Jump to content

கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம்

கெர்ரி ஆலன் பிபிசி மானிட்டரிங்
மருத்துவர் ஹூ வேஃபெங்Alamy மருத்துவர் ஹூ வேஃபெங்

மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா நோயுடன் போராடி வந்த மருத்துவர் ஹூ வேஃபெங், ஜூன் 2ஆம் தேதி காலமானார். சிகிச்சையின்போது, இவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போனதால், உடல் கருப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கியது. அந்த தகவல் பல ஊடகங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பின. 

இவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சீன சமூக வலைத்தளங்களில் கோபம் நிறைந்த கருத்துகள் வலம்வர இவரது மரணம் காரணமாகிவிட்டது.

யார் இந்த ஹூ?

சீனாவில், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய, வூஹான் மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய மருத்துவமனையில், சிறுநீரக நிபுணராக பணியாற்றி வந்தவர் இவர். கடந்த ஜனவரி மாதம், இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களாக, இவருக்கு வேறு ஒரு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மார்ச் மாத மத்தியில், இவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், ஏப்ரல் கடைசியிலும், மே மாதமும், இவர் பெருமூளை ரத்தக்கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

ஹூவிற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டதுBTV ஹூவிற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டது

ஏப்ரல் மாதம், சீனாவின் அரசு ஊடகம், மருத்துவர் ஹூ மற்றும் அவருடன் பணியாற்றும் இதய மருத்துவர் ஈ ஃபான் ஆகியோரின் நோய் குறித்து செய்தி வெளியிட்டது. வைரஸுக்கு எதிராக இவர்களின் போராட்டம் என்று வெளியிடப்பட்ட செய்தியால், இவர்கள் உடனடியாக பிரபலம் ஆனார்கள்.

சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வீபோவில், இவர்கள் குறித்த காணொளிகளைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். இவர்களின் நிற மாற்றத்திற்கு கல்லீரல் சரியாக வேலை செய்யாததே காரணமாக இருக்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

”கருமையான முகங்களைக்கொண்ட வூஹான் மருத்துவர்கள்” என்ற தலைப்பில் இவர்கள் பிரபலம் ஆகினார்கள். இவருமே, இந்த நோயால் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்த நிலையில், இவர்களின் இந்த போராட்டத்திற்கு மக்களிடையே பெரிய பாராட்டு கிடைத்தது. தி கம்யூனிஸ்ட் யூத் லீக், “மரணத்திற்கு எதிராக போராடும் தேவதைகள்” என்று அவர்களை பாராட்டிய அதே வேளையில், வீபோவில் இருப்பவர்களோ, மக்கள் பணியாற்றும்போது, அந்நோயின் பாதிப்பு இவர்களுக்கும் இவ்வளவு ஏற்படுகிறதே என வருத்தம் தெரிவித்தனர்.

சீன மக்களுக்காக சேவையாற்றிய பிறகு, மீதமுள்ள வாழ்க்கையிலும், இரு மருத்துவர்களும், இந்த கருமையான உடலுடன் இருக்கப்போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில், இந்த நிறம் எப்படி ஒரு ‘தழும்பாக’ அமைந்து விட்டது என்று அப்போது சமூக வலைத்தளப் பயனர்கள் கருத்துகளை பதிவிட்டனர். 

சீனா டெய்லி என்ற ஊடகம், கடந்த மே 6ஆம் தேதி இதய மருத்துவர் ஈ ஃபான் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டதாகவும், மருத்துவர் ஹூவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் தெரிவித்தது. 

 

சர்ச்சைகள்

சீனாவின், தி நேஷனல் கிளோபல் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகள், ”கொரோனா வைரசை முதலில் கண்டுபிடித்து எச்சரித்து, பிறகு அதே வைரசுக்குப் பலியான லீ வென்லியாங் பணியாற்றிய அதே மருத்துவமனையில் டாக்டர் ஹூவும் வேலை செய்தார்” என்று குறிப்பிட்டன.

கடந்த டிசம்பர் மாதம், இந்த வைரஸ் பரவல் குறித்த தகவலை வெளியில் கூறினார் மருத்துவர் லீ. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களை அவர் எச்சரித்தார்.

