Jump to content

மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை

mathisutha.jpg

அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது.

கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன். முதலில் மதி சுதாவின் முக்கியமான குறும்படத்துடன் தொடங்குவது சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.

மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ ஆழமான அனுபவத்தை அளித்து நினைவில் நிற்கும் படமாக உருக்கொண்டுள்ளது. பொதுவாகக் குறும்படங்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஒரு முழுநீளப் படத்துக்கான உள்ளடக்கத்தைக் குறும்பட உருவில் அடைக்க நினைப்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றி முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் அத்தகைய முயற்சிகள் சீராக ஆரம்பித்து அவசர கதியில் முடியும். அல்லது நேர்க்கோட்டில் சென்ற கதையாடல் தனது லயமிழந்து துரித கதியில் வெட்டுண்டு சடாரென்று முடியும். துண்டு துண்டான அதன் அமைப்பு கோர்வையழகியலைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கமோ அரசியலோ அன்றி அமைந்திருக்கும்.

மதிசுதா என்னுடைய அத்தகைய (முன்)முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மூன்று தலைமுறைகளை முன்வைத்து நகரும் கதையாடலைத் தேர்ந்த கதைசொல்லியாகச் செதுக்கி, அற்புதமான குறும்படத்தின் மூலம் போரின் பின்னணியில் தமிழருக்கு இருந்த உறுதியையும் போராட்டத்திலிருந்த பெருமையையும் விரித்தெடுக்கிறார்.

24.jpg

மதி சுதாவின் இயக்கத்தில் முல்லை ஜேசுதாசன், கமலாராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜன், தர்சன் போன்றோரின் நடிப்பு இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் கலைஞர்களின் இயல்பான ஆற்றலுக்குச் சான்றாக இருப்பதுடன் குறும்படம் எனும் சட்டகம் அத்தகைய அரிய கலைஞர்களின் திறமையை ஆவணப்படுத்தும் வெளியாக இருப்பதின் மகத்துவத்தையும் சொல்கிறது. ஜேசுதாசன், கமலாராணி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு மகுடம். ஜேசுதாசன் தனது பேரனுடன் பழகும் பாங்கு தீவுகளில் வாழும் மக்களுக்கு இயற்கையுடன் இருக்கும் இயல்பான உறவைத் திரையில் கவிதையாக வடிக்க உதவுகிறது.

வெடிமணியமாகத் தமிழ்ச் சமூகத்தின் அன்பையும் ஆணாதிக்கத்தையும் ஒருசேர உருவகித்திருப்பதில் மதி சுதாவின் எழுத்தும் இயக்கமும் மிளிர்கின்றன. எசுத்தரம்மாவாக கமலாராணி வெடிமணியத்தின் சாதித்திமிருக்கு நறுக்கென்று தனது சொல்லால் வெடிவைப்பதும், கணவனாகக் கைப்பிடித்தவனின் வயோதிகத்தில் அவனுக்கு உறுதுணையாக இருப்பதும் தேர்ந்த இயக்குநராக மதி சுதா நடிகர்களைக் கையாள்வதிலுள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் காட்சிகளாகப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

தனது கடைசி காலகட்டத்தில் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு தாத்தாவை மையப்படுத்தித் தொடங்கும் கதையாடல் அவரருகிலிருந்து முன்னர் அவரிடமிருந்து விலகிச் சென்ற மகன் வந்து பராமரிப்பது மற்றும் அவரது மனைவியும் மருமகளும் காலமாகிவிட்டதை அவரது கட்டிலின் மேல் சுவரில் பெரிய சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் நிழற்படங்கள் மூலம் சொல்லும் மதி சுதா அந்த மருமகள் போரின் குண்டுவீச்சினால் இறந்துவிட்டதையும் நமக்குச் சொல்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே வெடிமணியத்தின் குழந்தையைப் பாதுகாக்க எசுத்தரம்மா இரண்டாம் தாரமாக அவ்வீட்டில் வந்து குடிபுகுந்தது நமக்கு விவரிக்கப்படுகிறது.

