரிகள் விசுவநாதனுடைய பொடியன் உருத்திரகுமாருக்கு விளக்குவார்கள்.

 

அதன் பின்பு நாடு கடந்த அர்சுக்கும் சீனாவுக்கும் வரலாற்றுக்காலம்தொட்டே தொடர்புகள் இருக்கு உதாரணம் ஆயுதாலத்துக்கும் அதிபராக தற்போதய சீனத்தலைவரிருப்பதுபோல்  ஆயுதாலப் பிரதமராக நா க தமிழீழ அரசுக்கு திரு உருக்திரகுமார் இர்க்கிறால் என ஒரு நீண்ட நட்பு விளக்கத்தைச் சீன அதிகாரிகள் வெளியிடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.