Jump to content

சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ?

- சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. )

இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர்.

தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர்.

missing-person1.jpg

எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம்  18 மே 2009  அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்` அல்லது `கையளிக்கப்பட்டனர்.

உறவினர்களும் தெரிந்தவர்களும் அவர்களைக் கடைசியாகப் பார்த்த தருணம் அதுவே. அதன் பிறகு அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இறுதிப் போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்னர் இலங்கை இராணுவம், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் போர் வலையத்தில் சிக்கியுள்ள மக்கள் அரசு முன்னெடுக்கும் `மனிதாபிமான நடவடிக்கையின்` மூலம் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள `பாதுகாப்பான பகுதிக்கு` வந்துவிடுமாறு தொடர்ந்து அறிவித்தல் விடுத்தனர்.

சாட்சியங்கள் இன்றி நடைபெற்ற அந்தக் `கையளிப்பு` நிகழ்வின் போது, கையளித்தவர்களும் அவர்களைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் வட்டுவாகல் பாலம் போன்ற இடங்கள் உறவுகள் ஒருவரையொருவர் பார்த்த கடைசித் தருணத்துக்கு மௌனமான சாட்சியாக உள்ளது.

IMG-4e9a2cd50f8e8f86931689532266d5f0-V.j

தமது உறவுகள் காணாமல் போய், அவர்களைத் தேடும் முயற்சிகளை இன்னும் கைவிட தாய் ஒருவர், மிதவாத சிங்கள மக்கள், முற்போக்குவாதிகள், சிங்கள ஊடகங்கள் ஆகியோரிடம்- தமது முயற்சிகளுக்கு உதவி உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட- உதவுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பாதுகப்புக் காரணங்களுக்காக அவரது பெயரை வெளியிடவில்லை.

வெறுப்புணர்வுக் கொள்கை

காணாமல் போனவர்களை கண்டறிய தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், கடிதத்தை எழுதிய அந்தத் தாய் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வீதிப் போராட்டங்களின் முன்னணியில் இருந்தவர். இப்போதும் அதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.

அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் முன்னரும் இப்போதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சிங்கள ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் மனசாட்சிகள் தட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் உண்மையை உணர்ந்து தொடர்ச்சியாக வந்த ஆட்சிகள் முன்னெடுத்த `வெறுப்புணர்வுக் கொள்கைக்கு` எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார்.

``அப்படியான மனமாற்றத்தின் மூலம் அவர்கள் எம்மை உடன்பிறந்தோராகப் பாவித்து, எமக்காகப் போராட முன்வரும் சூழலொன்று ஏற்பட வேண்டும் என்று`` சிங்கள மக்களுக்கு விடுத்துள்ள உருக்கமான அந்த வேண்டுகோளில் கோரியுள்ளார்.

IMG-7bd2a35d1591f81b793694be145777bb-V.j

இலங்கை அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் இணைந்து முன்மொழிந்த தீர்மானத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், போர் முடிந்து அரச படைகளிடம் தமது உறவுகளை கையளித்து பதினோரு ஆண்டுகளாகும் ஆகும் நிலையிலும் அவரது உருக்கமான அந்த வேண்டுகோள் வந்துள்ளது.

``தேசிய நல்லாட்சி அரசாங்கம்`` தம்மைக் கூறிக்கொண்ட முந்தைய அரசு நம்பகத்தன்மை வாய்ந்ததொரு விசாரணையை சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுத்து, அதன் மூலம் இறுதிகட்டப் போரில் இடம்பெற்றவகைகளுக்கு பொறுப்புக்கூற வழிசெய்யும் தீர்மானமொன்றை ஐ நாவின் இணைந்து முன்மொழிந்தது.

தற்போது வெளிநாட்டு உறவுகள் அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தன முந்தைய அரசாங்கம், ``அப்போது உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இணக்கப்பாட்டு வழிமுறைகளைப் புறந்தள்ளி, அதுவரை இல்லாத வகையில், நாடுகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணாக, நாட்டில் நிலவும் சூழல் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 ஐ இணைந்து முன்மொழிந்தது`` என்று விமர்சித்துள்ளார்.