ஆரம்பத்தில் எச்சரிக்கை செய்ய முயன்ற லீயின் குரலை சீன அதிகாரிகள் அடக்க முயன்று அவரை கண்டித்தது, அவர் இறந்தபோது தெளிவாக தெரியவந்துவிட்டது. இது மக்களிடையே பெரிய கொதிப்பை ஏற்படுத்தியது.இந்த இரு மருத்துவர்களுக்கும் ஒருவரை ஒருவர் தெரியுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 

இவர்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பணியாற்றியுள்ளனர். வூஹானில் இருக்கும் மத்திய மருத்துவமனையில் சுமார் 4,200 பணியாளர்கள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இவர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவி இருக்குமா என்பதும் தெளியாக தெரியவில்லை. இருவருக்குமே ஜனவரி மாத மத்தியிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஆனால், குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, அந்த நேரத்திலேயே குறிப்பிட்ட மருத்துவமனையில் 68 பணியாளர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. இந்த இரு மருத்துவர்களின் மரணத்திற்கும் மக்கள் ஒரே மாதிரி கோபத்தை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர் லீயின் மரணத்திற்கான காரணம் இன்னும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. ஆனால், குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, ”அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், மனதளவில் அவர் உறுதியாக இல்லை” என்றும் எழுதி இருக்கிறது.சினோ வீபோ சமூக வலைதளத்தில், ஆயிரக்கணக்கான மக்கள், #WuhanCentralHospitalDoctorHuWeifengPassesAway என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகிறார்கள். 

மருத்துவர் ஈ ஃபான்BTV மருத்துவர் ஈ ஃபான்

ஒரு பக்கம், காலமான ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மருத்துவருக்காக, பலரும் மெழுவர்த்தியின் படத்தை பகிர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் எப்படி இறந்தார் என்று மக்கள் கேள்விகளை முன்வைப்பதோடு, அந்த மருத்துவமனையில் தலைமை அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துகளும் வலம் வருகின்றன.

”வூஹான் மத்திய மருத்துவமனையின் தலைவர்கள் எப்போது கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்?” என்று ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். ”வூஹான் மத்திய மருத்துவமனையில், கொரோனாவிற்கு பலியாகும் ஐந்தாவது ஊழியர் இவர்” என்று எழுதியுள்ளார் இன்னொருவர்.

அரசுக்கு எதிரான பத்திரிக்கையான எப்போச் டைம்ஸ் பத்திரிக்கை, “அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த அதிகாரி, கொரோனா பரவலின் ஆரம்ப காலத்தில், ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய எச்சரிக்கைகளை கொடுக்காமல், அவர்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி, பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்துள்ளார்” என்று எழுதியுள்ளது.

மருத்துவர் ஹூவின் உடல்நிலை சீராக இல்லாமல் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளாத சில சமூக வலைத்தளப் பயனர்கள், மருத்துவரின் மறைவு குறித்து நிர்வாகத்தின் கருத்து என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.வெளிப்படைத்தன்மை

மருத்துவர் ஹூவின் மரணத்தைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனையிலிருந்து வெளியாகும் தரவுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து பலர் வீபோவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.” பல நாட்களுக்கு முன்பே, வூஹானில் உள்ள நோயாளிகள் அனைவரும் வெளியேறிவிட்டார்கள்தானே? என்று ஒரு சமூக ஊடக பயனர் கேட்டுள்ளார்.

இதன்மூலம், கொரோனா பரிசோதனையின் போது, எதிர்மறை முடிவுகள் வந்திருந்தாலும், கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள வேறு நோய்களுக்காக சிலர் அங்கு இன்னும் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், வூஹானில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாக தெரிவித்தது.வூஹானில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

வூஹான் மத்திய மருத்துவமனையே இதன் முக்கிய புள்ளியாக இருந்தது.சீனாவின் ஷின்ஹூ செய்தி நிறுவனம், “வூஹானில் உள்ள மருத்துவமனைகளிலேயே இங்கு தான் பாதிப்பு அதிகம்” என்று குறிப்பிடுகிறது.

 

https://www.bbc.com/tamil/global-52914271

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.