Jump to content

“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகப்பிரிவு -

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

http://www.importmirror.com/2020/06/blog-post_41.html

 

 

Link to comment
Share on other sites

ஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிஷரூபணமாக்கப்பட்டிருக்கின்றன.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல.

எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, ‘பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்’ என்றும் குற்றஞ்சாட்டினர். அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஹூல்-மீது-அழுத்தங்கள்-பி/

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

ஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு

ஒரு மெகா கொள்ளைக்காரன் ஹுலுக்கு ஆதரவா இறங்கியுள்ளது எதை காட்டுகிறது?

Link to comment
Share on other sites

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது. 

இவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது. 

இவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம். 
 

தான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.

Link to comment
Share on other sites

1 hour ago, uthayakumar said:

தான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.

ஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

ஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.
 

எங்கு வாழ்ந்தாலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் தரப் பிரசைகள்தானே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

ஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர். 

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

நிதர்சனம்.👍

எனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர்.

அவர்,  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம்.

காட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம்.

அதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார். 

இது எனது அனுபவமும் கூட. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால ஒருத்தர் ஹுல் சுதந்திரமாய் அரசியல் செய்ய முடியாமல் இருக்குது என்று கவலைப்படுறார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 19:07, satan said:

அழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும்  அதே துரோகத்தால்   அழிக்கப்படுவார்கள். அவர்களை  அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை  உணர்ந்த  பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.  

இதுதான் சும்..சம்முக்கும் நடக்கும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.