அக்காட்சியின் தனித்துவம் என்னவென்றால் அது வெடிமணியத்தின் உயர் சாதிவெறியை அடிக்கோடிடுகிறது. அத்தகைய வன்முறை நிறைந்த இருண்மையான காலகட்டங்களில்கூடத் தமிழனது ரத்தத்தில் ஓடும் சாதியெனும் விஷம் / புற்றுநோயை மதி சுதா இயல்பாக ஆயினும் ஆழமாகச் சுட்டிச் செல்கிறார். கதாநாயகன் தமிழ்ச் சூழலிலுள்ள சாதிய, ஆணாதிக்கத் திமிருக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். அதற்கு எதிர்வினையாக எசுத்தரம்மா தனக்குக் குழந்தையைப் பராமரிக்க ஆள் வேண்டிய தருணத்தில் சாதி பற்றிய திமிர் வெடிமணியத்திற்கு எங்கு போச்சென்று வினவி வெடிமணியத்தின் கையாலாகாத்தனத்தையும் சூழ்நிலைக்கேற்ற சூழ்ச்சியையும் தாக்கி தான் கொண்டுவந்த சூடான தேநீரைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். மதி சுதா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவரது தேர்ந்த இயக்கத்தைப் படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது.

வயோதிக காலத்தில் வெடிமணியம், எசுத்தரம்மாவின் உறவின் இயல்பான நெருக்கம், வெடிமணியம் இவ்வுலகை விட்டுப் பிரியக் காத்திருக்கும் காலகட்டத்துடன் அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய இணைவிற்கும் பிரிவிற்கும் ஊடாக வெடிமணியத்திற்குத் தனது பேரனின் மீதான அன்பும் வேட்டையாடுவதிலிருக்கும் ஈடுபாடும் கவிதைபோல ஓடுகின்றன. துப்பாக்கியைப் பராமரிப்பதிலிருந்து வேட்டையாடக் “குறி” பார்ப்பது, இலக்கைத் தப்பவிட்டால் மீண்டும் தன் கண்களை மூடி விரித்து ஆயத்தப்படுத்திக்கொள்வது போன்ற தாத்தாவிற்கும் பேரனுக்குமான வெளிப்புறங்களிலேயே சட்டகப்படுத்தப்பட்டிற்கும் இயல்பான இணக்கமான உறவு தமிழ் சினிமாவிற்குப் புதிது.

அத்தகைய வேட்டையாடுவதில் வெடிமணியத்திற்கு இருந்த தேர்ச்சியைப் பெறுவது அவரது பேரனின் காலகட்டத்தில் (2007இல்) தன்னை அரசு எனும் இன அழிப்பு இயந்திரத்துடைய வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் துணிந்து எதிர்க்கவும் மட்டுமல்லாது, தனது தாத்தாவின் அல்லாடிக்கொண்டிருந்த உயிர் இவ்வுலகை விட்டு இனிதே பிரியவும் வகை செய்கிறது.

நல்லதொரு சிறுகதையைப் போல மதி சுதாவின் படத்தின் முடிவும் கச்சிதமாக அமைந்துள்ளது. சிறுகதையின் இறுதித் தருணம் முக்கியமானது. முடிவு என்பது எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கலாம் அல்லது கவித்துவ அல்லது தத்துவ உச்சமாக இருக்கலாம். அல்லது மதி சுதாவின் இப்படத்தைப் போல அலகுகளின் நுண்ணிய ஒத்திசைவாக இருக்கலாம். போரின் ஈரமற்ற பேரிரைச்சலின் பின்னணியில் அன்பின் ஏக்கத்திற்கான ஆன்மாவின் பெருமூச்சாகவும் இருக்கலாம்!

நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு, இசையமைப்பு எல்லாம் காத்திரமாக இணைந்து மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ என்ற இக்காண்பியல் மொழிக் கவிதையைத் தமிழ்க் குறும்பட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக்குகின்றன. திரைக்கதையில் கவனம் செலுத்தினால் விரிந்த ஒரு காலகட்டத்தில் மூன்று தலைமுறையினரை வைத்துப் பின்னப்பட்ட கதையை லாவகமாகத் தேவையான காட்சிகளின் கோர்வையாகச் சிக்கன சுருக்க அழகியலின் ஆற்றலைக் கொண்டு ஒரு அருமையான குறும்படமாக உருவாக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் மதி சுதா குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

படத்தின் தொடுப்பு இதோ –

http://www.vanakkamlondon.com/mathisutha-04-06-2020/

டிஸ்கி :

இவர் நம்முடைய கருத்துக்கள உறவா ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதிசுதாவின்

டிஸ்கி :

இவர் நம்முடைய கருத்துக்கள உறவா ..?

