Jump to content

ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்!

spacer.png

 

குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்' என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக இருக்கிறதென்று யுனிசெஃப் கருத்து தெரிவித்துள்ளது.

 

நேற்று(ஜூன் 3) இந்த அறிக்கையின் வெளியீட்டில் பேசிய இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதியான யாஸ்மின் அலி ஹக், "குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளில் உடல் ரீதியான வன்முறை (சூடுவைத்தல்; கிள்ளுதல்; அறைதல்; குச்சி, பெல்ட்கள், தண்டுகள் போன்ற சாதனங்களால் அடிப்பது) வாய்மொழி துஷ்பிரயோகம் (குற்றம் சாட்டுதல்) ; விமர்சித்தல்; கூச்சலிடுதல்; தவறான மொழியைப் பயன்படுத்துதல்; உடல் ரீதியான வன்முறைகளைக் கண்டறிதல் மற்றும் உணர்ச்சி ரீதியான அவமதிப்பு (இயக்கத்தை கட்டுப்படுத்துதல்; உணவை மறுப்பது; பாகுபாடு காட்டுதல்; பயத்தைத் தூண்டுவது) உள்ளிட்ட 30 வகைகள் இதில் அடங்கியுள்ளது" என்று அவர் விவரித்தார். அத்துடன், "எபோலா நெருக்கடி போன்ற தொற்றுநோய்களின் போது, குடும்பங்கள் சமாளிக்க போராடுகையில், சிறு குழந்தைகள் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது. இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் இந்த குடும்ப வன்முறை வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்த கொரோனா தொற்று காலத்தை குறிப்பிட்டு பேசிய யுனிசெஃப், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக நியமிக்க வேண்டிய உடனடி தேவை உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. பாதுக்காப்பு சேவைகளில் முக்கியமாக - உடல்நலம் மற்றும் சமூக நலன், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு, மாற்று பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மேற்கோள் காட்டியுள்ளது. யாஸ்மின் அலி ஹக் கூறும்போது, "இந்த சேவைகள் குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும், பெற்றோர் இல்லாதவர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

 

"சிறுமிகளும் சிறுவர்களும் மிகச் சிறிய வயதிலிருந்தே மிகவும் வித்தியாசமாக வளர்க்கப்படுகிறார்கள் என்பதையும் காட்டும் ஆய்வு வீட்டு வேலைகளின் சுமை, அன்றாட கட்டுப்பாடுகள் ஆகியவை சிறுமிகள் மீது அதிக அளவு திணிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் முக்கிய பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் தந்தைகள் மிகவும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள். இருப்பினும், ஆய்வில் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் எப்படி என்று அவர்களுக்கு தெரியவில்லை" என்கிறார் யாஸ்மின் அலி ஹக்.

மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், ராஜஸ்தான் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இந்த பெற்றோருக்கான திட்டங்களை அம்மாநிலங்கள் செயல்படுத்துவதில் கண்டறிந்தது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றலாம் என யுனிசெஃப் பரிந்துரைத்துள்ளது. மேலும், கதைசொல்லல், பாடுதல் மற்றும் குழந்தையுடன் விளையாடுவதன் மூலம் பெற்றோரின் அக்கறை அதிகளவில் குழந்தைகள் மீது ஈடுபட வழிவகுத்திருக்கிறது. இது குறித்து குறிப்பிடும் யுனிசெஃப், "இவை அனைத்தும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை" என குறிப்பிட்டுள்ளது.
 

https://minnambalam.com/entertainment/2020/06/04/22/unicef-report-says-about-indian-parenting

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.