Jump to content

``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா?'' - ஜான் மகேந்திரன் பதில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் சினிமாவில் என்றைக்கும் நிலைத்திருக்கும் பெயர் இயக்குநர் மகேந்திரன். 'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' என கிளாசிக் படங்களை இயக்கியவர். இவரும் இவரது மகன் ஜான் மகேந்திரனும் இலங்கைக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். அந்நாள்களைப் பற்றிப்பேசினேன்.

இயக்குநர் பாலா தயாரிக்கும் மலையாள ரீமேக் படமான 'ஜோசப்' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதிட்டிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?

''இயக்குநர் பாலா சாரும், நானும் பக்கத்து வீட்டுக்காரங்கன்றதால எங்களுக்குள்ள நெருக்கம் அதிகம். அடிக்கடி மீட் பண்ணிப் பேசிக்குவோம். நிறைய படங்கள் பற்றின டிஸ்கஷன் எப்பவும் எங்களுக்குள்ள போயிட்டே இருக்கும். பாலா சாரின் 'தாரை தப்பட்டை' படத்துல இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அதனால பாலாவுக்கு என்னோட பலம் நல்லா தெரியும். திடீர்னு போன் பண்ணி, ''ஜோசப்' மலையாளப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்றேன். இதுல தமிழ்ல நீங்க வசனம் எழுதுங்க'னு சொன்னார். எனக்கு மலையாளம் நல்லா தெரியும். அதனால, 'தமிழ்ல உருவாகுற படத்துக்குக் கூடவே இருந்து உதவி பண்ணுங்க'னு சொன்னார். மலையாளத்துல இந்தப் படத்தை எடுத்த பத்மகுமார் சார்தான் தமிழ்லயும் எடுத்திட்டு இருக்கார். லைஃப்ல இந்த மாதிரியான இயக்குநரைத் திரும்பவும் மீட் பண்ணுவேனானு தெரியல. அந்தளவுக்கு ரொம்ப பர்ஃபக்ட்டான ஜென்டில்மேன் பத்மா சார். இவர்கூட வேலை பார்த்தது பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு. இந்தப் படம் தவிர வேறொரு படத்தைத் தமிழ்ல எடுக்கவும் பத்மா சார் பிளான் பண்ணிட்டு இருக்கார். அந்த புரொஜக்ட்லயும் நான் இருக்கேன்

'ஜோசப்' மலையாளப் படத்துல அறுபது சதவிகிதம் ஒரு விதமான சைலன்ட் டிராவல் ஆகும். இந்த சைலன்ட் மூட் என்னை ரொம்ப பாதிச்சது. மலையாள ஆழ்வுணர்வும் மாறாம, அதேசமயம் நம்ம தமிழ் ஆடியன்ஸூக்கும் ஏத்த மாதிரி வசனங்கள் எழுதியிருக்கேன். அதேமாதிரி ஆர்.கே.சுரேஷோட சினிமா வாழ்க்கையில முக்கியமான படமா இது இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பண்ணியிருக்கார். 'இந்தப் படத்துக்கு ஜி.வி. இசையமைச்சதான் சரியாயிருக்கும்'னு பாலா சார் சொன்னார். மலையாள வெர்ஷனை விட தமிழ்ல பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.''

 

அதிகமான மலையாளப் படங்கள் தமிழ்ல இப்போ ரீமேக் ஆகுது... ஆனால் இந்தப் படங்கள் இங்கே கமர்ஷியலா ஹிட் ஆகுமா?

