Jump to content

பிள்ளையை தத்தெடுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை தத்தெடுத்தல்

நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).   

அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி.  நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும்  உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). 

வந்த கடித்ததில் இருந்த படம் 

20200604-143654.jpg

 

பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த  மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம்.

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.  

மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு,

அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா

20200602-085620.jpg

 

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக வரைந்துள்ளா், நீங்கள் சி்ட்னியில் இருப்பவராயின் உங்களது மகளை, Tania Wursigவின் பயிற்சிப்பட்டறையிலோ அல்லது அவரது studioவிற்கு விரும்பினால் அழைத்துசெல்லுங்கள். அவரது paintings கூடுதலாக islanders, அவர்களது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகும்.

https://www.google.com/search?q=tania+wursig&rlz=1C1CHBF_en-GBAU899AU899&oq=tania+wur&aqs=chrome.0.0j69i57j0l6.11325j0j7&sourceid=chrome&ie=UTF-8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் அண்ணை.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் உங்கள் குடும்பப் பங்களிப்பு சிறப்பானது. இவ்வுதவியால் பல சிறார்களின் வாழ்வு பயனடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மிகவும் அழகாக வரைந்துள்ளா், நீங்கள் சி்ட்னியில் இருப்பவராயின் உங்களது மகளை, Tania Wursigவின் பயிற்சிப்பட்டறையிலோ அல்லது அவரது studioவிற்கு விரும்பினால் அழைத்துசெல்லுங்கள். அவரது paintings கூடுதலாக islanders, அவர்களது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகும்.

https://www.google.com/search?q=tania+wursig&rlz=1C1CHBF_en-GBAU899AU899&oq=tania+wur&aqs=chrome.0.0j69i57j0l6.11325j0j7&sourceid=chrome&ie=UTF-8

நன்றிகள் பிரபா இணைப்பிற்கு . இல்லை நான் பேர்த்தில். அவா பாடசாலையில் மட்டும்தான் பட வரைதல் படிக்கின்றார், Tania Wursigவின் Paintings உயிரோடு உள்ள மாதிரி இருக்கின்றது👍

9 hours ago, ஏராளன் said:

வாழ்த்துகள் அண்ணை.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் உங்கள் குடும்பப் பங்களிப்பு சிறப்பானது. இவ்வுதவியால் பல சிறார்களின் வாழ்வு பயனடையட்டும்.

நன்றிகள் ஏராளன், உங்கள் பாராட்டிற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்களை மாதிரி ஒவ்வொருவர் வடிவிலும் கடவுளைக் காண்கிறேன்.
வாழ்க பல்லாண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் உங்களை மாதிரி ஒவ்வொருவர் வடிவிலும் கடவுளைக் காண்கிறேன்.
வாழ்க பல்லாண்டு.

நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம். 

 

1 hour ago, தமிழ் சிறி said:

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

நன்றி சிறி, ஆமாம் எனக்கும் தான் நேற்று வியப்பாக இருந்திச்சு, வழக்கமாக நான் கொடுக்கும் பணங்களைதான் அவா யாருக்கும் கொடுப்பா ஊருக்கு போகும்போது. இப்ப ரியூஷனில்  உழைப்பதால் அவரின் வங்கிகணக்கில் கொஞ்ச காசிருக்கு. அதை நல்ல வழியில் செலவழிக்க பழுக்கனும்.. சின்னவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணமிருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

       “இதைத் தான் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு“ என்பதோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆசீர்வதிக்கப்படடவர், வாழ்த்துக்கள் உடையார்......ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது.....!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 08:45, உடையார் said:

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். 

கனவு மெய்ப்பட வேண்டும்.

சுயநலம் நிறைந்தவர்கள் உள்ள உலகில் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை இளவயதிலேயே கொண்டுள்ள உங்கள் மகளின் கனவு ஈடேறவேண்டும்.

ஓவியம் மிக அழகாக உள்ளது.👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

கனவு மெய்ப்பட வேண்டும்.

சுயநலம் நிறைந்தவர்கள் உள்ள உலகில் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை இளவயதிலேயே கொண்டுள்ள உங்கள் மகளின் கனவு ஈடேறவேண்டும்.

ஓவியம் மிக அழகாக உள்ளது.👍🏾

நன்றி கிருபன் உங்கள் வாழ்த்திற்கு, எனது ஆசையும் அதுவே, காலம்தான் பதில் சொல்லனும். நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்துவருகின்றேன் என்னால் முடிந்தவரை.

55 minutes ago, suvy said:

நீங்கள் ஆசீர்வதிக்கப்படடவர், வாழ்த்துக்கள் உடையார்......ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது.....!   👏

நன்றி சுவி பாராட்டிற்கு, மகளிடம் சொல்கின்றேன்

 

1 hour ago, ஜெகதா துரை said:

உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி ஜெகதா துரை பாராட்டிற்கு, மகளிடம் தெரியப்படுத்துகின்றேன்

நன்றிகள் ரதி, நிழலி & நந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
பிள்ளைகள் நல்லதையே சிந்திக்கவும் செயல்படவும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.இதற்கு ஆன்மீகமும்  துணையாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடையார் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
பிள்ளைகள் நல்லதையே சிந்திக்கவும் செயல்படவும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.இதற்கு ஆன்மீகமும்  துணையாக இருக்கின்றது.

நன்றி குமாரசாமி, நீங்க சொன்னது மிகச்சரி மனைவி ரெம்ப ஆன்மீகத்தில் ஊறியவர், பிள்ளைகளை நல் வழியில் வழி நடத்தியவரும் அவரே. 

