Jump to content

அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம்.

 
 
img_4953.jpg?resize=471%2C310&ssl=1

ஒரே ஒரு மனிதன்..

அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல..

ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான்.

தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன்

“i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகிறது.. அந்த இறுதி மூச்சு காணொளி பார்க்கும் எவரையும் கொதித்தெழ செய்யும்..

அந்த கொதித்தெழுதலைதான் இன்று அமெரிக்கா பிரிட்டன் உட்பட வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கலந்து வசிக்கும் நாடுகளில் பற்றி எரியும் போராட்டங்கள் மூலம் பார்க்கிறோம்.

இந்த போராட்டங்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நிரப்பக்கூடிய முக்கியமான போராட்டங்களாக பார்க்கிறேன்..

இந்த போராட்டங்கள் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது..

அதன் பெயர் `அறம்’..

இந்த பூமி பந்து முழுமைக்கும் பரவியிருக்கும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த அறம்தான்.

காவலர் சீருடை அணிந்த ஒரு வெள்ளைக்காரனின் நிறவெறிக்கு கொல்லப்பட்டவர் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் அந்த கொலையை கண்டித்து உலகத்தையே வீட்டுக்குள் முடக்கிப்போட்ட இந்த கொடூரமான கொரோனா காலத்திலும் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அப்படி வீதிக்கு வந்தவர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் அல்ல.. என்பதும் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கிளர்ந்த இந்த போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்பதுதான் பற்றி எரியும் இந்த போராட்டத்திற்கு நடுவில் நம்மை நெகிழச் செய்கிறது.

ஆம் கொன்றவன் என் இனத்தானாக இருந்தாலும் அவன் செய்தது மாபெரும் பிழை என்று அறத்தின்பால் நிற்க வீதிக்கு வந்தார்கள் வெள்ளையர்கள்..

இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இதை அப்படியே இந்திய மனநிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.. அசிங்கமாக இருக்கிறது..

நடந்து போய்விடக்கூடிய தூரமான ஈழத்தில் பெரும் இனப்படுகொலை நடக்கிறது.. இந்தியர்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

சிங்களர்கள் ஈழத்தமிழர்களை கண்ணைக் கட்டி பின் மண்டையில் சுட்டுக் கொன்றதுபோலவே ஆந்திராவில் மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி 20 தமிழர்களை தெலுங்கர்கள் சுட்டுக்கொன்றார்கள்..

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர்களை விடுங்கள்.. இங்கு தமிழில் பேசி தமிழில் எழுதி தமிழால் வாழ்ந்து கொண்டு.. வெளியே தமிழராகவும் உள்ளே தெலுங்கராகவும் இருப்பவர்களே அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி தமிழில் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள்.. மடை மாற்றினார்கள்

சுத்தமான காற்று வேண்டும்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று போராடிய தூத்துக்குடி மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள்… வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை என்று மாநில முதல்வர் வெட்கமே இல்லாமல் சட்டசபையில் சொன்னார்.. தமிழர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்..

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி இந்து மதவெறியர்களால் இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படுகிறார்கள்..

இந்துக்கள் எனும் பொது சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது..

சாதி வெறிகாரணாமாக ஒடுக்கப்பட்ட சாதிக்காரனும் அவனை காதலித்த மகளையும் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யும்போதும்,

ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலம் கரைத்து ஊற்றப்படும்போதும்

சேரிகள் கொளுத்தப்படும்போதும் ஊர் சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே இருக்கிறது..

இதற்கு பச்சை தமிழன் பச்சை திராவிடன் பச்சை இந்தியன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை.

அசுரன் படத்தில் ,

“செருப்பு போட்டதுக்காக அவன் என்ன அடிச்சது கூட வலிக்கல மாமா.. ஆனா சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட ஏன் அந்த பிள்ளையை அடிக்கேனு கேட்கல மாமானு” தனுஷ் கட்டிக்கப்போகும் பெண் சொல்வதுபோல் ஒரு அற்புதமான காட்சி வரும்..

அதுதான் உண்மை..

எல்லா அநீதிக்கும் துணையாக நிற்பது இந்த வேடிக்கைப் பார்க்கும் புத்திதான்..

ஆனால் மனிதம் என்பது வேடிக்கைப் பார்ப்பது அல்ல.. அநீதி நடக்கும்போது அறத்தின் பால் நிற்க வேண்டும் என்பதுதான் வெள்ளை நிறவெறியால் மூச்சு நரம்பு நெறித்து கொல்லப்பட்ட கறுப்பினத்து ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக வீதிக்கு வந்து போராடும் வெள்ளையர்கள் இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்..

ஆம்.. அறம் என்பது யாதெனில் என்பதை கொஞ்சம் வெட்கத்தை விட்டு வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..!

கார்டூனிஸ்ட் பாலா

https://orupaper.com/american/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

101425628_3119796838077124_2203000811879923712_n.jpg?_nc_cat=111&_nc_sid=9267fe&_nc_eui2=AeFh8wMFahf8r0YAd9yYKyBQGw2-M5eecaMbDb4zl55xo34CNyYzy3sReCTM-tNmwMLn0ooYU6ODX73MKh-RE01f&_nc_ohc=U7tb5s3jLaUAX8p-9vw&_nc_ht=scontent-frx5-1.xx&oh=fdf8ac48c0994e6881d7c58bdaa8082b&oe=5EFF1F4E

ஜனநாயக கருத்து சுதந்திரத்தின் உச்சம்.. 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.