''நிறைய மலையாள சினிமா பார்த்துட்டு நம்ம ஊர்ல இப்படியொரு சினிமா எடுக்க மாட்டுறாங்களேனு ஒரு புலம்பல் எப்பவும் இருக்கும். ஆனா, இப்ப இருக்குற லாக்டெளன்ல தமிழ் ஆடியன்ஸ் நிறைய மலையாளப் படங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சோஷியல் மீடியால மலையாள சினிமா பற்றி எழுதிக்கிட்டே இருக்காங்க. 'ஜோசப்' படமும் வசூல் ரீதியா ஹிட் அப்படிங்குறதைத் தாண்டி நல்ல ஃபீல்குட் படம். ஓடிடி ரிலீஸூக்குப் பிறகு நிறைய பேர் மலையாள சினிமா மாதிரியான கதைக்களத்துல படம் எடுக்க வர்றாங்க. 'உதிரிப்பூக்கள்' படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுனாங்க. அதே நேரத்துல 'சகலகலா வல்லவன்' படத்தையும் ரசிச்சாங்க. அப்பா, 'மக்கள் எப்போதும் நல்ல படங்களை பார்க்க விரும்புவாங்க. நாமதான் கொடுக்கறதில்லை'னு சொல்லுவார். அதனால மலையாளப் படங்களும் தமிழ்ல நிச்சயம் கமர்ஷியலாவும் ஹிட் ஆகும்.''

 

நிறைய படங்கள்ல வேலை பார்த்தும் 'சச்சின்' படத்துக்குப் பிறகு டைரக்‌ஷன் பண்ண நீங்க இன்னும் தயங்குறது ஏன்?.

''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஃபிலிம் மேக்கிங் பற்றி அவரோட இயக்கத்துக்கு கத்துக் கொடுக்கணும்னு அப்பாவை ஈழத்துக்குக் கூப்பிட்டார். அப்பா மேல பிரபாகரன் பெரிய மரியாதை வெச்சிருந்தார். அப்போ, அப்பாகூட நானும் போயிருந்தேன். நாலு மாசம் வரைக்கும் அங்கே இருந்து அப்பா பயிற்சி கொடுத்தார். அப்போ, அங்கே கிடைச்ச அனுபவத்தை வெச்சு 'பனிச்சமரம்', '1996'னு குறும்படங்கள் எடுத்தார். அதுல 'பனிச்சமரம்' முழுக்க முழுக்கப் புலிகளைப் பற்றியது. அப்பாவுடைய மாஸ்டர் பீஸ் வொர்க் இதுல இருக்கும். ஆனா, இதை எல்லோரும் பார்க்க முடியாமப் போயிருச்சுனு ஒரு வருத்தம் எனக்குள்ள இருக்கு. அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

அந்த நேரத்துல என்கூட வேலை பார்த்தவங்க எல்லாரும் பயந்து போயிருந்தாங்க. 'ஏன் பிரபாகரன் சார்கூட சேர்ந்து வேலை பார்க்குறீங்க'னு கேள்வி கேட்பாங்க. நானும், அப்பாவும் பிரபாகரனை மீட் பண்ண போட்டோஸ் எல்லாமே பரவ ஆரம்பிச்சிருச்சு. அப்பாவும் எதையும் மறைக்கத் தயாராயில்ல. அதனாலயே சில காரணங்களால் என்னால தொடர்ந்து படம் பண்ண முடியல. ஆனா, இப்போ ஒரு படத்தை இயக்கப் போறேன். தயாரிப்பு நிறுவனம் ரெடியா இருக்காங்க. சீக்கிரமே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அதே மாதிரி சில படங்கள்ல நடிக்கவும் செய்றேன். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் த்ரிஷாவை வெச்சு 'ராங்கி' படத்தை டைரக்‌ஷன் பண்ணிட்டு இருக்கார். இதுல நான் போலீஸ் கேரக்டர் பண்ணியிருக்கேன். தவிர, அசோக் செல்வன் நடிச்சிருக்குற 'ரெட்ரம்' படத்துலயும் நடிச்சிருக்கேன்.''

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருந்த நாள்கள் பற்றிச் சொல்லுங்க?

