Jump to content

விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை 

விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை 

mallya-can-be-extradited-anytime-all-legalities-done விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள மும்பைஆர்தர் சிறையில் அடைக்கப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி மறுத்துவி்ட்டது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு இருந்த 3 சட்ட வாய்ப்புகளும் முடிந்ததால் அவரை இந்தியா அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு தீவிரப்படுத்தியது.

அந்த பணிகள் அனைத்தும் முடிந்ததால் அவர் வரும் நாட்களில் எந்தநேரத்திலும் மல்லையாவுடன் சிபிஐ அதிகாரிகள் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

1591238595756.png

மதுபான ஆலை, விமான நிறுவனம் எனப் பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தபோதிலும் சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். அப்போதிருந்து ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தி்த்து வந்தார்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கெனவே லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வந்த 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்றத்தி்ல் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை கடந்த மாதம் 14-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டதால் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் விரைவுப்படுத்தினர்.

இதுகுறித்து அமலாக்கப்பிரிவின் மூத்த உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மல்லையாவை இந்தியா அழைத்துவரும் அனைத்து சட்டப்பணிகளும் முடிந்துவிட்டன. வரும் நாட்களில் அவர் எந்த நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்” எனத் தெரிவித்தார்

1591238622756.jpg

சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ மல்லையாவை நாடு கடத்தும் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. மல்லையாவுக்கு எதிராக முதன்முதலில் சிபிஐதான் வழக்குப்பதிவு செய்தது என்பதால், அவரை நாங்கள்தான் விசாரணக்கு எடுப்போம். மல்லையாவுடன் எந்நேரமும் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இந்தியா புறப்படலாம்.

மும்பைக்கு அவரை அழைத்துச் செல்கிறோம். மும்பை விமானநிலையத்தில் அவருக்கு மருத்துவப்பரிசோதனை நடக்கும் ஒருவேளை பகலில் மும்பையி்ல் விமானம் தரையிறங்கினால் முதலில் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதன்பின் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துவோம்.

லண்டன் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போதே மல்லையா இந்தியா அழைத்துச் செல்லப்பட்டால் அவருக்காக பிரத்யேகமாக மும்பை ஆர்தர் சாலைசிறை தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அனித்துள்ளோம். ஆதலால், மல்லை ஆர்தர் சிறையில்தான் அடைக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர்

மும்பை ஆர்தர் சிறையில் மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி அப்துல் கசாப், அபு சலீம், சோட்டா ராஜன், முஸ்தபா தோசா, பீட்டர் முகர்ஜி போன்றோர் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விஜய் மல்லையாவின் லண்டன் வழக்கறிஞர் இந்தத் தகவலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் “ சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சொல்வது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இ்ப்போதைக்கு மல்லையா இந்தியா செல்லமாட்டார்கள். இன்னும் தாமதமாகும்” எனத் தெரிவித்தார்

https://www.hindutamil.in/news/india/557792-mallya-can-be-extradited-anytime-all-legalities-done-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vijay-Mallya.jpg

விஜய் மல்லய்யாவை உடனடியாக இந்தியா அழைத்து வர வாய்ப்பில்லை – தூதரக அதிகாரிகள்

தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லயாவை உடனடியாக இந்தியா அழைத்துவர வாய்ப்பு இல்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மும்பைக்கு விஜய் மல்லய்யா அழைத்து வரப்பட்டதாக சில ஊடக தகவல்கள் வெளியானதையடுத்து தூதரக அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறி லண்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை இந்தியாவை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது .

அவர் இங்கிலாந்து சட்டப்படி அடைக்கலம் கோரி மனு அளித்திருந்தால் அவரை நாடு கடத்த வாய்ப்பிருக்காது என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்துவர சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் சில சட்டரீதியான நடவடிக்கைகளால் விஜய் மல்லய்யாவை அழைத்துவருவதில் மேலும் தாமதமாகியுள்ளது.

http://athavannews.com/விஜய்-மல்லய்யாவை-உடனடியா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் - இங்கிலாந்து அரசு

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் - இங்கிலாந்து அரசு

 

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

 
அவரை நாடு கடத்துமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளின்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் இருந்து வரும் அவர், பல்வேறு கட்டங்களாக மேல் முறையீடு செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடியானது. இதையடுத்து, அவரை நேற்று நாடு கடத்தி கொண்டுவரப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்படுவதாக இருந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவிதுள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்து உயர் ஆணைய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச் சிக்கல் இருக்கிறது. அதற்கு தீர்வு கண்டால்தான், அவரை நாடு கடத்தும் ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இங்கிலாந்து சட்டப்படி, இதற்கு தீர்வு காணாமல் அவரை நாடு கடத்த முடியாது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம் என்றார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/05052444/1575946/A-confidential-issue-delays-Vijay-Mallyas-extradition.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.