ஆமாம், நன்றி பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் புர‌ட்சி , ஆனால் அவ‌ர் பெரிசா யாழில் எழுதுவ‌தில்லை , 

Link to comment
Share on other sites

  • 1 year later...
On 5/6/2020 at 10:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை

http://www.vanakkamlondon.com/wp-content/uploads/2020/06/mathisutha.jpg

அமெரிக்காவின் மெக்சிக்கன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பதுடன் அண்மையில் இயக்குனர் மிஸ்கினை வைத்து ”கட்டுமரம்” திரைப்படத்தை மட்டுமல்லாது வேறு திரைப்படங்களை இயக்கியதுடன் திரைத்துறை சார்ந்த பல நூல்களை எழுதியுமுள்ள இயக்குனர் திரு சொர்ணவேல் அவர்கள் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் பற்றி ஒரு கட்டுரையை மின்னம்பலம் இதழுக்கு எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வணக்கம் லண்டன் மீள் பிரசுரம் செய்கிறது.

கடந்த ஏழு வருடங்களாக தமிழீழக் குறும்படங்களை முக்கியமான திரைப்பட வெளிகளில் நண்பர்கள் கிருஷ்ணராஜா மற்றும் ரதன் வாயிலாகக் கண்டுவருகிறேன். எனக்குக் காணக் கிடைத்த படங்களில் சில படங்களை இங்கு ஆராய்கிறேன். முதலில் மதி சுதாவின் முக்கியமான குறும்படத்துடன் தொடங்குவது சரியாக இருக்குமென எண்ணுகிறேன்.

மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ ஆழமான அனுபவத்தை அளித்து நினைவில் நிற்கும் படமாக உருக்கொண்டுள்ளது. பொதுவாகக் குறும்படங்களுக்கு ஏற்றவாறு உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஒரு முழுநீளப் படத்துக்கான உள்ளடக்கத்தைக் குறும்பட உருவில் அடைக்க நினைப்பதிலுள்ள சிக்கல்களைப் பற்றி முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் அத்தகைய முயற்சிகள் சீராக ஆரம்பித்து அவசர கதியில் முடியும். அல்லது நேர்க்கோட்டில் சென்ற கதையாடல் தனது லயமிழந்து துரித கதியில் வெட்டுண்டு சடாரென்று முடியும். துண்டு துண்டான அதன் அமைப்பு கோர்வையழகியலைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கமோ அரசியலோ அன்றி அமைந்திருக்கும்.

மதிசுதா என்னுடைய அத்தகைய (முன்)முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மூன்று தலைமுறைகளை முன்வைத்து நகரும் கதையாடலைத் தேர்ந்த கதைசொல்லியாகச் செதுக்கி, அற்புதமான குறும்படத்தின் மூலம் போரின் பின்னணியில் தமிழருக்கு இருந்த உறுதியையும் போராட்டத்திலிருந்த பெருமையையும் விரித்தெடுக்கிறார்.

24.jpg

மதி சுதாவின் இயக்கத்தில் முல்லை ஜேசுதாசன், கமலாராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜன், தர்சன் போன்றோரின் நடிப்பு இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் கலைஞர்களின் இயல்பான ஆற்றலுக்குச் சான்றாக இருப்பதுடன் குறும்படம் எனும் சட்டகம் அத்தகைய அரிய கலைஞர்களின் திறமையை ஆவணப்படுத்தும் வெளியாக இருப்பதின் மகத்துவத்தையும் சொல்கிறது. ஜேசுதாசன், கமலாராணி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு மகுடம். ஜேசுதாசன் தனது பேரனுடன் பழகும் பாங்கு தீவுகளில் வாழும் மக்களுக்கு இயற்கையுடன் இருக்கும் இயல்பான உறவைத் திரையில் கவிதையாக வடிக்க உதவுகிறது.

