Jump to content

ஸ்ரீலங்காவின் உண்மையான கடன் தொகை எவ்வளவு? வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் உண்மையான கடன் தொகை எவ்வளவு? வெடித்தது புதிய சர்ச்சை

அரசாங்கத்தின் முழுக் கடன் தொகை தொடர்பில் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு தரவுகளுக்கு இடையே வேறுபாடு காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்கிற்கு அமைய 70,000 கோடி ரூபா வேறுபடுகின்றது.

நிதி அமைச்சின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 12 இலட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாவாகும்.

எனினும், 70,000 கோடி ரூபா அரச கடன் அதில் உள்ளடக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்படாத அரச கடன் தொகைக்குள் 31,820 கோடி ரூபாவிற்கான திறைசேரி முறிகள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடன், மேலும் சில வெளிநாட்டு கடன்கள் அடங்குகின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பெறப்பட்ட 17,200 கோடி ரூபா கடன், 2019 ஆம் ஆண்டிற்கான நிதி அமைச்சு அறிக்கையில் அரச கடனில் இணைக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 820 கோடி ரூபாவும் நிதி அமைச்சு அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

2018, 2019 ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட 3,340 கோடி ரூபாவும் நிதி அமைச்சு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144597

Link to comment
Share on other sites

இன்றைய கணக்காய்வாளர் நாயகம், நாளை, முன்னை நாள் கணக்காய்வாளர் நாயகமாகிவிடுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியோ... திருப்பி கட்டுற, கடன் இல்லைத் தானே.... :grin:
அதுக்கு ஏன்... இப்ப, கணக்குப் பார்க்கிறார்கள். 😎

Link to comment
Share on other sites

3 hours ago, உடையார் said:

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பெறப்பட்ட 17,200 கோடி ரூபா கடன், 2019 ஆம் ஆண்டிற்கான நிதி அமைச்சு அறிக்கையில் அரச கடனில் இணைக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய பயங்கரவாதக் கட்சியின் அரசில் நடந்த முறைகேடுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

எப்பிடியோ... திருப்பி கட்டுற, கடன் இல்லைத் தானே.... :grin:
அதுக்கு ஏன்... இப்ப, கணக்குப் பார்க்கிறார்கள். 😎

வாங்கின காசை பிரிச்சு எடுக்கிறதிலை பிரச்சனை வந்திட்டுது போல... :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.