Jump to content

துன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்க வேண்டும், அருமையான பேச்சு

 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, உடையார் said:

 

அலிபாபா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் VALVAI MAHALIR MAHA VIDYALAYAM VALVETTITHURAI VALVAI MAHALIR MAHA VIDYALAYAM VALVETTITHURAI

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் உன்னை கை கழுவினாலும்      
நடத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்     
முடியும் வரை முட்டி மோதி பாரு     
ஒரு பொழுதும் மனம் உடைந்திடா தே     
நல்லவன் யாரு கெட்டவன் யாரு     
உத்தமனம் இங்கே உலகத்தில் யாரு     
நீ கூறு…     
போனது போச்சி ஆனது ஆச்சி     
போனது போச்சுது ஆனது ஆச்சிது     
போடு… போடு… தூக்கி போடு     
வுலுகிலே… வுல்லே… வுலுகிலே… வுல்லே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…     
தப்பான ஆளுக்கு பணிந்துவிடாதே     
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு தொலைத்துவிடாதே     
பத்தோடு நீ ஒன்றாய் இருந்து விடாதே     
அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே     
உயிர் தானே போகும் போகட்டும் போடா     
போனாலும் தப்பே இல்லை     
கடவுள் உன்பக்கம் உனக்கென்ன துக்கம்     
போனது போச்சி ஆனது ஆச்சுது     
போடு… போடு… துக்கி போடு     
வுலுக்குவுலே… வுலுக்குலே வுலே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…     
உயிர் வாழ நியாயத்தை விட்டுவிடாதே     
உலகத்தில் உனக்காக மட்டும்     
வாழ்ந்து செத்துவிடாதே     
காயங்கள் இருந்தாலும் கலங்கிவிடாதே     
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்     
கறைந்துவிடாதே     
மதயானை பாதம் மிதித்தாலும் கூட     
சாகாமல் நீ வாழுவாய்     
மலைபோல விழுந்து நதிபோல் எழுவாய்     
போனது போச்சு ஆனது ஆச்சுது     
போடு… போடு… தூக்கி போடு     
வுலுக்குலே வுலே… வுலுக்குலே வுலே     
உலகம் உன்னை கை கழுவினாலும்…

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..
(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
(வாழும்..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
இருட்டினில் நீதி மறையட்டுமே!
தன்னாலே வெளிவரும் தயங்காதே!
தலைவன் இருக்கிறான் மயங்காதே! - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு!
முன்னாலே இருப்பது அவன் வீடு!
நடுவினிலே நீ விளையாடு!
நல்லதை நினைத்தே போராடு!
நல்லதை நினைத்தே போராடு!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

உலகத்தில் திருடர்கள் சரிபாதி!
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி!
கலகத்தில் பிறப்பதுதான் நீதி! - மனம்
கலங்காதே மதி மயங்காதே!
கலங்காதே மதி மயங்காதே!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...

மனதுக்கு மட்டும் பயந்து விடு!
மானத்தை உடலில் கலந்து விடு!
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு!
இரண்டினில் ஒன்று பார்த்து விடு!
இரண்டினில் ஒன்று பார்த்து விடு!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஓரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா..?
.
.
தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...?
.
.
வாழ்வைச் சுமையென நினைத்து 
தாயின் கனவை மிதிக்கலாமா...?
.
.
.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
 உணர்வை இழக்கலாமா...?
.
.

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?
.
.
.

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா
.
.
.
விடியலுக்கில்லை தூரம் 
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
.
.
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் 
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
 உணர்வை இழக்கலாமா...?
.
.

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?

தோல்வி நிலையென நினைத்தால் 
மனிதன் வாழ்வை நினைக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் 
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்...?

உன் நெஞ்சம் முழுவதும் வீரம் 
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்..?
 

யுத்தங்கள் தோன்றட்டும் 
ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா...?

ரத்தத்தின் வெப்பத்தில் 
அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா...?
 

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் 
உணர்வை இழக்கலாமா...?

உணர்வைக்கொடுத்து உயிராய் வளர்த்த 
கனவை மறக்கலாமா...?

யுத்தங்கள் தோன்றட்டும் 
ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா.....?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மலர்களே...
நம்பி இருங்களேன்...
நாளை நமதே! - இந்த
நாளும் நமதே!

தர்மம் உலகிலே...
இருக்கும் வரையிலே...
நாளை நமதே! - இந்த
நாளும் நமதே!

தாய் வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று
நேர் வழி சென்றால்...
நாளை நமதே!

