Jump to content

அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் துயர நிகழ்வுகள் இலங்கைக்கு பாடமா? இல்லை பாதையா? – சுரேந்திரன்

hqdefault.jpg?189db0&189db0

உலகின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் இனவாதமும் நிறவெறியும் இந்த நவீன யுகத்திலும் தொடர்வது இந்த பூகோளத்தின் சாபக்கேடேயாகும். அதன் விளைவுகளை தற்போது உலக வல்லரசான அமெரிக்கா அனுபவித்து வருகின்றது. இது ஏனைய உலக நாடுகளுக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,

‘அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜாேர்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், பொலிஸ் பிடியில் இருந்தபோது கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. இதனால் அமெரிக்காவில் நாற்பது நகரங்கள் முடங்கியுள்ளதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்களும் நாசமாகியுள்ளது.

நிற பேதத்தின் அடிப்படையில் மோதிக்கொண்ட அமெரிக்கர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்ததுடன், பல பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேற்றப்பட்ட  கறுப்பினத்தவர்களுக்கு சகல அரசியல் உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டு கறுப்பினத்தைச் சார்ந்த  பராக் ஒபாமா ஜனாதிபதியாக அமெரிக்காவை இரண்டு தவணைக்காலம் ஆட்சி செய்தும் இன்றுவரை நிறவெறி தொடர்வதும், அதன்காரணமாக இந்த கொரோனா அபாய காலத்திலும் மக்கள் போராட்டங்கள் வெடித்து அது உச்ச பாதுகாப்புடன் இருக்கும் வெள்ளை மாளிகையை மக்கள் முற்றுகையிடும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளமை,  இலங்கைபோன்ற நாடுகளின் எதிர்காலம் பற்றி  சிந்திக்க தூண்டியுள்ளது.

இதன்மூலம் அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவில் விதைக்கப்பட்ட நிறவெறி பல தசாப்தங்கள் கடந்தும் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றமை வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையை பார்க்கும் போது இலங்கை அமெரிக்காவைவிட பல மடங்கு ஆபத்தை நோக்கி செல்லப்போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது.

அபிவிருத்தி மூலம் இனப் பிரச்சினைகளை தீர்க்கலாம் அல்லது மழுங்கடிக்கலாம் என்ற இலங்கை அரச தலைவர்களின் கோட்பாடு பொய்யானது என்பதை நிரூபித்துள்ளது அமெரிக்கப் பிரச்சினை.

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ, தழிழ் மக்களுக்கு உரிமை தேவை  இல்லை, தலைவர்களுக்கே   தேவை என்ற தொனிப்பட கூறிவரும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை அமெரிக்க நிகழ்வுகள் நிரூபித்துள்ளது. 

தற்போது அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்களை கூறமுடியாத திரிசங்கு நிலையில் இலங்கை உள்ளமை எமது நாட்டின் ஜனநாயகத் தோல்வியேயாகும். இங்கு பூர்வீகக் குடிகளான தமிழ் தேசிய இன மக்களையே இன ரீதியாக வஞ்சிக்கும் அரசு அமெரிக்காவில் நிற ரீதியாக  பாதிக்கப்பட்டவர்கள் பற்றி பேசுவதற்கு என்ன தார்மீகம் உள்ளது?  என்ற கேள்வி முன்நிற்கின்றது.

சில குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் தேர்தல் வெற்றிக்காகவும் இலங்கையில் மிக தாராளமாக இனவாதம் விதைக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்கள் அளவுக்கதிகமாக இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்ப்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். இவர்களின் செயற்பாடுகளாலும் போதனைகளாலும் இனவாதம் அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டு வருவதுடன், மாநகரம் முதல் குக்கிராமம் வரை இதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளது.

இவ்வாறன நிலை தொடர்வதனால் இன்று இனவாதத்தை பரப்பும் அரசியல்வாதிகளே நினைத்தாலும் மக்களை இனவாதத்திலிருந்து மீட்டு இன நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்ல முடியாது. இந்த போக்கு இலங்கையின் வளர்ச்சியையும் அமைதியையும் தொடர்ந்து பாதிக்கும். இலங்கையை பொறுத்தவரைக்கும் இனவாதம் தற்போது தலைவரைக்கும் வெள்ளம் வந்த நிலையில் உள்ளது. தலைக்குமேல் வெள்ளம் வருவதற்கு முன் தடுத்தால் சில வேளை மீள வாய்ப்பிருக்கலாம். தவறின் இந்த நாடு இனவாத தீயினால் எரிந்து நாசமாகவேண்டும் என்பதே விதியாக இருக்கலாம்.

ஒரு நாட்டில் அந்த நாட்டினது பூர்வீக குடிகளான தேசிய இனத்தினை அந்த நாட்டினது இராணுவத்தைக் கொண்டு  தாக்கி அழித்துவிட்டு, அந்த நாளில் ஒருபுறத்தில் மக்கள் கொல்லப்பட்ட உறவுகளை நினைத்து அஞ்சலிக்க தடைவிதித்துக்கொண்டு, மறுபுறம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அடிப்படையில் அதி அபாய வலயமாக காணப்படும் தலைநகரில் சொந்த மக்களை அழித்ததை வெற்றிவிழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ள ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில், சாதாரண பெரும்பான்மையின மக்களின் மனங்களிலும் இனவாதம் தூண்டப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.