''பிரபாகரன் சாருக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். ஒரு படத்தை எடுத்துக்கிட்டு முழுசா அலசி, ஆராய்வார். ரொம்ப நுணுக்கமா பேசுவார். புலிகளின் தலைவர் மாதிரி நம்மகிட்ட இருக்க மாட்டார். சினிமால பிரபாகரன் கேரக்டரை உருவகப்படுத்திக் காட்டுறதுக்கும் ஒரிஜினலா பார்த்ததுக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. அங்கேபோய் இறங்கினதும் பிரபாகரன் சாரைப் பார்க்க நானும், அப்பாவும் ஒவ்வொருநாளும் காத்துட்டு இருப்போம். அப்பா சில புத்தகங்கள்லாம் கையில வெச்சுட்டு ரெடியா உட்கார்ந்திருப்பார். 'சில சம்பவங்கள் இப்போ நடந்திருக்கு, பிறகு சந்திக்கலாமே'னு சொல்லுவாங்க. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு 'இரவு உணவு அண்ணன் கூட இருக்கும்'னு சொல்லுவாங்க. ஆனா, நடக்காது. 'என்னடா மீட் பண்ணுவோமா மாட்டோமா'னு ஒரு சர்ப்ரைஸோடயே டிராவல் ஆனோம். நமக்குள்ள அவரைப் பற்றின நிறைய இமேஜ் இருக்கும். ஆனா, அவரை மீட் பண்ணப்போ அந்த இமேஜ் எல்லாத்தையும் உடைச்சுதான் அவரைப் பார்த்தோம். அவரோட தோற்றம், பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப இயல்பா இருந்தது. ரொம்ப நெருக்கமான சொந்தக்காரனைப் பார்த்த மாதிரியிருந்தது.

'கனநேரம் காக்க வெச்சுட்டேனா'னு சிரிச்சிக்கிட்டே வந்தார். அதே மாதிரி அங்கே இருந்தவங்கலாம் அப்பாகிட்டா, 'தம்பி, தலைவர், பிரபானு எப்படி வேணா கூப்பிடுங்க. எப்படி கூப்பிட்டாலும் அண்ணன் தப்பா நினைக்க மாட்டார்'னு சொல்லுவாங்க. சாப்பிடும்போது 'இதைச் சாப்பிடுங்க'னு பாசமா எங்களுக்கு எடுத்து வைப்பார். அங்கே இருந்த ஒரு வெஜிடபிள் ரோலுக்குப் பெயர் கன்னிவெடி. ஒரு நியூ இயர் டைம் அவர்கூட அங்கே இருந்தேன். அப்போ என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டார். 'Will to freedom' புத்தகத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்தார். எந்தச் சூழலிலும் உலகமே பார்த்து மிரண்டு மரியாதை கொடுக்குற ஒருத்தர்கூட பேசிக்கிட்டு இருக்கோம்னு தோணவே இல்ல. யாராவது டூப் போட்டுக்கிட்டு நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்காங்களானு ஆச்சர்யப்பட வைக்குறளவுக்கு நடந்துகிட்டார். பிரபாகரன் மற்றும் தமிழ்செல்வன் ரெண்டு பேருமே இப்படிதான் நடந்துகிட்டாங்க. அங்கே இருந்து கிளம்பி சென்னைக்கு எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அவரோட ஆட்களை வெச்சு விசாரிச்சிக்கிட்டே இருந்தார்.''

பிரபாகரன் வீட்டில் பரிமாறப்படும் உணவுகள் மிகுந்த ருசியாக இருக்கும் என்கிறார்களே... அவரோடு சேர்ந்து சாப்பிட்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் எப்படி?

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

https://cinema.vikatan.com/tamil-cinema/director-john-mahendran-shares-his-experience-in-sri-lanka-with-his-father

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அப்போ, 'ஆணிவேர்'னு ஒரு படத்தை நான் டைரக்‌ஷன் பண்ணேன். இதை பிரபாகரன் சார்தான் புரொடியூஸ் பண்ணார்.

தலைவர் புரொடியூசர் ஆகவும் இருந்திருக்கிறார்....

