Jump to content

கெளுத்தி மீன் (BASA) சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Fresh Fish - Basa Fish Exporter from Chennai

ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.

ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.

புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன, மேலும், சோடியம் – 71 மிகி, பொட்டாசியம் – 340 மிகி, கார்போஹைட்ரேட்- 8 கி, விட்டமின் A, C, கால்சியம் 4 சதவீதம், விட்டமின் D – 10 சதவீதம், விட்டமின் B12 – 6 சதவீதம் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இதனை சாப்பிடலாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம், அதுபோன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதில், ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது, இந்த இரு சத்துக்களும் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது என அமெரிக்க இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, கலோரி குறைவாக உளள கெளுத்தி மீனை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில் உள்ள புரதச்சத்து, தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல் திறனை மேம்படுத்துகிறது.

அது மட்டுமன்றி புரத்தச்சது, கார்போஹைட்ரேட் போன்றவவை உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றன.

நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக விட்டமி B12 தேவை, அப்படி விட்டமின் B12 நிறைந்த உணவுகள் இல்லாமல் நீங்கள் டயட்டில் இருந்தால், உங்கள் நரம்பு செயல்பாடு பாதிக்கப்படுகிறது, 

எனவே விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீனை சாப்பிடுங்கள்.
அனைத்து மீன்களிலும் Mercury நிறைந்துள்ளது, அதிக அளவில் கர்ப்பிணி பெண்கள் Mercury எடுத்துக்கொண்டால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது, இந்த கெளுத்தி மீனில் குறைவான அளவிலேயே Mercury உள்ளது, எனவே இதனை சாப்பிடலாம்

 

https://vishwa-healthtips.blogspot.com/2016/02/blog-post_54.html

 

நேற்று Oven இல் வைத்து எடுக்க எண்ணை வந்திச்சு, நல்ல சுவையான  மீன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை வெடுக்கு மீன் எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஊரிலை வெடுக்கு மீன் எண்டு சொல்லுவினம்.

 இங்கு விற்கின்றார்கள், ஒரு வெடுக்கும் இல்லை; சிலைவேளை இதில் பலவகை இனங்கள் இருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.