Jump to content

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்று அவசரக் கூட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்று அவசரக் கூட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதில் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றார்கள்.

விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்திரம் கணேசமூர்த்தி தலைமையிலான கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள்.

திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளரும் பொருண்மிய மேம்பாட்டு கழக பொறுப்பாளராகவும் இருந்த போராளி ரூபனும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்.

பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உட்பட முக்கியமான அரசியல் விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் ஆரபாயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்கள்-தேசிய-கூட்ட-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.