சேராவின் நண்பன் இதற்கு பதில் தருவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பிழம்பு said:

 

''உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசை வரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''""

அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''""

அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,

நாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் , 

18 minutes ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

யாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் , 
1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை  உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு 

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

நான் சாப்பிடேல‌ , ஆனால் போர்க‌ள‌த்தில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு போர‌ உண‌வை பார்த்து இருக்கிறேன் , ப‌லாளியில் காவ‌லுக்கு நிக்கும் போராளிக‌ளுக்கு இர‌வு நேர‌ உண‌வை என‌து மாமா தான் சைக்கில‌ எடுத்து செல்வார் ,

நாம‌ இர‌வில் சாப்பிடும் புட்டு க‌றிக‌ள் இவை தான் மாமா போராளிக‌ளுக்கு எடுத்து சென்ற‌ போது பார்த்தேன் , 

யாழ்ப்பாண‌த்தில் உற‌வுக‌ள் நேரில் சென்று அவ‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை குடுப்பின‌ம் , 
1994ம் ஆண்டு நீங்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்து இருந்தா இது உங்க‌ளுக்கு தெரிந்து இருக்கும் , யாழ்ப்பாண‌ ஆரிய‌ குள‌ ச‌ந்தியில் போராளிக‌ளின் சிறு முகாம் இருந்த‌து அந்த‌ முகாமில் இருக்கும் போராளிக‌ளுக்கு ம‌க்க‌ள் தான் கொண்டு போய் குடுக்கிற‌வை  உண‌வை ,பெரிய‌ம்மா ச‌மைத்து த‌ர‌ நானும் கொண்டு போய் குடுத்த‌ நான் 1994ம் ஆண்டு 

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

மாமா என‌து உற‌வின‌ர்க‌ள் ச‌மைத்த‌ உண‌வை எடுத்து செல்வ‌து இல்லை , ம‌ல்லாக‌த்தில் இருந்து எடுத்து வ‌ந்து ப‌லாளியில் நிக்கும் போராளிக்கு இர‌வு நேர‌ங்க‌ளில் கொண்டு போய் குடுப்பார் ,

நான் யாழ்பாண‌த்தில் 1994ம் ஆண்டு குடுத்த‌து என‌க்கு இப்ப‌வும் நினைவு இருக்கு , எங்க‌ட‌ வீட்டில் இருந்து அவையின் முகாமுக்கு 5நிமிச‌ ந‌டை / 

இவை தெரிந்த‌ ப‌டியால் தான் எழுதினேன் , ஒரு த‌ட‌வை தான் நான் உண‌வு கொண்டு போய் கொடுத்த‌ நான் / நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி , ஒரு இர‌வு மிஞ்சிய‌ சாப்பாட்டு பாச‌ல் மாமா த‌ந்தார் சாப்பாட்டில் சூடு இல்ல‌ , நான் கொஞ்ச‌ம் சாப்பிட்டு அப்ப‌டியே வைத்து விட்டேன் , 

16 minutes ago, நிழலி said:

பையன், வெளியாட்களோ பெற்றோர்களோ போராளுகளுக்கு உணவு கொடுக்க அனுமதி இல்லை. ஒரு வேளை அந்த காலகட்டத்தில் நீங்கள் மிகச் சிறுவனாக இருந்திருப்பீர்கள் என்பதால் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்களோ தெரியாது.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் என்று ஒரு சமையல் காம்ப் இருக்கும். ஊரில் இருக்கும் பலர் (முக்கியமாக பெண்கள்)  தாமாகவே முன் வந்து சமையலில் ஈடுபடுவார்கள். ஆனால் உணவு தாயாரிப்பதற்கான உணவுப் பொருட்கள் அனைத்தும் புலிகளினால் தான் கொடுக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு சமைத்த பின் அங்கிருந்து வாகனங்களில் போராளிகளின் முகாம்களுக்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சமைத்த உணவு போராளிகளின் கைகளுக்கு கிடைக்கும் போது அவை ஆறிப் போனதாக அனேக நேரங்களில் இருக்கும். எல்லா போராளிகளும் ஒரே நேரத்தில் உண்பதும் இல்லை.