வெடிமணியமாகத் தமிழ்ச் சமூகத்தின் அன்பையும் ஆணாதிக்கத்தையும் ஒருசேர உருவகித்திருப்பதில் மதி சுதாவின் எழுத்தும் இயக்கமும் மிளிர்கின்றன. எசுத்தரம்மாவாக கமலாராணி வெடிமணியத்தின் சாதித்திமிருக்கு நறுக்கென்று தனது சொல்லால் வெடிவைப்பதும், கணவனாகக் கைப்பிடித்தவனின் வயோதிகத்தில் அவனுக்கு உறுதுணையாக இருப்பதும் தேர்ந்த இயக்குநராக மதி சுதா நடிகர்களைக் கையாள்வதிலுள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் காட்சிகளாகப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

தனது கடைசி காலகட்டத்தில் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு தாத்தாவை மையப்படுத்தித் தொடங்கும் கதையாடல் அவரருகிலிருந்து முன்னர் அவரிடமிருந்து விலகிச் சென்ற மகன் வந்து பராமரிப்பது மற்றும் அவரது மனைவியும் மருமகளும் காலமாகிவிட்டதை அவரது கட்டிலின் மேல் சுவரில் பெரிய சட்டத்தில் மாட்டப்பட்டிருக்கும் நிழற்படங்கள் மூலம் சொல்லும் மதி சுதா அந்த மருமகள் போரின் குண்டுவீச்சினால் இறந்துவிட்டதையும் நமக்குச் சொல்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே வெடிமணியத்தின் குழந்தையைப் பாதுகாக்க எசுத்தரம்மா இரண்டாம் தாரமாக அவ்வீட்டில் வந்து குடிபுகுந்தது நமக்கு விவரிக்கப்படுகிறது.

அக்காட்சியின் தனித்துவம் என்னவென்றால் அது வெடிமணியத்தின் உயர் சாதிவெறியை அடிக்கோடிடுகிறது. அத்தகைய வன்முறை நிறைந்த இருண்மையான காலகட்டங்களில்கூடத் தமிழனது ரத்தத்தில் ஓடும் சாதியெனும் விஷம் / புற்றுநோயை மதி சுதா இயல்பாக ஆயினும் ஆழமாகச் சுட்டிச் செல்கிறார். கதாநாயகன் தமிழ்ச் சூழலிலுள்ள சாதிய, ஆணாதிக்கத் திமிருக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். அதற்கு எதிர்வினையாக எசுத்தரம்மா தனக்குக் குழந்தையைப் பராமரிக்க ஆள் வேண்டிய தருணத்தில் சாதி பற்றிய திமிர் வெடிமணியத்திற்கு எங்கு போச்சென்று வினவி வெடிமணியத்தின் கையாலாகாத்தனத்தையும் சூழ்நிலைக்கேற்ற சூழ்ச்சியையும் தாக்கி தான் கொண்டுவந்த சூடான தேநீரைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார். மதி சுதா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவரது தேர்ந்த இயக்கத்தைப் படத்தின் தொடக்கக் காட்சிகளிலேயே நமக்குச் சொல்லிவிடுகிறது.

வயோதிக காலத்தில் வெடிமணியம், எசுத்தரம்மாவின் உறவின் இயல்பான நெருக்கம், வெடிமணியம் இவ்வுலகை விட்டுப் பிரியக் காத்திருக்கும் காலகட்டத்துடன் அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய இணைவிற்கும் பிரிவிற்கும் ஊடாக வெடிமணியத்திற்குத் தனது பேரனின் மீதான அன்பும் வேட்டையாடுவதிலிருக்கும் ஈடுபாடும் கவிதைபோல ஓடுகின்றன. துப்பாக்கியைப் பராமரிப்பதிலிருந்து வேட்டையாடக் “குறி” பார்ப்பது, இலக்கைத் தப்பவிட்டால் மீண்டும் தன் கண்களை மூடி விரித்து ஆயத்தப்படுத்திக்கொள்வது போன்ற தாத்தாவிற்கும் பேரனுக்குமான வெளிப்புறங்களிலேயே சட்டகப்படுத்தப்பட்டிற்கும் இயல்பான இணக்கமான உறவு தமிழ் சினிமாவிற்குப் புதிது.