நன்றி மீரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை ஊரில் தத்தெடுக்கலாம். ஆனால் இங்கே கொண்டு வந்து வளர்ப்பதிலும் இங்கே தத்தெடுப்பதில் பாரிய பிரச்சனைகள் உள்ளன.

தத்தெடுப்பதாக சொல்லி, வீட்டு வேலைக்கும், சிறுவர் மீதான துஸ்ப்பிராயரோகத்தினை தடுப்பதற்க்கும் லைசென்ஸ் முறைமையினை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகள் எப்படி தத்து பிள்ளையினை நடத்துகின்றனர், தத்து எடுத்தவர்கள் கனிவுடன், கவனிப்புடன் நடத்துகின்றனவா. உணவு, உடை, கல்வி எல்லாம் சரிவர கிடைக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய அந்த பிள்ளையினை, பாடசாலையில் ரகசியமாக சந்திப்பது, வீட்டில் தீடீரென வந்து பார்ப்பது, அறை சோதிப்பது என்று பல சங்கடங்கள் உள்ளன.

ஒரு தமிழர் மரணத்தினை தொடர்ந்து, மனைவி மனநலம் குன்ற, அவர்கள் பிள்ளையினை கவுன்சில் எடுத்து, தத்துக்கு கொடுக்க முனைய, சோமாலி குடும்பம் தத்து எடுக்க முனைவதை கேள்வி பட்டு, அந்த தமிழரின் சகோதரி தானே அந்த மருமகனை தத்து எடுத்து, பட்ட அனுபவமே அவை.

சில பிள்ளைகள் இறந்து போனதால், அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை பெற்ற பொழுது  பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால்
சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது   பெற்றோருக்கு கிடைக்கும்
 பெரு மகிழ்ச்சி  அளவிட முடியாதது .

மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 22:03, Nathamuni said:

பிள்ளைகளை ஊரில் தத்தெடுக்கலாம். ஆனால் இங்கே கொண்டு வந்து வளர்ப்பதிலும் இங்கே தத்தெடுப்பதில் பாரிய பிரச்சனைகள் உள்ளன.

தத்தெடுப்பதாக சொல்லி, வீட்டு வேலைக்கும், சிறுவர் மீதான துஸ்ப்பிராயரோகத்தினை தடுப்பதற்க்கும் லைசென்ஸ் முறைமையினை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகள் எப்படி தத்து பிள்ளையினை நடத்துகின்றனர், தத்து எடுத்தவர்கள் கனிவுடன், கவனிப்புடன் நடத்துகின்றனவா. உணவு, உடை, கல்வி எல்லாம் சரிவர கிடைக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய அந்த பிள்ளையினை, பாடசாலையில் ரகசியமாக சந்திப்பது, வீட்டில் தீடீரென வந்து பார்ப்பது, அறை சோதிப்பது என்று பல சங்கடங்கள் உள்ளன.

ஒரு தமிழர் மரணத்தினை தொடர்ந்து, மனைவி மனநலம் குன்ற, அவர்கள் பிள்ளையினை கவுன்சில் எடுத்து, தத்துக்கு கொடுக்க முனைய, சோமாலி குடும்பம் தத்து எடுக்க முனைவதை கேள்வி பட்டு, அந்த தமிழரின் சகோதரி தானே அந்த மருமகனை தத்து எடுத்து, பட்ட அனுபவமே அவை.

சில பிள்ளைகள் இறந்து போனதால், அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
 

நன்றி நாதமுனி, அங்குதான் தத்தெடுப்பது, இங்கு கொண்டு வர பல சிக்கல்கள் இப்ப, 6-7 வருடங்களின்பின் யோசிக்கலாம்

 

On 7/6/2020 at 00:47, நிலாமதி said:

குழந்தைகளை பெற்ற பொழுது  பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால்
சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது   பெற்றோருக்கு கிடைக்கும்
 பெரு மகிழ்ச்சி  அளவிட முடியாதது .

மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற  வாழ்த்துக்கள்

நன்றி அக்கா, ஆமாம் மகிழ்ச்சியாக இருக்கு

On 7/6/2020 at 01:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர்..💐

நன்றி சகோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள் 

Link to comment
Share on other sites

உடையார், உங்களினதும் உங்கள் மகளினதும் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகளின் கனவு நிறைவேற வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள் 

நன்றி நீர்வேலியான்

4 hours ago, Kaalee said:

உடையார், உங்களினதும் உங்கள் மகளினதும் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகளின் கனவு நிறைவேற வேண்டும் .

நன்றி காளி, எங்களுக்கும் அதே ஆசைதான்

1 hour ago, Knowthyself said:

 

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்

நன்றி Knowthyself

நன்றி சுமே & பையன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ளை நினைக்க‌ பெருமையா இருக்கு உடையார் ஜ‌யா ,

உங்க‌ளுக்கும் உங்க‌ குடும்ப‌த்தின‌ருக்கும் வெள்ளை ம‌ன‌சு ,

வாழ்த்துக்க‌ள் ஜ‌யா 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

உங்க‌ளை நினைக்க‌ பெருமையா இருக்கு உடையார் ஜ‌யா ,

உங்க‌ளுக்கும் உங்க‌ குடும்ப‌த்தின‌ருக்கும் வெள்ளை ம‌ன‌சு ,

வாழ்த்துக்க‌ள் ஜ‌யா 🙏

நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகள் அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.