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

எம் போராட்ட‌த்துக்கு என்று ப‌ல‌ விதிமுறைக‌ள் இருக்கு , சாப்பாட்டுக்கும் க‌ட்டுப் பாடு என்று இப்ப‌ தான் அறியிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

ஆம்.  🙂

போர் முன்னரங்குகள் எவ்வாறு இருக்கும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் முகாம்களில் சமைக்கும்போது முடிந்த அளவு சுவையாக சமைக்க முற்படுவர். அதன் அர்த்தம் எப்போதுமே,  எல்லோருமே  சுவையாக சமைக்க மாட்டார்கள் என்றாகாது. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

பிட்டும், இடியாப்பமும், பாணும் சாம்பலும் இருக்கிற இடத்தில ஆறின 100 தோசையா?
பிரபாகரனின் பிட்டு என்று தென் இலங்கையர்களே அனுபவித்து எழுதி இருக்கிறார்கள்.

என்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து …………..

விடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு.

தலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைகளை பார்த்தார் .

இது எனது சகோதரர் சொன்னது 
எல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூட ஒருவரும் நினைத்து பார்த்திருக்க மாடீர்கள்  )
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?

நான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே? நல்ல உணவு சாப்பிடக்கூடாத?

இவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்

Link to comment
Share on other sites

9 minutes ago, உடையார் said:

நான் போய் இருக்கின்றேன் சமையல் அறை வரை, பொன்னாலை காட்டுக்குள் பிடிக்கப்பட்ட 10-15 உடும்புகளை நான்தான் உரித்துக்கொடுத்தேன் சமைப்பதற்கு, நின்று பார்த்தேன் அவர்களுடன் சமைப்பதை, ஏன் அவர்களும் மனிதர்கள் தானே? நல்ல உணவு சாப்பிடக்கூடாத?

இவரின் பேட்டியை முதலே படித்துவிட்டேன், வேணுமேன்றே விகடன் இதை செய்கின்றார்கள்

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அவர்கள் மனிதர்கள் இல்லையென்றும் நல்ல உணவு சாப்பிடக் கூடாது என்றம் எவராவது இங்கு குறிப்பிட்டுள்ளார்களா?

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

 

Link to comment
Share on other sites

13 minutes ago, உடையார் said:

இந்திரியின் நோக்கமும் நீங்கள் கேட்ட கேள்வியும், அவர்கள் நல்ல உணவு சாப்பிடக்கூட மாட்டார்கள் என்ற மாதிரி இருந்திச்சு, அப்படி நீங்கள் நீங்கள் நினைக்கவில்லையென்றால் மிக்க சந்தோஷம் 🙏

 

 

4 hours ago, நிழலி said:

 

உணவு வகைகள் தரமானதாக இறைச்சி, மரக்கறி, பிட்டு என்று இருந்தாலும் சுவை, சூடு என்பவை மிகக் குறைவாகவே இருப்பதுண்டு. நெஞ்சில் இலச்சிய தாகமும், மனதில் உரமும் கொண்ட  போராளிகளுக்கு இவை ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

இவ்வாறு நான் எழுதியதை பார்த்து(ம்) எவ்வாறு இப்படி  உங்களுக்கு தோன்றியது என யோசிக்கின்றேன்...

நிழலி நீங்கள் கனக்க யோசிக்கவேண்டாம், என்னில்தான் பிழை, நீங்கள் அப்படி யோசிப்பவர் இல்லையென்று தெரிந்து கேட்டது எனென்றால், இதை முதலே விகடனில் வாசித்து கடுப்பில் இருந்தனான் இவர் மேல்😡, அதை இங்கு கண்டு, உங்கள் கேள்வியையும் பார்த்து இன்னும் கடுப்பாய்விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது, 

ஈழ விடுதலைப் போராட்டத்தை போராளிகள் சாப்பிட்ட  சப்பாட்டைக் கொண்டும் சமையலின் ருசியைக் கொண்டும் அளவிடும் நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து போய்விட்டோம் 

வெட்கக் கேடு. 😡

என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் ,

போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.