அத்தகைய வேட்டையாடுவதில் வெடிமணியத்திற்கு இருந்த தேர்ச்சியைப் பெறுவது அவரது பேரனின் காலகட்டத்தில் (2007இல்) தன்னை அரசு எனும் இன அழிப்பு இயந்திரத்துடைய வன்முறையிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் துணிந்து எதிர்க்கவும் மட்டுமல்லாது, தனது தாத்தாவின் அல்லாடிக்கொண்டிருந்த உயிர் இவ்வுலகை விட்டு இனிதே பிரியவும் வகை செய்கிறது.

நல்லதொரு சிறுகதையைப் போல மதி சுதாவின் படத்தின் முடிவும் கச்சிதமாக அமைந்துள்ளது. சிறுகதையின் இறுதித் தருணம் முக்கியமானது. முடிவு என்பது எதிர்பார்க்காத திருப்பமாக இருக்கலாம் அல்லது கவித்துவ அல்லது தத்துவ உச்சமாக இருக்கலாம். அல்லது மதி சுதாவின் இப்படத்தைப் போல அலகுகளின் நுண்ணிய ஒத்திசைவாக இருக்கலாம். போரின் ஈரமற்ற பேரிரைச்சலின் பின்னணியில் அன்பின் ஏக்கத்திற்கான ஆன்மாவின் பெருமூச்சாகவும் இருக்கலாம்!

நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையமைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, தொகுப்பு, இசையமைப்பு எல்லாம் காத்திரமாக இணைந்து மதி சுதாவின் ‘வெடிமணியமும் இடியன் துவக்கும்’ என்ற இக்காண்பியல் மொழிக் கவிதையைத் தமிழ்க் குறும்பட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக்குகின்றன. திரைக்கதையில் கவனம் செலுத்தினால் விரிந்த ஒரு காலகட்டத்தில் மூன்று தலைமுறையினரை வைத்துப் பின்னப்பட்ட கதையை லாவகமாகத் தேவையான காட்சிகளின் கோர்வையாகச் சிக்கன சுருக்க அழகியலின் ஆற்றலைக் கொண்டு ஒரு அருமையான குறும்படமாக உருவாக்க முடியும் என்று நமக்கு நம்பிக்கையை அளித்திருக்கும் மதி சுதா குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

படத்தின் தொடுப்பு இதோ –

http://www.vanakkamlondon.com/mathisutha-04-06-2020/

டிஸ்கி :

இவர் நம்முடைய கருத்துக்கள உறவா ..?

மிக்க நன்றிகள்...

வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் யாழ் களத்துக்கு அடிக்கடி வருவேன். பிற்பட்ட காலத்தில் கால கையிருப்பு பிரச்சனையால் அவ்வப்போது மட்டுமே வருவதுண்டு. 

ஆனால் எனது புதிய திரைப்படத்துக்கு யாழ் கருத்துக்கள உறுவுகளும் முதலிட்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 07:24, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதிசுதாவின் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” – ஒரு பார்வை

இவர் நம்முடைய கருத்துக்கள உறவா ..?

இணைப்புக்கு நன்றி.

விமர்சனத்தையும் குறும்படத்தையும் ஒன்றாக இணைத்துள்ளமை ஒருசேர இரண்டையும் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது. தன்பேரனுக்குக் கிடைத்த பாராட்டுச் செய்தியோடு அவர் உயிர்பிரியும் அந்த நேரம் நெஞ்சில் ஏதோஒருவித சோகம். மனதைக் கனக்கவைத்து ஊர்நினைவுகளுக்குச் சுடரேற்றுகிறது. 

போர் விடுதலையைத் தந்தது
அழிவுகளையும் தந்தது
முகமறியதோரையும் 
நேசிக்க வைத்தது
நல்ல கலைஞர்களையும் தந்தது
நல்ல விளைவுகளை உருவாக்கிடும்
நல்ல தலைவர்கள்; இல்லை இல்லை
வழிகாட்டும் நல்ல மனிதர்களைத் 
தரவில்லையென்பதே சாபமானது!

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.