முக்கிய விடயங்களை இங்கு கருத்தில் கொள்ளுவது அவசியம்.

அமெரிக்க கறுப்பினத்தினர் குடியேற்றப் பட்டவர்கள். ஆனால் தமிழினம் இலங்கையின் பூர்வ குடியினர், தேசிய இனம். அதற்கான சகல தகுதிகளும் உரித்தும் உடையவர். 

அங்கு கறுப்பினத்தினர்க்கு  சகல உரிமைகளும் வழங்கப் பட்டுள்ளன. இங்கு இன, மொழி மற்றும் மத ரீதியாக அரசியல் யாப்பிலேயே ஒரு பூர்வ குடித் தேசிய இனம் புறந்தள்ளப் பட்டுள்ளது.  இன அங்கீகாரத்திற்கான கோரிக்கைகள் மறுக்கப் பட்டு நசுக்கப் பட்டுள்ளன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை பிரிவினை வாதமாக சித்தரிக்கப் படுகிறது. நாட்டு மக்களே விரும்பினாலும் ஒரு தமிழர் நாட்டின் தலைவராக தெரிவு செய்ய முடியாத வகையில் அமைந்துள்ளது கடுமையான இனவாதப் போக்கு.

அதற்கும் மேலாக, அமெரிக்காவில் குற்றமிழைத்த பொலிஸார் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீதி தன் கடமையை செய்துள்ளது. பொலிஸார் மண்டியிட்டு மன்னிப்பு கோரியுள்ளது. 

இலங்கையில் நிலமை என்ன? தமிழினத்திற்கு எதிரான குற்றம் புரிந்தோர், நீதி முன் நிறுத்தப் பட்டார்களா? இல்லை, மாறாக பதவி உயர்வுகள் வழங்கப் பட்டு கவுரவிக்கப் படுகிறார்கள். தண்டிக்கப் பட்டோரும் விடுவிக்கப் படுகிறார்கள், தேசிய வீரர்களாக கொண்டாடப் படுகிறார்கள். இந்த துரதிஷ்ட நிலைக்கு ஆட்சியாளர்கள் நாட்டை கொண்டு சென்றுள்ளார்கள். அநீதிக்கு எதிரான விசாரணை மறுக்கப் படுகிறது.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவரும், தமது சகோதர இனத்தின் போராட்டத்தை ஆதரித்து கரம் கோத்திருக்கிறார்கள். இங்கு தமிழ் மக்களின் தேசிய அடிப்படை உரிமைப் போராட்டத்திலோ,  அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகவோ, அல்லது அவர்களது இனப்படுகொலை, மனித உரிமை மீறல், யுத்தக் குற்றம் மீதான  விசாரணைகள் என்பவற்றிற்கு ஆதரவாக சகோதர இனமான சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் இன பேதத்தினை கடந்து கைகோர்த்து நிற்பார்கள், அல்லது நிற்பவர்களை அந்த இனம் எந்த அளவு ஏற்று கொள்கிறது என்பது இன்னும் கேள்விக்குறியே.

இந்த போக்கினால்  பல்லின மக்கள் வாழும் இலங்கைபோன்ற நாடுகளின் எதிர்காலம் பொதுவாக சிந்திக்கும் மிதவாத தலைவர்களின் கைகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், இன்று விதைக்கப்படும் இனவாத விதைகள்  விருட்சமாகி அவர்களை சவாலுக்கு உட்படுத்தும்.

தொடர்ச்சியாக பெரும்பான்மையினர் இனவாதத்தை முன்நிறுத்தி தேசிய இனமான தமிழினத்தை ஒடுக்க முற்படும்போது, மக்களை ஒன்றிணைத்து பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முயல்வதை அரச தலைவர்கள் இனவாதமாக சித்தரித்து  நாடு முழுவதும் இனவாத கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. இது இந்த நாட்டை படு பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் என்பதற்கு தற்கால அமெரிக்க சம்பவம் நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இன முறுகலால் நிர்ப்பந்திக்கப்பட்ட  முப்பது வருடகால யுத்தம் இந்த நாட்டை சின்னாபின்னமாக்கி நாட்டின் வளர்ச்சியை முப்பது வருடங்கள் பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. இதை உணராமல் இந்த யுத்தத்தில் பாடங்கற்றுக்கொண்டு, யுத்தத்திற்கு அடிகோலிட்ட காரணிகளை அறிந்தும் சரிசெய்யாமல், அவற்றை பொருட்படுத்தாமல் பயணிக்கும் இலங்கை அரசு  அமெரிக்காவிடமிருந்தேனும் பாடம் கற்றுக்கொள்ளுமா? அல்லது இதையும் கடந்து மீழா இன வேற்றுமைத் துயரப் பாதையில் இட்டுச் செல்லுமா?’ – என்றார்.

 

https://newuthayan.com/அமெரிக்காவின்-துயர-நிகழ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான்  ஞான தார தேரர்..ப்தில் சொல்லிட்டரெல்லே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.