Jump to content

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

pon.sivakumaran-300x202.jpgமுதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது.

இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய கெரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகலரும் அஞ்சலி செலுத்துமுகமாகவே சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாது. அதேவேளை உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே குறித்த அஞ்சலிசெலுத்தல் இடம்பெறும் பகுதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்று நீக்கியும் தெளிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்பவர்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பது கட்டாயமானதாகும்.

அகவணக்கத்தினைத்தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் குடும்பத்தினரும் அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்துதல் என்பன இடம்பெறும்.https://www.kuriyeedu.com/?p=259870

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவகுமாரனின் நினைவுகளை பகிர்ந்த மௌலவி – (காணொளி)

FF4EE9DC-3A0A-4BF0-B7DB-9330FF895A06.jpg?189db0&189db0

 

தியாகி பொன் சிவகுமாருடனான நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் கிளிநொச்சி மாவட்ட ஜும்மா பள்ளி தலைவர் அல்ஹாஜ் சாஹுல் ஹமீத் சாஜஹான்.

சிவகுமாரன் 1974ம் ஆண்டு ஜூன் 5ம் திகதி உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார்.

இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர் நீத்த விடுதலை போராளி.

 
Link to comment
Share on other sites

On 5/6/2020 at 03:07, nochchi said:

பொன் சிவகுமாரனின் நினைவு தினம் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 15 0

pon.sivakumaran-300x202.jpg

உருப்படியான முயற்சி!

சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டுக்கள்!!!

Link to comment
Share on other sites

பொன் சிவகுமாரன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வித்து பொன் சிவகுமாரனுக்கு நினைவேந்தல்

IMG-1646-960x720.jpg?189db0&189db0

 

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இன்று (06) அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராயில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணிக்கு முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பி ஸ்ரீகாந்தா, மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் உரும்பிராய் – வேப்பம்பிராய் வீதியில் அமைந்துள்ள மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கு அஞ்சலிசெலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பென்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

உரும்பிராய் பொதுச்சந்தையில் அமைந்துள்ள சிவகுமாரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடத்தில் 9.30 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

  • IMG-1657-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1646-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1633-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1610-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1625-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1607-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1586-1024x768.jpg?189db0&189db0
  • IMG-1593-1024x768.jpg?189db0&189db0
 
 

https://newuthayan.com/முதல்-வித்து-பொன்-சிவகு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகியே வீரவணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கூடியுள்ள அரசியல்கட்சிகளிடம் ஒரு வினா. 

 தியாகி பொன். சிவகுமாரனின் உறுதியில் ஒரு  துளியளவாவது உங்கள் உள்ளத்தில் இருக்கிறதா? வெறும் அடையாள நடவடிக்கையை விடுத்து  ஒரு காத்திரமான செயற்பாடுகளை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செய்ய முன்வருவீரகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் விக்னேஸ்வரன் தியாகி சிவகுமாரனின் உருவச்சிலைக்கு அஞ்சலி

தமிழ் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் முதல் வித்தாகிய தமிழ் மாணவர் பேரவையின் முன்னோடியான பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினமான இன்று சனிக்கிழமை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், சிற்பரன், மீரா அருள்நேசன், ரட்ணகுமார் அகியோருடன் EPRLF கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோருடன் பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் திருகோணமலையில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான ரூபன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் மற்றும் தமிழர் சுயாட்சி கழகத்தை சேர்ந்த அனந்தி சசிதரன் ஆகியோர் காலை 8.30 மணிக்கு தியாகி சிவகுமாரனின் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

TMK Sivakumaran (7)TMK Sivakumaran (5)TMK Sivakumaran (4)TMK Sivakumaran (3)TMK Sivakumaran (1)

 

http://www.samakalam.com/செய்திகள்/நீதியரசர்-விக்னேஸ்வரன்-த/

Link to comment
Share on other sites

On 6/6/2020 at 12:02, உடையார் said:

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்பிகளான மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலிசெலுத்தினர்.

இவர்களெல்லாம் சிவகுமாரனுக்கு சல்யூட் அடிக்கிறது இதுதான் வாழ்க்கைல முதல் தரம்!
தேர்தல் பண்ணுற திருவிளையாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்திட்ட மாவீரனுக்கு நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.