காலங்கள் என்னும்
சோலைகள் மலர்ந்து
காய் கனி ஆகும்
நமக்கென வளர்ந்து...
நாளை நமதே!

நாளை நமதே!
நாளை நமதே!

நாளை நமதே!
நாளை நமதே!

பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்!
ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கைப் பூந்தோட்டம்!

மூன்று தமிழும் ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவியச் சிந்து!
அந்த நாள் நினைவுகள்
எந்த நாளும் மாறாது!

நாளை நமதே!
நாளை நமதே!

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே!
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களேன்!

நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி!
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது!

நாளை நமதே!
நாளை நமதே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.....


ஆ: அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு … ஹேய்

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.....


ஆ: அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹேய்...

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா....


ஆ: உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு,
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமிஏது கவலை விடு,
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து… ஹேய்..

ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா… ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்காதே தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,

சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்

சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும்…

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DR Raichal Rabecca | மனவலிமை முக்கியம்


ஜோஷ் Talks
407K subscribers

ரேச்சல் ரபேக்கா, மௌலிக சித்தாந்தாவில் முதுகலை பட்டம் பெற்று ஆயுர்வேத மருத்துவராக மட்டுமல்லாமல் சில வருடங்கள் சன் டிவியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கிவந்தார். ஒரு லட்சிய கனவை ஆசையாய் கொண்டு, பல தடுமாற்றங்கள் வந்தும் அதனை வெற்றிப் பயணத்தின் படிகளாக்கி சாதித்துள்ளார். அவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான், திரையுலகில் நடிக்க கிடைத்த வாய்ப்புகள். தனது வாழ்க்கையின் சவாலான பயணத்தைப் பற்றி இக்காணொளியில் பகிர்கின்றார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு

பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு

பெண் : குயில் இசை அது
பாடிட ஸ்வர வரிசைகள்
தேவையா மயில் நடனங்கள்
ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா

நதி நடந்து சென்றிட வழி
துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு கவலை
யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை
முழுதும் அழகு

பெண் : அழகே அழகே
எதுவும் அழகே

பெண் : இதயம் ஒரு
ஊஞ்சலே இடம் வலம்
அது ஆடிடும் இன்பத்தில்
அது தோய்ந்திடும் துன்பத்தில்
அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள்
இல்லையே நடப்பதை
நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே

பூக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி
வீசும் நம் நேசம்
ரொம்ப அழகு

பெண் : அழகே அழகே
எதுவும் அழகே அன்பின்
விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும்
வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும்
இலை கூட ஒரு அழகு

பெண் : புன்னகை வீசிடும்
பார்வைகள் அழகு வார்த்தைகள்
தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும்
பொய்களும் அழகு உண்மை
அதுதான் மெய்யாய் அழகு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே 
வாழ்த்து பாடு

கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு 
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை 
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

கடவுள் தந்த அழகிய வாழ்வு 
உலகம் முழுதும் அவனது வீடு 
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில் 
இன்பங்கள் என்றும் குறையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்

விடைபெறும் நேரம் 
வரும் போதும் சிரிப்பினில் 
நன்றி சொல்லிவிடுவோம்

ஓஓஒ ஓஒ

பரவசம் இந்த பரவசம் 
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே


(கடவுள் தந்த)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக் கடலில் தோணி போலே 
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை 
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா 
பறவைகளே பதில் சொல்லுங்கள் 
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் 
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை 
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை 
மனிதனம்மா மயங்குகிறேன் 
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே 
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே 

நல்லவர்க்கெல்லாம்... 
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி 
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா 
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா 
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா 
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி } (2)

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : தோல்வி எல்லாம்
தோல்வி இல்லை வெற்றி
என்றும் தூரம் இல்லை
அண்ணாந்து பார் ஆகாயம்
நீ புல் மீது பார் பூலோகம் நீ

ஆண் : உன் தேடல்
உன்னோடு தான் வேறு
எங்கும் தேடாதடா நீயாக
நீ மாறுவாய் உச்சத்தில்
நீ ஏறுவாய்

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
பி ஹேப்பி

ஆண் : மாற்றங்கள்
ஒன்றே தான் மாறாதடா
கண்ணீரில் தாகங்கள்
தீராதடா நம்பிக்கை உன்
கையில் ரேகையடா
டோன்ட் ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : உன் கேள்விக்கு
விடை நீயடா மண்
பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து
வாழ்வாயடா டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி

ஆண் : டோன்ட்
ஒரி பி ஹேப்பி
டோன்ட் ஒரி பி
ஹேப்பி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.