IMG-63dacc754b426aa8d8a7b56374d61365-V.j

எனினும் கடந்த ஒரு தசாப்தமாக, எந்த அரசும், `சரணடைந்த, காணாமல் போன அல்லது கையளிக்கப்பட்ட நபர்கள்` அல்லது வேறு எந்தப் பெயரில் அதை அழைத்தாலும், பாதிக்கப்பட்டோர்களுக்கு அவர்கள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

போராட்டங்களில் உயிரிழந்த எழுபது பேர்

இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை, கடந்த பத்தாண்டுகளாக உறவுகளைத் தேடும் போராட்டங்களில் குறைந்தது 70 பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.

அந்தத் தாயின் வேண்டுகோள் கடிதத்தின், நகலை நாம் கண்டோம். அதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம்-ஓ எம் பி- எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளூர் விசாரணைகளை முன்னெடுப்பதாக ``சர்வதே சமூகத்தை ஏமாற்றியுள்ளன`` என்று சாடியுள்ளார்.

IMG-ab8bae333e6fd905048f5f0c20a7d2d1-V.j

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஓ எம் பி அமைப்பு, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்களைக் கண்டுபிடித்து, குடும்பத்தாருக்குத் தகவல்களை தெரிவித்து, இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆணையைக் கொண்டிருந்தது. எனினும் இதுவரை அந்த அலுவலகத்தின் மூலம் காத்திரமான முடிவுகள் ஏதும் ஏற்படவில்லை.

கடந்த பத்தாண்டுகளாக, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று காணாமல் போனவர்களில் ஐந்து பேரைக் கூட இதுவரை கண்டுபிடிக்காத ஓ எம் பி அமைப்பின் மீது நம்பிக்கையிழந்து விட்டதாகக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

IMG-1043ff6da249a1bf73ad6ffcea94f320-V.j

``தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசச் சமூகம் கூற வைக்க வேண்டும் அல்லது அவர்களே தாமாக வந்து உண்மையை வெளியிட வேண்டும்``

ஆனால் இலங்கை அரசோ, ஐ நா தீர்மானம் 30/1 `தேசிய நலனை குறைத்து மதிப்பிட்டு, தேசியப் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து, தேசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உதாசீனப்படுத்தியது`` என்று கூறுகிறது.

``நாட்டில் 30 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் மற்றும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டு குறித்தும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன``

IMG-9065151524e628b6d9139676bc8c3edc-V.j

காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன, காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தத் தாயின் உருக்கமான கடிதம் கூறுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அரசியல் கட்சிகள், காணாமல் போன உறவுகளை மீட்கவோ அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தரவோ போதிய அளவுக்குச் செய்யவில்லை என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது.

ஐ நா மற்றும் இதர அமைப்புகளுடன் தாங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புவதாக இலங்கை அரசு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதில் மனித உரிமைகள் கடப்பாடுகளும் அடங்கும்.

எனினும் கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது, காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைத் தெரிவிப்பதற்கு இலங்கை அரசுக்கு அரசியல் உறுதிப்பாடோ அல்லது முன்னுரிமையோ இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி வலிந்து காணாமல் ஆக்கப்படுவது குற்றமாக்கப்பட்டுள்ளது.

ஊடகச் சுதந்திர அட்டவணையில் இலங்கை மிகவும் கீழேயுள்ள நிலையில், சிங்கள ஊடகங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் வேதனை மற்றும் நிலையைச் தென்னிலங்கை மக்களுக்கு காழ்ப்புணர்ச்சியின்றி எடுத்துக் கூற சிங்கள ஊடகங்கள் முன்வருமா?

அதன் மூலம் சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி, தங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெற்று இன்று நாட்டையும் அரசையும் ஆளும் ஆட்சியாளர்களிடமிருந்து- போரினால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை தேடி அலைந்து-சொல்லொனாத் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு-தமது உறவுகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க உதவுவதற்கு அவர்கள் முன்வருவார்களா?

 

https://www.virakesari.lk/article/83415

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.