Jump to content

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்.

 
 
img_5015.jpg?resize=696%2C522&ssl=1

வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார்.

என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன்.

1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன்.

ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் நினைவு கூர்ந்துள்ளார்கள்.

அதுவும் ஜெர்மனியில் யூதர்களின் நூல்கள் எரிக்கப்பட்ட அதே சதுக்கத்தில் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதை தமிழர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்த நிகழ்வில் அதிகளவு அடுத்த சந்ததியினரான இளையவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.

எந்த சந்ததி தமிழை மறந்துவிடும் என்றார்களோ, எந்த சந்ததி தமது வேர்களை தேடமாட்டார்கள் என்று கூறினார்களோ அந்த சந்ததி பங்குபற்றியிருக்கிறது.

இந்த அடுத்த சந்ததியினர் தாம் வாழும் நாடுகளில் உள்ள மக்கள் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியில் தமக்குரிய நீதியை கோருகிறார்கள்.

எனவே இனி உலகம் செவிடாக இருக்க முடியாது. ஏனெனில் எமது அடுத்த சந்ததி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மிக விரைவில் எமக்குரிய பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது.

இதனால்தான் இலங்கை இந்திய அரசுகளின் விசுவாசிகளுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.https://orupaper.com/jpl-memorial/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி ஜ‌யா இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , 

ஆசியாவில் பெரிய‌ நூல‌க‌ம் என்று கேள்வி ப‌ட்ட‌ன் , 

கொஞ்ச‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சிங்க‌ள‌ புத்த‌ பிக்கு நூல‌க‌ எரிப்புக்கு ம‌ன்னிப்பு கேட்ட‌தாய் வாசித்தேன் ,

சின்ன‌னில் ப‌டிக்க‌ ஆசை போர் சூழ‌லில் ப‌ல‌ரின் ப‌டிப்பு மிக‌வும் பாதிக்க‌ ப‌ட்ட‌து , ப‌லாளியில் இருந்து ஒரு செல் அடிச்சா ஏழாலை பாட‌சாலை உட‌ன‌ மூட‌ப் ப‌டும் , ந‌ம்ம‌ ஊர் பாட‌சாலை சொர்க்க‌ம் , ஆனால் அதில் ஒழுங்காய் ப‌டிக்க‌ குடுத்துவைக்க‌ல‌ 😓 அது தான் என் த‌மிழ் எழுத்து சொத்திக்கும் பித்திக்கும் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

நொச்சி ஜ‌யா இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , 

ஆசியாவில் பெரிய‌ நூல‌க‌ம் என்று கேள்வி ப‌ட்ட‌ன் , 

கொஞ்ச‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சிங்க‌ள‌ புத்த‌ பிக்கு நூல‌க‌ எரிப்புக்கு ம‌ன்னிப்பு கேட்ட‌தாய் வாசித்தேன் ,

சின்ன‌னில் ப‌டிக்க‌ ஆசை போர் சூழ‌லில் ப‌ல‌ரின் ப‌டிப்பு மிக‌வும் பாதிக்க‌ ப‌ட்ட‌து , ப‌லாளியில் இருந்து ஒரு செல் அடிச்சா ஏழாலை பாட‌சாலை உட‌ன‌ மூட‌ப் ப‌டும் , ந‌ம்ம‌ ஊர் பாட‌சாலை சொர்க்க‌ம் , ஆனால் அதில் ஒழுங்காய் ப‌டிக்க‌ குடுத்துவைக்க‌ல‌ 😓 அது தான் என் த‌மிழ் எழுத்து சொத்திக்கும் பித்திக்கும் 😓

கொடிய இனவழிப்புப் போர் கரணியமாக  உங்களைப்போன்று பாடசாலைக் கல்வியை சரியானமுறையிற் பெறமுடியாதவர்களும் இழந்தவர்களும் எனப்பலர்  உள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம்.  இந்த நினைவு நிகழ்வு பேர்லினில் நடைபெற்றபோதும் பெரிய அளவில் தமிழ் ஊடகங்களாற்கூடக் கவனிக்கப்படாத செய்தியாக  உள்ளது. ஒருபேப்பர் மற்றும் குறியீடு ஆகிய தளங்களில் மட்டுமே இந்தச் செய்தி பதிவாகியுள்ளது.  உண்மையில் ஆண்டுதோறும் இந்தநாளைப் பெரியளவில் நினைவுகூருதல் அவசியமானது.  

எமது அடுத்ததலைமுறைக்கு இந்த விடயம் கடத்தப்பட்டாக வேண்டும் என்பது தேசியம் சார்ந்த செயற்பாட்டாளர்களின் எண்ணத்தின் 
வெளிப்பாடாக இளையவர்களையும் இணைத்துக்கொண்டு இந்த விடயத்தைச் செய்துள்ளார்கள். 

நீங்கள் யாழ்நூலகம் தொடர்பான வரலாற்றுத் தரவுகள் இணையத்தில் இருக்கிறது . யாழிணையத்திலும் இந்த ஆண்டு நினைவுப்பகிர்வு தொடர்பான திரியில் உள்ளது. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.